யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

ஞாயிறு, 19 மே, 2013

கறவை மாடு வைத்திருப்பவரே தீவனப் பயிர் வளர்க்கலாம்


தமிழகத்தில் பால் தேவை எப்போதும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்போதையை பால் உற்பத்தி, நமது தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்வதாக இல்லை.
பால் தட்டுப்பாடுதான் பல்வேறு கலப்படங்களுக்கும், விலையேற்றத்துக்கும் மூலகாரணம். எனவே பால் உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் கலப்படமற்ற, சுத்தமான பாலை நியாயமான விலையில் பெறமுடியும்.
பால் உற்பத்தியைப் பெருக்க தமிழகத்தில் இன்னமும் நிறைய கறவை மாடுகள் வளர்க்கப்பட வேண்டும். நிறைய மாட்டுப் பண்ணைகள் உருவாக வேண்டும். எனவே தான் தமிழக அரசு மாடு வளர்ப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இலவசமாகவும் மானியத்திலும் கறவைமாடுகள் வழங்கப்படுகின்றன. மாடுகள் அதிக அளவில் வளர்க்க மேய்ச்சல் நிலம் தேவை. ஆனால் மேய்ச்சல் நிலங்கள் எல்லாம் காணாமல் போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
இதனால் மாடுகளுக்கான தீவனப் புல் கிடைப்பதில் பெருமளவு தட்டுப்பாடு நிலவி வருகிறது. கறவை மாடுகளுக்கு கால் பங்கு வைக்கோல், அரைப் பங்கு பசுந் தீவனம், கால் பங்கு கடைகளில் கிடைக்கும் ஏனைய தீவனங்கள் கொடுத்தால் மாடுகள் ஆரோக்கியமாகவும், நிறைய பாலும் கறக்கும். பராமரிப்புச் செலவும் குறையும் என கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எனவே பால் உற்பத்தியில் தீவனப் பயிர்களின் பங்கு பெரிதும் அங்கம் வகிக்கிறது. 5 மாடுகளுக்கு மேல் வைத்து இருப்பவர்கள் நிச்சயம் தீவனப் பயிர்களை வளர்க்க வேண்டும். அல்லது விலைகொடுத்து வாங்கவேண்டும் என்கிறது கால்நடை பராமரிப்புத்துறை.
வீட்டுக்கு 2 மாடுகள் வைத்திருக்கும் ஐவர் சேர்ந்து, தீவனப் பயிர்களை விளைவிக்கலாம். தீவனப் பயிர்கள் வளர்க்க, கால்நடை பராமரிப்புத் துறை நிறைய மானியம் வழங்குகிறது.

தீவனப்பயிர்கள்

தீவனப் பயிர்களில் முக்கியமானவை
  • தீவன மக்காச் சோளம்
  • தீவனச் சோளம்
  • தீவனக் கம்பு
  • கினியா புல்
  • தீவன தட்டைப் பயறு
  • கம்பு நேப்பியர் புல்
ஆகியவை.

தீவன மக்காச் சோளம்

தீவன மக்காச் சோளத்தில் ஆப்பிரிக்கன் உயரம், டெக்கான், கங்கா, கோ1 என்ற ரகங்கள் உள்ளன. இவற்றுக்கு உரத்தேவை ஹெக்டேருக்கு 40 கிலோ யூரியா, 64 கிலோ சூப்பர் பாஸ்பேட், 16 கிலோ பொட்டாஷ். ஹெக்டேருக்கு 16 கிலோ விதை தேவை. விதைத்த 3-ம் நாள் தண்ணீர், பின்னர் வாரம் ஒரு முறை நீர்பாய்ச்சினால் போதும். 60-வது நாள் முதல் பூக்கும் வரை தொடர்ந்து அறுவடை செய்யலாம்.


தீவனச் சோளம்


தீவனச் சோளம் கோ 11, கோ 27 என்ற ரகங்கள் கிடைக்கின்றன. இவற்றுக்கு ஹெக்டேருக்கு 12 கிலோ யூரியா, 16 கிலோ சூப்பர் பாஸ்பேட், 8 கிலோ பொட்டாஷ், மேலுரமாக 30-வது நாளில் 12 கிலோ யூரியா இட வேண்டும். விதைத் தேவை ஹெக்டேருக்கு 16 கிலோ. விதைத்த உடன் முதல் தண்ணீரும், 3-ம் நாளில் 2-வது தண்ணீர், பின்னர் 10 நாள்களுக்கு ஒருமுறை நீர்ப் பாய்ச்சினால் போதும். 60 முதல் 65 நாளில் அறுவடை செய்யலாம்.

தீவனக் கம்பு


தீவனக் கம்பு கோ 8 என்ற ரகம் கிடைக்கிறது. இதற்கு ஹெக்டேருக்கு அடியுரமாக 12 கிலோ யூரியா, 96 கிலோ சூப்பர் பாஸ்பேட், 8 கிலோ பொட்டாஷ், மேலுரமாக 21 கிலோ யூரியா இட வேண்டும். விதை அளவு ஏக்கருக்கு 4 கிலோ. 10 முதல் 15 நாள்களுக்கு ஒருமுறை நீர்ப் பாய்ச்சினால் போதும். 40 முதல 45 நாள்களில் அறுவடை செய்யலாம்.

கினியா புல்



ஏக்கருக்கு 20:20:60 கிலோ முறையே தழை, மணி, சாம்பல் சத்துக்களும், மேலுரமாக 10 கிலோ தழைச்சத்தும் இட வேண்டும். ஏக்கருக்கு ஒரு கிலோ விதை தேவை. வேர்க் கரணை ஏக்கருக்கு 20,640. விதைத்த உடன் முதல் தண்ணீர் 3-ம் நாளும், பின்னர் 15 முதல் 20 நாள்களுக்கு ஒருமுறையும் நீர்ப்பாய்ச்சினால் போதும். 50 முதல் 55 நாள்களில் அறுவடை செய்யலாம்.

தீவன தட்டைப்பயறு



இதில் கோ 5 ரகம் கிடைக்கிறது. உரத்தேவை ஏக்கருக்கு அடியுரம் 10:16:8 முறையே தழை, மணி, சாம்பல் சத்துக்கள் இட வேண்டும். ஏக்கருக்கு 14 கிலோ போதுமானது. விதைத்து 3-வது நாளில் முதல் தண்ணீரும், பின்னர் 10 நாள்களுக்கு ஒரு முறையும் நீர்ப் பாய்ச்சினால் போதும். 50 முதல் 55 நாளில் அறுடைக்கு வரும்.

கம்பு நேப்பியர் புல்


என்.பி.21, என்.பி.2, கோ1, கோ2, கோ3 ஆகிய ரகங்கள் கிடைக்கின்றன. விதைக் கரணைகள் ஏக்கருக்கு 16 ஆயிரம் தேவை. அடியுரமாக ஏக்கருக்கு 20:20:16 கிலோ விகிதத்தில் முறையே தழை, மணி, சாம்பல் சத்துக்கள் இடவேண்டும். முதல் தண்ணீர் நடும் போதும், 2-வது தண்ணீர் நட்ட 3-வது நாளிலும் பாய்ச்ச வேண்டும். பின்னர் 10 நாள்களுக்கு ஒருமுறை நீர்ப் பாய்ச்சினால் போதும். முதல் அறுவடை 80 நாள்களிலும், பின்னர் 45 நாள்களுக்கு ஒரு முறையும் செய்யலாம்.

கறவை மாடு வைத்திருப்பவரே தீவனப் பயிர் வளர்க்கலாம்


தமிழகத்தில் பால் தேவை எப்போதும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்போதையை பால் உற்பத்தி, நமது தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்வதாக இல்லை.
பால் தட்டுப்பாடுதான் பல்வேறு கலப்படங்களுக்கும், விலையேற்றத்துக்கும் மூலகாரணம். எனவே பால் உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் கலப்படமற்ற, சுத்தமான பாலை நியாயமான விலையில் பெறமுடியும்.
பால் உற்பத்தியைப் பெருக்க தமிழகத்தில் இன்னமும் நிறைய கறவை மாடுகள் வளர்க்கப்பட வேண்டும். நிறைய மாட்டுப் பண்ணைகள் உருவாக வேண்டும். எனவே தான் தமிழக அரசு மாடு வளர்ப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இலவசமாகவும் மானியத்திலும் கறவைமாடுகள் வழங்கப்படுகின்றன. மாடுகள் அதிக அளவில் வளர்க்க மேய்ச்சல் நிலம் தேவை. ஆனால் மேய்ச்சல் நிலங்கள் எல்லாம் காணாமல் போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
இதனால் மாடுகளுக்கான தீவனப் புல் கிடைப்பதில் பெருமளவு தட்டுப்பாடு நிலவி வருகிறது. கறவை மாடுகளுக்கு கால் பங்கு வைக்கோல், அரைப் பங்கு பசுந் தீவனம், கால் பங்கு கடைகளில் கிடைக்கும் ஏனைய தீவனங்கள் கொடுத்தால் மாடுகள் ஆரோக்கியமாகவும், நிறைய பாலும் கறக்கும். பராமரிப்புச் செலவும் குறையும் என கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எனவே பால் உற்பத்தியில் தீவனப் பயிர்களின் பங்கு பெரிதும் அங்கம் வகிக்கிறது. 5 மாடுகளுக்கு மேல் வைத்து இருப்பவர்கள் நிச்சயம் தீவனப் பயிர்களை வளர்க்க வேண்டும். அல்லது விலைகொடுத்து வாங்கவேண்டும் என்கிறது கால்நடை பராமரிப்புத்துறை.
வீட்டுக்கு 2 மாடுகள் வைத்திருக்கும் ஐவர் சேர்ந்து, தீவனப் பயிர்களை விளைவிக்கலாம். தீவனப் பயிர்கள் வளர்க்க, கால்நடை பராமரிப்புத் துறை நிறைய மானியம் வழங்குகிறது.

தீவனப்பயிர்கள்

தீவனப் பயிர்களில் முக்கியமானவை
  • தீவன மக்காச் சோளம்
  • தீவனச் சோளம்
  • தீவனக் கம்பு
  • கினியா புல்
  • தீவன தட்டைப் பயறு
  • கம்பு நேப்பியர் புல்
ஆகியவை.

தீவன மக்காச் சோளம்

தீவன மக்காச் சோளத்தில் ஆப்பிரிக்கன் உயரம், டெக்கான், கங்கா, கோ1 என்ற ரகங்கள் உள்ளன. இவற்றுக்கு உரத்தேவை ஹெக்டேருக்கு 40 கிலோ யூரியா, 64 கிலோ சூப்பர் பாஸ்பேட், 16 கிலோ பொட்டாஷ். ஹெக்டேருக்கு 16 கிலோ விதை தேவை. விதைத்த 3-ம் நாள் தண்ணீர், பின்னர் வாரம் ஒரு முறை நீர்பாய்ச்சினால் போதும். 60-வது நாள் முதல் பூக்கும் வரை தொடர்ந்து அறுவடை செய்யலாம்.


தீவனச் சோளம்



தீவனச் சோளம் கோ 11, கோ 27 என்ற ரகங்கள் கிடைக்கின்றன. இவற்றுக்கு ஹெக்டேருக்கு 12 கிலோ யூரியா, 16 கிலோ சூப்பர் பாஸ்பேட், 8 கிலோ பொட்டாஷ், மேலுரமாக 30-வது நாளில் 12 கிலோ யூரியா இட வேண்டும். விதைத் தேவை ஹெக்டேருக்கு 16 கிலோ. விதைத்த உடன் முதல் தண்ணீரும், 3-ம் நாளில் 2-வது தண்ணீர், பின்னர் 10 நாள்களுக்கு ஒருமுறை நீர்ப் பாய்ச்சினால் போதும். 60 முதல் 65 நாளில் அறுவடை செய்யலாம்.

தீவனக் கம்பு



தீவனக் கம்பு கோ 8 என்ற ரகம் கிடைக்கிறது. இதற்கு ஹெக்டேருக்கு அடியுரமாக 12 கிலோ யூரியா, 96 கிலோ சூப்பர் பாஸ்பேட், 8 கிலோ பொட்டாஷ், மேலுரமாக 21 கிலோ யூரியா இட வேண்டும். விதை அளவு ஏக்கருக்கு 4 கிலோ. 10 முதல் 15 நாள்களுக்கு ஒருமுறை நீர்ப் பாய்ச்சினால் போதும். 40 முதல 45 நாள்களில் அறுவடை செய்யலாம்.

கினியா புல்


ஏக்கருக்கு 20:20:60 கிலோ முறையே தழை, மணி, சாம்பல் சத்துக்களும், மேலுரமாக 10 கிலோ தழைச்சத்தும் இட வேண்டும். ஏக்கருக்கு ஒரு கிலோ விதை தேவை. வேர்க் கரணை ஏக்கருக்கு 20,640. விதைத்த உடன் முதல் தண்ணீர் 3-ம் நாளும், பின்னர் 15 முதல் 20 நாள்களுக்கு ஒருமுறையும் நீர்ப்பாய்ச்சினால் போதும். 50 முதல் 55 நாள்களில் அறுவடை செய்யலாம்.

தீவன தட்டைப்பயறு



இதில் கோ 5 ரகம் கிடைக்கிறது. உரத்தேவை ஏக்கருக்கு அடியுரம் 10:16:8 முறையே தழை, மணி, சாம்பல் சத்துக்கள் இட வேண்டும். ஏக்கருக்கு 14 கிலோ போதுமானது. விதைத்து 3-வது நாளில் முதல் தண்ணீரும், பின்னர் 10 நாள்களுக்கு ஒரு முறையும் நீர்ப் பாய்ச்சினால் போதும். 50 முதல் 55 நாளில் அறுடைக்கு வரும்.

கம்பு நேப்பியர் புல்



என்.பி.21, என்.பி.2, கோ1, கோ2, கோ3 ஆகிய ரகங்கள் கிடைக்கின்றன. விதைக் கரணைகள் ஏக்கருக்கு 16 ஆயிரம் தேவை. அடியுரமாக ஏக்கருக்கு 20:20:16 கிலோ விகிதத்தில் முறையே தழை, மணி, சாம்பல் சத்துக்கள் இடவேண்டும். முதல் தண்ணீர் நடும் போதும், 2-வது தண்ணீர் நட்ட 3-வது நாளிலும் பாய்ச்ச வேண்டும். பின்னர் 10 நாள்களுக்கு ஒருமுறை நீர்ப் பாய்ச்சினால் போதும். முதல் அறுவடை 80 நாள்களிலும், பின்னர் 45 நாள்களுக்கு ஒரு முறையும் செய்யலாம்.

கால்நடைக்கு கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் – கோ-3

          கால்நடை தீவனப் பயிரான “கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் கோ-3′ பயிரிட்டு மாடுகளுக்கு அளிப்பதன் மூலம் பால்வளத்தை அதிகரிக்க முடியும் என  கால்நடை மருத்துவர்கள் யோசனை தெரிவிக்கின்றனர்.
         இத் தீவனப் பயிரை ஆண்டு முழுவதும் பயிரிடலாம். நிலத்தை தயாரிக்க இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழ வேண்டும். ஹெக்டேருக்கு 25 டன் மக்கிய தொழு உரம் இட வேண்டும். 60 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்.
  உரமிடுதல்: 
மண் பரிசோதனை செய்து அதன் பின்னர் உரமிடவது நல்லது. மண் பரிசோதனை செய்யாவிடில் ஹெக்டேருக்கு 150:50:50 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து இட வேண்டும். 50 சதவீத தழைச்சத்தை நட்ட 30ஆவது நாளில் மேலுரமாக இட வேண்டும். ஒவ்வொரு அறுவடைக்கு பின்னரும் 75 கிலோ தழைச்சத்தை அடியுரமாக இடுவதன் மூலம் மகசூலை நிலை நிறுத்தலாம்.
     இடவேண்டிய தழை மணிசத்தின் அளவில் 75 சதவீதத்துடன் அசோஸ்பைரில்லம் (ஹெக்டேருக்கு 2 கிலோ), பால்போபாக்டீரியா (2 கிலோ) அல்லது அசோபாஸ் (4 கிலோ) கலந்து கலவையாக இடும்போது விளைச்சலை அதிகரிப்பதுடன் 25 சதவீத உர அளவு குறைகிறது.
நடவு: 
நன்கு நீர் பாய்ச்சிய பின் ஒரு வேர்கரணை அல்லது ஒரு தண்டக்கரணையை 50 ஷ் 50 செ.மீ. இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். இவ்வாறு நடவு செய்ய ஒரு ஹெக்டேருக்கு 40 ஆயிரம் கரணைகள் தேவைப்படுகின்றன.
கலப்புப் பயிராக 3 வரிகள் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்லும், ஒரு வரி வேலி மசாலும் பயிர் செய்தால் ஊட்டச்சத்தை அதிகப்படுத்தலாம்.
நீர் மேலாண்மை: 
நட்ட 3ஆவது நாளில் உயிர் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பின்பு 10 நாள்களுக்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்சுவது சிறந்தது. கழிவு நீரையும் பாசனத்துக்குப் பயன்படுத்தலாம்.
அறுவடை: 
நடவுக்கு பின்னர் 75 முதல் 80 நாள்களில் முதல் அறுவடையும், அதற்கடுத்து 45 நாளிலும் அறுவடை செய்யலாம். ஹெக்டேருக்கு 400 டன் தீவனம் கிடைக்கும். அதிகப்படியான தூர்களை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வெட்டி எடுத்து விட வேண்டும்.
ஆக்சலேட் என்ற நச்சுபொருளின் தன்மையை குறைக்க இத்தீவனத்துடன் 5 கிலோ பயறுவகை தீவனத்தை கலந்து கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டும். அல்லது சுண்ணாம்பு தண்ணீர் அல்லது தாது உப்பு கலவையை கால்நடைகளுக்கு அளிக்கலாம்.

கால்நடைக்கு கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் – கோ-3

கால்நடை தீவனப் பயிரான “கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் கோ-3′ பயிரிட்டு மாடுகளுக்கு அளிப்பதன் மூலம் பால்வளத்தை அதிகரிக்க முடியும் என  கால்நடை மருத்துவர்கள் யோசனை தெரிவிக்கின்றனர்.
இத் தீவனப் பயிரை ஆண்டு முழுவதும் பயிரிடலாம். நிலத்தை தயாரிக்க இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழ வேண்டும். ஹெக்டேருக்கு 25 டன் மக்கிய தொழு உரம் இட வேண்டும். 60 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்.
உரமிடுதல்: 
மண் பரிசோதனை செய்து அதன் பின்னர் உரமிடவது நல்லது. மண் பரிசோதனை செய்யாவிடில் ஹெக்டேருக்கு 150:50:50 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து இட வேண்டும். 50 சதவீத தழைச்சத்தை நட்ட 30ஆவது நாளில் மேலுரமாக இட வேண்டும். ஒவ்வொரு அறுவடைக்கு பின்னரும் 75 கிலோ தழைச்சத்தை அடியுரமாக இடுவதன் மூலம் மகசூலை நிலை நிறுத்தலாம்.
இடவேண்டிய தழை மணிசத்தின் அளவில் 75 சதவீதத்துடன் அசோஸ்பைரில்லம் (ஹெக்டேருக்கு 2 கிலோ), பால்போபாக்டீரியா (2 கிலோ) அல்லது அசோபாஸ் (4 கிலோ) கலந்து கலவையாக இடும்போது விளைச்சலை அதிகரிப்பதுடன் 25 சதவீத உர அளவு குறைகிறது.
நடவு: 
நன்கு நீர் பாய்ச்சிய பின் ஒரு வேர்கரணை அல்லது ஒரு தண்டக்கரணையை 50 ஷ் 50 செ.மீ. இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். இவ்வாறு நடவு செய்ய ஒரு ஹெக்டேருக்கு 40 ஆயிரம் கரணைகள் தேவைப்படுகின்றன.
கலப்புப் பயிராக 3 வரிகள் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்லும், ஒரு வரி வேலி மசாலும் பயிர் செய்தால் ஊட்டச்சத்தை அதிகப்படுத்தலாம்.
நீர் மேலாண்மை: 
நட்ட 3ஆவது நாளில் உயிர் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பின்பு 10 நாள்களுக்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்சுவது சிறந்தது. கழிவு நீரையும் பாசனத்துக்குப் பயன்படுத்தலாம்.
அறுவடை: 
நடவுக்கு பின்னர் 75 முதல் 80 நாள்களில் முதல் அறுவடையும், அதற்கடுத்து 45 நாளிலும் அறுவடை செய்யலாம். ஹெக்டேருக்கு 400 டன் தீவனம் கிடைக்கும். அதிகப்படியான தூர்களை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வெட்டி எடுத்து விட வேண்டும்.
ஆக்சலேட் என்ற நச்சுபொருளின் தன்மையை குறைக்க இத்தீவனத்துடன் 5 கிலோ பயறுவகை தீவனத்தை கலந்து கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டும். அல்லது சுண்ணாம்பு தண்ணீர் அல்லது தாது உப்பு கலவையை கால்நடைகளுக்கு அளிக்கலாம்.
அரசே இந்த தீவனப் பயிருக்கான புல்கரணைகளை இலவசமாக அளிக்கிறது.

கருத்துகள் இல்லை: