யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

சனி, 26 அக்டோபர், 2013

International Dairy Expo - 2014

GPDFA International Dairy Expo - 2014

17-18-19 January 2014
Chikhodra Road, Anand, Gujarat


Gujarat Progressive Dairy Farmers Association (Regd.) , a pioneer organization working for the overall development of Dairy Farmers of Gujarat. It was established in 2010 under technical support of Gujarat Cooperative Milk Marketing Federation Ltd. AMUL , National Dairy Development Board and Anand Agriculture University.  It is our pleasure to inform you that we are going to organize Gujarat’s first and biggest expo and Cattle Show on Dairy Sector . The expo is scheduled to be held for 17,18 & 19 January 2014 at Chikhodra Road, Anand (The Milk Capital of India). The aim of the exhibition is to promote Dairy Entrepreneurship among farmers.

This exhibition will attract visitors from Gujarat as well as farmers from adjoining states like Rajasthan, Maharashtra, Madhya Pradesh and all other parts of country. In this show, different Technical seminars and Workshops will be organized by Departments respectively  along with Exhibition regarding Farm Machinery,  Breeding, Production, Nutrition, Product Technology, Health Management and Disease control in Dairy & Livestock and Dairy Farming Equipments, Dairy Processing Equipments. The Animal Husbandry Department, Dairy Development Department and various private and government organizations are sponsoring this show. GPDFA International Dairy Expo and Cattle Show is where you can get the most out of the opportunities and gain you market share. It is the time to join our exhibitors to make GPDFA International Dairy Expo and Cattle Show a preferred platform network, build new partnerships and generate new business opportunities.

 
Our Vision: 
  • GPDFA International Dairy Expo and Cattle Show to be the must attend event for dairy and agriculture farmers and new entrepreneurs . To create a new wave in dairy and industry as a whole.
  • GPDFA International Dairy Expo and Cattle Show to serve as a platform for  farmers,  companies, producers, organizations and all agri, dairy and livestock professionals to gather under single roof annually to share knowledge, technology and innovations.

Why Exhibit at GPDFA International Dairy Expo and Cattle Show?
  • Expose your innovations and technology to potential buyers and establish new business contacts across the country at single venue. Shorten your sales cycle by meeting key decision makers and buyers. Identify new markets, agents and distributors. Make presentations and demonstrations of your products and services.
  • Use GPDFA International Dairy Expo and Cattle Show as launching pad to launch your products in Gujarat.
  • Only international expo in India wholly dedicated to  Dairy Industry.

Why Visit at GPDFA International Dairy Expo and Cattle Show?
Gain and Transfer knowledge at Gujarat’s only biggest Three days exhibition showing latest dairy farming and processing equipment’s, supplies and agri machineries. Live product demonstrations,  Platform to interact with experts of industry.

Our Activities:
  • Inauguration Ceremony
  • Exhibition
  • Technical Sessions and seminars
  • Innovative and other farmers award ceremony 
  • Cattle Show (Various Competitions)

We look forward for your active support and participation in this mega event. Please find enclosed brochure , sponsorship opportunities and floor plan.

Please feel free to contact us for any query or doubts.



Sanjay Patel
President – GPDFA


For Sponsorships and Space Booking Contact:
Sovi Chawla
Director – Smart Events (Event coordinator for GPDFA)
Mob: +91 8683000136

நான் கண்ட சேவல்கள்

நான் கண்ட சேவல்கள்!!!

தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த சேவல்கள் உருவத்தின் அளவால் சிறுவடை, பெருவடை மற்றும் காட்டுச் சேவல் என இனம் பிரிக்கப்பட்டுள்ளன என்பது முதலான பல பற்றியங்களைச் சென்ற இடுகையில் கண்டோம். அதைப் போலவே, நிறத்தாலும் பல வகைகளாகப் பெயரிடப்பட்டு உள்ளன.

கழுத்து மற்றும் இறகுகளில், நீண்ட வண்ணக் கீற்றுகள் கொண்டவை வள்ளுவர்ச் சேவல் என அழைக்கப்படுகின்றன. கோழியின் தோற்றத்தில் இருக்கும் சேவல்கள் பேடுகள்எனப்படுகின்றன. கருமையும் சிவப்பும் கலந்த இறகுகளைக் கொண்டவை காகச் சேவல்கள். கட்டுக் கட்டாக வண்ணத் திட்டுகளை உடையன கீரிச் சேவல்கள்.

வெண்ணிறத்தைப் பிரதானமாகக் கொண்டவை, வெள்ளைச் சேவல்கள். கருப்பு நிறத்தைப் பிரதானமாகக் கொண்டவைபேய்க்கருப்பு என அழைக்கப்படுகின்றன. பழுப்பு நிறத்தை உடையவை பொன்(நி)றம் என்பனவாகும். சாம்பல் நிறத்தைப் பிரதானமாகக் கொண்டவை, பூதிகள் என அழைக்கப்படுகின்றன.

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் வரை, வீரத்துடன் வாழும் இச்சேவல்கள் தன்னை வளர்த்துப் பராமரிக்கும் பராமரிப்பாளனுக்கு விசுவாசமாகவும், குறிப்பறிந்து வாழக்கூடிய வகையிலும் இருப்பனவாகும்.

சேவல்களுக்குத் தடிமன்(சளி) வந்தால், அதன் குரலை வைத்து எளிதில் தெரிந்து கொள்வோம் என்கிறார் கிணத்துக்கடவு சேவல் பராமரிப்பாளர் முருகன். சளிப்பிடித்த சேவல்களுக்கு, குறுமிளகு, பூண்டு, சிறிதளவில் மிளகாய்த்தூள் அடங்கிய உருண்டைகளைக் கொடுப்பதன் மூலம் அவற்றைக் குணப்படுத்தலாம் என்கிறார் அவர்.

மேலும் வெள்ளைக் கழிச்சல் எனும் நோயைக் குணப்படுத்த இயலாது; வருமுன் காத்தலே மிக அவசியம் என்றும் கூறுகிறார். இந்நோய் தாக்குண்ட சேவல்கள், வெள்ளையாகக் கழிக்கும்; மேலும் உடன் இருக்கும் சேவல் மற்றும் கோழிகளுக்கும் தொற்றுவிடக் கூடிய அபாயமும் உண்டு. சேவல்கள் இருக்கும் இடத்தை, சுண்ணாம்பு கலந்த நீரால் தெளித்து, கட்டுத்தறி முழுதும் சுண்ணாம்புக் கலவையைப் பூசுவதுமூலம் இதைத் தடுத்து நிறுத்தலாம்.

கண்ணைச் சுற்றி பேன்கள் ஆக்கிரமிப்பதைத் தடுக்க, சூடான தேங்காய் எண்ணெயில் பூண்டு மற்றும் இஞ்சியை இட்டு, பிறகு அந்த எண்ணெயை கண்களில் இடுவதன் மூலம் பேன் தொல்லையில் இருந்து காப்பாற்ற முடியும்.

நாம் பார்த்த சில சேவல்களின் பெயர் கீழே வருமாறு:

கோழி வள்ளுவர்,
காக வள்ளுவர்,
கீரி வள்ளுவர்,
பூத வள்ளுவர்,
பொன்ற வள்ளுவர்,
பொன்றக் காகம்,
செங்காகம்,
கருங்காகம்,
வெண்காகம்,
செங்கீரி,
காகக் கீரி,
பொன்றக் கீரி,
வள்ளுவர்க் கீரி,
பூதிக் கீரி,
காக பூதி,
பொன்ற பூதி,
செம்பூதி,
பொன்ற வெள்ளை,
புள்ளி வெள்ளை,
காகக் கருப்பு,
பேய்க்கருப்பு,
சேவப்பேடு,
கோழிப்பேடு,
கரும்பேடு,
வெண்பேடு,
பொன்றப்பேடு,
பூதப்பேடு,
காகப்பேடு,
சித்திரப்புள்ளி,
நூலாவள்ளுவர்

கோழி வள்ளுவர்

சித்திரப்புள்ளி

பொன்றக்கீரி

பேய்க்கருப்பு

காகவள்ளுவர்

வள்ளுவர்

செங்காகம்

வெள்ளை வள்ளுவர்

பொன்ற வெள்ளை

பொன்றக்கால் காகச் சேவல்

காகச் சேவல்

காகக்கருப்பு

பொன்றக்கால் காகம்

வள்ளுவக்கீரி

பொன்றக்கால் செங்காகம்

நூலாவள்ளுவர்

பொன்றம்

சாணிப்பச்சக் காகம்

காகவள்ளுவர்

நூலாவள்ளுவர்

பொன்றக் காகம்

காகச் சேவல்

காகக்கருப்பு

சல்லிப்பொன்ற வள்ளுவர்

காகப் பேடு

பூதி வள்ளுவர்

பூதி வள்ளுவர்

பொன்றக் கீரி

பொன்றக் கீரி

காக வள்ளுவர்ப் பேடு

கொங்கு நாட்டின் மேற்குக் கிராமங்களுக்கு அழைத்துச் சென்று, கிராமியத்தைக் கண்ணுறச் செய்வதில் உதவிய வாகன ஓட்டுனர் வசந்த் அவர்களுக்கும், கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக சேவல் பராமரிப்பில் ஈடுபட்டுள்ள வெள்ளக்கிணறு சுப்பன் அவர்களுக்கும் எமது நன்றிகளை உரித்தாக்குகிறோம்.


முன்னறிவிப்பு: கிட்டத்தட்ட முந்நூறு விதமான சேவல்களைப் படம் பிடிப்பதாக இருந்தோம். எதிர்பாராத காரணத்தால் அது தடைபட்டு விட்டது. எனினும் வரும்காலங்களில் நல்லதொரு வாய்ப்பு கிட்டும் என நம்புகிறோம். விரைவில், சுப்பன் மற்றும் வசந்த் அவர்களின் பேட்டி, எழிலாய்ப் பழமை பேசும் வலைப்பதிவில் இடம் பெறும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!

வெள்ளி, 25 அக்டோபர், 2013

கோடை காலத்தில் கோழி பராமரிப்பு

கோடை காலத்தில் கோழி பராமரிப்பு

கோடை காலத்தில் கோழிகளை விரட்டிப் பிடித்தால், அவை பலவீனம் அடைகின்றன. கோடை என்றாலே கோழிகளுக்கு சோதனையான காலம்தான். சில பராமரிப்பு முறைகள் மூலம் நிவர்த்திக்கலாம். இறைச்சி கோழி வளர்ப்பைப் பொறுத்தவரை, கோடை காலத்தில் வெப்ப அதிர்ச்சி நோய் தாக்கும். சுற்றுப்புற கூடுதல் வெப்பநிலை தான், இதற்கு காரணம். இவற்றுக்கு இயற்கையில் வியர்வை சுரப்பிகள் கிடையாது. இதனால் கூடுதல் வெப்பத்தை, உடலில் இருந்து வியர்வை மூலம் வெளியேற்ற இயலாது. இறைச்சி கோழிகளில் உடல் கொழுப்பு அதிகமிருப்பதால், கோழிக் கூட்டில் காற்றோட்டமான வசதி இல்லாதது, சுற்றுப்புற வெப்பத்தால் வெப்ப அதிர்ச்சி (shock )ஏற்படும். நோய் தாக்கிய கோழிகளுக்கு மூச்சிரைப்பு, சோர்வு ஏற்படும். இவை நிறைய தண்ணீர் குடிக்கும். தீனி அதிகம் சாப்பிடாது. பண்ணையின் பக்கவாட்டுச் சுவர் ஓரமாக ஒதுங்கி நிற்கும். பிற்பகலில் இறந்து விடும்.

பண்ணையில் தண்ணீர் வைக்கும் பாத்திரங்கள் அதிகமாக வைக்க வேண்டும். தண்ணீரில் ஐஸ்கட்டிகள் சேர்க்கலாம். கூரையின் மேல் வைக்கோலை பரப்பி, தண்ணீர் தெளித்து வைத்து வெப்பத்தைக் குறைக்கலாம். பக்கவாட்டில் ஈரச்சாக்குகளை தொங்கவிடலாம். யாழ்ப்பாணம் என்றால் வாழை இலைகளையும் பாவிக்கலாம்.உலர் தீவனமாக கொடுக்காமல், தண்ணீர் சேர்த்து கொடுக்க வேண்டும். விடியும் முன், மின்விளக்குகளை ஒளிரவிடலாம் , அந்நேரத்தில் தீவனம் சாப்பிட ஏதுவாக இருக்கும். நேரமாகும் போது வெப்பம் அதிகமானால், தீவனம் எடுப்பது குறையும். நூறு கோழிகளுக்கு 500 மில்லி கிராம் வீதம், "விட்டமின் சி'(vitamins C ) சத்து கொடுக்கலாம். குளிர்ந்த மோர் குடிக்க தரலாம். பத்து லிட்டர் தண்ணீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து தரலாம்.
பண்ணைக்குள் கோழியின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். அதிக எண்ணிக்கை இருந்தால் வெளி வெப்பநிலை கூடுதலாகும். ஒவ்வொரு கோழிக்கும் ஒன்றரை சதுர அடி இடம் தரவேண்டும். நோய் தாக்கினால், மருந்துகளின் மூலம் கட்டுப் படுத்தலாம்.
கறவை மாடுகளை வெப்பநோய் தாக்காமல் இருக்க, பசுந்தீவனங்களை தரவேண்டும். அடிக்கடி குளிக்க வைக்க வேண்டும். சோளம் போன்ற குளிர்ச்சியான தீவனங்களை அரைத்து தண்ணீரில் கலந்து தரலாம். பசுந்தீவனங்கள் இருந்தாலும் பால் உற்பத்தி அதிகரிக்கும்.

சினை பிடிக்காத கறவை மாடுகள்: தீர்வு என்ன?

சினை பிடிக்காத கறவை மாடுகள்: தீர்வு என்ன?

கறவை மாடுகள் சரியான காலத்தில் சினை பிடித்து ஆண்டுக்கு ஒரு கன்று ஈன வேண்டும். இல்லையேல், பால் உற்பத்தி குறைந்து, பராமரிப்புச் செலவு அதிகரித்து நஷ்டம் ஏற்படும்.



மூன்று முறை சரியான பருவத்தில் கருவூட்டல் செய்த பின்னரும் சினை பிடிக்காமல் இருப்பது தாற்காலிக மலட்டுத் தன்மை எனப்படும். சரியான சினை தருணத்தைக் காணத் தவறுதல், சரியான பருவத்தில் சினைப்படுத்தத் தவறுதல், சினைப்படுத்தும் தருணத்தில் ஏற்படும் அயர்ச்சி, சாதகமற்ற தட்ப வெப்பநிலை போன்ற பராமரிப்பின்மைக் குறைபாடுகளாலும், தீவனம், சத்துப் பற்றாக்குறை, இனப் பெருக்க உறுப்புகளைத் தாக்கும் நோய்கள், கனநீர் பற்றாக்குறை, மரபியல், உடற்கூறு பிரச்னைகள், சினைப் பருவத்துக்கு வந்தும் சினை தங்காமை, கிடேரிகளை சினைப்படுத்துதல் ஆகிய காரணங்களாலும் இந்தத் தாற்காலிக மலட்டுத் தன்மை ஏற்படுகிறது.

இத்தகை பாதிப்புகளைத் தவிர்க்க கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப்படி தக்க சமயங்களில் தடுப்பூசி போடுவதுடன், கொட்டைகைகளை சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும். நோய் வாய்ப்படும் சூழல் காணப்பட்டால் கால்நடை மருத்துவரை அணுகி உடனுக்குடன் சிகிச்சை அளிக்க வேண்டும்.

இதேபோல, சினை பிடிக்காத பசுக்களில் 5 முதல் 10 சதம் வரை மட்டுமே காணப்படும் நிரந்தர மலட்டுத் தன்மைக்கு பசுக்களில் இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் கோளாறுகள்தான் காரணம்.

இரட்டைக் கன்றாக ஆண் கன்றுடன் பிறந்த பெண் கன்றின் இனப் பெருக்க உறுப்புகள் பாதிப்படைந்து விடுவதால் இந்தக் கன்றும் சினையாகாது. இந்தக் குறைபாடுகள் மரபுக் கோளாறுகளால் ஏற்படுவதால் சிகிச்சை மூலம் சரிபடுத்த முடியாது. ஆகையால், இந்தக் குறைபாடுள்ள கிடேரிகளைப் பண்ணையிலிருந்து நீக்கிவிட வேண்டும்.

விந்தணு, சினை முட்டை ஆகியவற்றிலுள்ள மரபணுக்களில் அழிவு குணங்கள் இருந்தால் கருவுறுதல் பாதிக்கப்படும். வயது முதிர்ந்த பசுக்கள், காளைகள் குறைபாடுள்ள முட்டை, விந்தை உருவாக்குவதால் வயது அதிகமான மாடுகளில் சினை பிடிக்கத் தாமதம் ஏற்படுகிறது. எனவே, வயது முதிர்ந்த மாட்டையும் பண்ணையிலிருந்து நீக்கிவிட வேண்டும்.

மாடுகள் சினை பிடிக்கவில்லையெனில், எத்தனை நாளுக்கு ஒருமுறை சினைக்கு வருகிறது என்று பார்க்க வேண்டும். சினை ஊசி போட்ட 21 நாள்களுக்குப் பிறந் சினை தருண அறிகுறிகளை வெளியிட்டால் அது சினை பிடிக்கவில்லை என்பது தெரிந்து விடும். உடனடியாக தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.

இத்தகைய வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், கறவை மாடுகளில் ஏற்படும் மலட்டுத் தன்மையை நீக்கி பெரும்பாலான பசுக்களை கருவுறச் செய்ய முடியும்

நாட்டுக் கோழி வளர்ப்பு! அரசு மான்யத்துடன்!

அதிக லாபம் தரும் "பரண்மேல்' ஆடு வளர்ப்பு!

செலவில்லாத தீவன சாகுபடி... ஆரோக்கியத்தோடு அதிக பால்...

செலவில்லாத தீவன சாகுபடி... ஆரோக்கியத்தோடு அதிக பால்...

செலவில்லாத தீவன சாகுபடி... 
ஆரோக்கியத்தோடு அதிக பால்... 

‘‘பருவ நிலை மாறுதல்களால் விவசாயம் பொய்த்துப் போனாலும், தவறாமல் வருமானத்தைக் கொடுப்பது கால்நடை வளர்ப்புதான். என்றாலும் திட்டமிட்ட தீவன மேலாண்மையும், நோய் மேலாண்மையும் இருந்தால்தான் கால்நடை வளர்ப்பில் லாபத்தை சம்பாதிக்க முடியும்’’ என்பது பெரும்பாலான கால்நடைத் துறை வல்லுநர்களின் கூற்று.

‘‘நூத்துக்கு நூறு சதவிகிதம் இது சரி. இதையெல்லாம் முழுக்க முழுக்க நான் தவறாம கடை-பிடிக்கிறதாலதான்... என்னோட ஆடு, மாடுக எந்த நோயுமில்லாம ஆரோக்கியமா திடகாத்திரமா இருந்து, எனக்கு லாபத்தைக் கொடுத்துக்கிட்டிருக்குÕÕ என்று உற்சாகமாகச் சொல்லும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஆதிநாராயணன்,
பசுந்தீவனத்துக்காக தனித்தோட்டத்தையே பராமரித்துக் கொண்டிருக்கிறார்.

பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள பாப்பா நாடு அருகிலுள்ள ஆலத்தன்குடிகாடு கிராமத்தில்தான் இருக்கிறது அந்த தீவனத் தோட்டம். மல்பெரி, வேலிமசால், சவுண்டல் (சுபாபுல்) என ஏகப்பட்ட தீவனப்பயிர்கள் தளதளவென நின்று கொண்டிருக்கின்றன அந்த இரண்டரை ஏக்கர் தோட்டத்தில்.

தீவன அறுப்பில் ஈடுபட்டிருந்த ஆதிநாராயணன், அதற்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு நம்மிடம் பேசினார். ‘‘பத்து வருஷத்துக்கு முன்ன நூறு ஆடுகளை வெச்சுருந்தேன். அதுக்காக உருவாக்குனதுதான் இந்தத் தீவனத் தோட்டம். 20 சென்ட் நிலத்துல தண்ணீர்ப்புல் (எருமைப்புல்), 230 சென்ட்டுல மல்பெரி, அதுக்கிடையில ஊடுபயிரா முயல்மசால், வேலிமசால், கலப்பைக் கோணியம், சங்குப்புஷ்பம் எல்லாம் இருக்கு. வேலி ஓரத்துல 500 சவுண்டல் மரம் இருக்கு. இந்தத் தோட்டத்தை வெச்சு பத்து பதினைஞ்சு மாடுக, கொஞ்சம் ஆடுகளை வளக்க முடியும்.

ஆறு வருஷத்துக்கு முந்தி வேலையாள் பிரச்னை வந்ததால, அஞ்சாறு ஆட்டை மட்டும் வெச்சுகிட்டு மிச்சத்தை வித்துட்டேன். இப்ப என்கிட்ட ரெண்டு கறவை மாடுகளும் அஞ்சு ஆடுகளும்தான் இருக்கு. என் ஆடு, மாடுகளுக்குப் போக மிச்சமிருக்கிற தீவனத்தை பக்கத்து விவசாயிங்களுக்கு இலவசமா கொடுத்துகிட்டிருக்கேன். கொஞ்சத்தை அப்படியே வெட்டி, தோட்டத்துல மூடாக்கா போடுறேன். அப்படியி-ருந்தும் மல்பெரி எக்கச்சக்கமா இருக்குறதால பட்டுப்புழுவையும் வளர்த்து- கிட்டிருக்கேன்’’ என்று முன்னுரை கொடுத்தவர்... தொடர்ந்தார்.

குறைவான செலவு.. அதிக ஆரோக்கியம்!
‘‘கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தை அதிகமா பயன்படுத்தச் சொல்றாங்க கால்நடை மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மையத்து அதிகாரிங்க. அதேமாதிரி நம்ம அரசு கால்நடைப் பண்ணைகள்லயும் பசுந்தீவனத்தைதான் நிறையப் பயன்படுத்துறாங்க. இது மூலமா தீவனச் செலவு குறையுறது மட்டுமில்லாம... ஆடு, மாடுக ஆரோக்கியமா வளருதுங்க. அதனாலதான் நான் தீவனங்களை உருவாக்கிட்டு பண்ணைத் தொழில்ல இறங்குனேன். ஆனா, பல இடங்கள்ல புதுசா பண்ணை வெக்கிறவங்க தீவனத்தைப் பயிர் செய்யாம, பண்ணையை ஆரம்பிச்சுட்டு, கடைசியில தீவனத்துக்கு ரொம்ப சிரமப்படுறாங்க. அதிக விலை கொடுத்து புல்லையும், அடர்தீவனத்தையும் வாங்கிப் போட்டு நட்டமாயிட்டு... ஆடு, மாடு வளர்த்தாலே நட்டம்தான்னு சொல்லிடுவாங்க."

ஆடு வளர்ப்பிலுள்ள பிரச்னைகளும், தீர்வுகளும்



வியாழன், 24 அக்டோபர், 2013

கறவை மாடு வைத்திருப்பவரே தீவனப் பயிர் வளர்க்கலாம்

கறவை மாடு வைத்திருப்பவரே தீவனப் பயிர் வளர்க்கலாம்

தமிழகத்தில் பால் தேவை எப்போதும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்போதையை பால் உற்பத்தி, நமது தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்வதாக இல்லை.
பால் தட்டுப்பாடுதான் பல்வேறு கலப்படங்களுக்கும், விலையேற்றத்துக்கும் மூலகாரணம். எனவே பால் உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் கலப்படமற்ற, சுத்தமான பாலை நியாயமான விலையில் பெறமுடியும்.
பால் உற்பத்தியைப் பெருக்க தமிழகத்தில் இன்னமும் நிறைய கறவை மாடுகள் வளர்க்கப்பட வேண்டும். நிறைய மாட்டுப் பண்ணைகள் உருவாக வேண்டும். எனவே தான் தமிழக அரசு மாடு வளர்ப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இலவசமாகவும் மானியத்திலும் கறவைமாடுகள் வழங்கப்படுகின்றன. மாடுகள் அதிக அளவில் வளர்க்க மேய்ச்சல் நிலம் தேவை. ஆனால் மேய்ச்சல் நிலங்கள் எல்லாம் காணாமல் போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
இதனால் மாடுகளுக்கான தீவனப் புல் கிடைப்பதில் பெருமளவு தட்டுப்பாடு நிலவி வருகிறது. கறவை மாடுகளுக்கு கால் பங்கு வைக்கோல், அரைப் பங்கு பசுந் தீவனம், கால் பங்கு கடைகளில் கிடைக்கும் ஏனைய தீவனங்கள் கொடுத்தால் மாடுகள் ஆரோக்கியமாகவும், நிறைய பாலும் கறக்கும். பராமரிப்புச் செலவும் குறையும் என கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எனவே பால் உற்பத்தியில் தீவனப் பயிர்களின் பங்கு பெரிதும் அங்கம் வகிக்கிறது. 5 மாடுகளுக்கு மேல் வைத்து இருப்பவர்கள் நிச்சயம் தீவனப் பயிர்களை வளர்க்க வேண்டும். அல்லது விலைகொடுத்து வாங்கவேண்டும் என்கிறது கால்நடை பராமரிப்புத்துறை.
வீட்டுக்கு 2 மாடுகள் வைத்திருக்கும் ஐவர் சேர்ந்து, தீவனப் பயிர்களை விளைவிக்கலாம். தீவனப் பயிர்கள் வளர்க்க, கால்நடை பராமரிப்புத் துறை நிறைய மானியம் வழங்குகிறது.

தீவனப்பயிர்கள்

தீவனப் பயிர்களில் முக்கியமானவை
  • தீவன மக்காச் சோளம்
  • தீவனச் சோளம்
  • தீவனக் கம்பு
  • கினியா புல்
  • தீவன தட்டைப் பயறு
  • கம்பு நேப்பியர் புல்
ஆகியவை.

தீவன மக்காச் சோளம்

தீவன மக்காச் சோளத்தில் ஆப்பிரிக்கன் உயரம், டெக்கான், கங்கா, கோ1 என்ற ரகங்கள் உள்ளன. இவற்றுக்கு உரத்தேவை ஹெக்டேருக்கு 40 கிலோ யூரியா, 64 கிலோ சூப்பர் பாஸ்பேட், 16 கிலோ பொட்டாஷ். ஹெக்டேருக்கு 16 கிலோ விதை தேவை. விதைத்த 3-ம் நாள் தண்ணீர், பின்னர் வாரம் ஒரு முறை நீர்பாய்ச்சினால் போதும். 60-வது நாள் முதல் பூக்கும் வரை தொடர்ந்து அறுவடை செய்யலாம்.
தீவன மக்காச்சோளம்
தீவன மக்காச்சோளம்

தீவனச் சோளம்

தீவனச் சோளம்
தீவனச் சோளம்
தீவனச் சோளம் கோ 11, கோ 27 என்ற ரகங்கள் கிடைக்கின்றன. இவற்றுக்கு ஹெக்டேருக்கு 12 கிலோ யூரியா, 16 கிலோ சூப்பர் பாஸ்பேட், 8 கிலோ பொட்டாஷ், மேலுரமாக 30-வது நாளில் 12 கிலோ யூரியா இட வேண்டும். விதைத் தேவை ஹெக்டேருக்கு 16 கிலோ. விதைத்த உடன் முதல் தண்ணீரும், 3-ம் நாளில் 2-வது தண்ணீர், பின்னர் 10 நாள்களுக்கு ஒருமுறை நீர்ப் பாய்ச்சினால் போதும். 60 முதல் 65 நாளில் அறுவடை செய்யலாம்.

தீவனக் கம்பு

தீவன கம்பு
தீவன கம்பு
தீவனக் கம்பு கோ 8 என்ற ரகம் கிடைக்கிறது. இதற்கு ஹெக்டேருக்கு அடியுரமாக 12 கிலோ யூரியா, 96 கிலோ சூப்பர் பாஸ்பேட், 8 கிலோ பொட்டாஷ், மேலுரமாக 21 கிலோ யூரியா இட வேண்டும். விதை அளவு ஏக்கருக்கு 4 கிலோ. 10 முதல் 15 நாள்களுக்கு ஒருமுறை நீர்ப் பாய்ச்சினால் போதும். 40 முதல 45 நாள்களில் அறுவடை செய்யலாம்.

கினியா புல்

கினியா புல்
கினியா புல்
ஏக்கருக்கு 20:20:60 கிலோ முறையே தழை, மணி, சாம்பல் சத்துக்களும், மேலுரமாக 10 கிலோ தழைச்சத்தும் இட வேண்டும். ஏக்கருக்கு ஒரு கிலோ விதை தேவை. வேர்க் கரணை ஏக்கருக்கு 20,640. விதைத்த உடன் முதல் தண்ணீர் 3-ம் நாளும், பின்னர் 15 முதல் 20 நாள்களுக்கு ஒருமுறையும் நீர்ப்பாய்ச்சினால் போதும். 50 முதல் 55 நாள்களில் அறுவடை செய்யலாம்.

தீவன தட்டைப்பயறு

தீவன தட்டைப் பயிறு
தீவன தட்டைப் பயிறு
இதில் கோ 5 ரகம் கிடைக்கிறது. உரத்தேவை ஏக்கருக்கு அடியுரம் 10:16:8 முறையே தழை, மணி, சாம்பல் சத்துக்கள் இட வேண்டும். ஏக்கருக்கு 14 கிலோ போதுமானது. விதைத்து 3-வது நாளில் முதல் தண்ணீரும், பின்னர் 10 நாள்களுக்கு ஒரு முறையும் நீர்ப் பாய்ச்சினால் போதும். 50 முதல் 55 நாளில் அறுடைக்கு வரும்.

கம்பு நேப்பியர் புல்

கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்
கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்
என்.பி.21, என்.பி.2, கோ1, கோ2, கோ3 ஆகிய ரகங்கள் கிடைக்கின்றன. விதைக் கரணைகள் ஏக்கருக்கு 16 ஆயிரம் தேவை. அடியுரமாக ஏக்கருக்கு 20:20:16 கிலோ விகிதத்தில் முறையே தழை, மணி, சாம்பல் சத்துக்கள் இடவேண்டும். முதல் தண்ணீர் நடும் போதும், 2-வது தண்ணீர் நட்ட 3-வது நாளிலும் பாய்ச்ச வேண்டும். பின்னர் 10 நாள்களுக்கு ஒருமுறை நீர்ப் பாய்ச்சினால் போதும். முதல் அறுவடை 80 நாள்களிலும், பின்னர் 45 நாள்களுக்கு ஒரு முறையும் செய்யலாம்.

புதன், 23 அக்டோபர், 2013

நல்ல லாபம் தரும் முயல் வளர்ப்பு!

நல்ல லாபம் தரும் முயல் வளர்ப்பு!


imageவீட்டில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, கோழி வளர்ப்பது போல முயல் வளர்ப்பு தொழிலும் மிகுந்த லாபம் தரக் கூடியது. முழுநேரமாகவோ, பகுதி நேரமாகவோ முயல் வளர்த்தால் முன்னேற்றம் நிச்சயம். முயல் குட்டியானது சுமார் ஒரு மாசம் வரை தாயுடன் கட்டாயம் இருக்க வேண்டும்.. அப்போதுதான் நல்ல ஆரோக்கியமான முயல்குட்டிகள் நமக்கு கிடைக்கும்.
நன்றாக வளர்ந்த முயல்களை கிலோ ஒன்றிற்கு தரத்திற்கு தகுந்தாற்போன்று 300 முதல் 350,400,500,600 என ரூபாய் வரைக்கும் விற்கலாம்.. இதற்கு தேவையான முதலீடு சுமார் 30,000 மட்டும் போதுமென்கிறார்கள் முயல் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள்.. ஒரு முயல் ரூ.500 வீதம், 2 ஆண், 10 பெண் முயல்கள். கூண்டு, உணவு தானியம் என மொத்த முதலீடு ரூ.25 ஆயிரம். வீட்டு முற்றம், மொட்டை மாடி, தோட்டம், காலியிடத்தில் வளர்க்கலாம். காற்றோட்டமான இடம் தேவை. கூண்டு முறையில் வளர்க்க 50 செ.மீ. உயரம், 60 செ.மீ. அகலத்துடன் கூண்டு இருக்க வேண்டும். கூண்டின் நீளம் தேவைக்கு ஏற்ப அமைத்து கொள்ளலாம். கூண்டின் அடிப்பாகம் எலி, பாம்புகள் நுழையாதவாறு 90 செ.மீ. உயரத்தில் இருக்க வேண்டும். உற்பத்தி 5வது மாதம் முதல், பெண் முயல்கள் இனப்பெருக்கத்தை துவங்கும். ஒரு முயல் 3 ஆண்டு உயிர் வாழும். 6 மாதத்துக்கொரு முறை 6 முதல் 10 குட்டி போடும். 3 மாதத்தில் இருந்து இறைச்சிக்கு பயன்படுத்தலாம். ரோமம், தோலையும் விற்கலாம்.
வகைகள்
இமாலயன், சோவியத் சின்சில்லா, டச்சு, ஆல்பினோ வகை இனங்கள் 2 முதல் 3 கிலோ எடை வரை வளரும். இறைச்சிக்காக பயன்படுத்தலாம். நியூசிலாந்து வெள்ளை, நியூசிலாந்து சிவப்பு, கலிபோர்னியா வகை 3 முதல் 4 கிலோ எடை வரை வளரும். முயல்களில் வெள்ளை ஜெயின்ட், சாம்பல் நிற ஜெயின்ட், பிளமிஸ் ஜெயின்ட் இனங்கள் 4 முதல் 6 கிலோ எடை வரை வளரும்.
ரோமம் விற்றால் காசு
சிறந்த ரக முடி 9 மாதத்தில் இருந்து கிடைக்கும். ஆண்டுக்கு பெண் முயல் 1 கிலோ முடியும், ஆண் முயல் 750 கிராம் முடியும் கொடுக்கும். முயல் தோலை பதனிட்டு நல்ல விலைக்கு விற்கலாம். முயல் தோலில் பர்ஸ், கையுறை, குல்லா, பொம்மை செய்யலாம். முயல் இறைச்சியை பிரியாணி, சில்லி, ரோஸ்ட், சூப், ஊறுகாய் தயாரிக்க பயன்படுத்தலாம். சந்தை வாய்ப்பு ஒரு கிலோ முயல் கறி ரூ.200க்கு விற்கலாம். நடமாடும் ஊர்திகள், முயல்கறி ஸ்டால், மொத்தக் கொள்முதல் விற்பனை நிலையங்கள், விடுதிகள், ஓட்டல்களுக்கு சப்ளை செய்யலாம்.
கறியில் மருத்துவ குணம்
முயல் இறைச்சியில் அதிக எலும்புகள் இருக்காது. குறைந்த அளவு கொழுப்பு, அதிக புரதம், உயிர்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது. முயல் இறைச்சி சாப்பிட்டால் குடல்புண், ஜீரண பிரச்னை வராது. வாதம் குறையும். உடல் பித்தம், காசநோய், இருமல், வாயு தொல்லை, மலச்சிக்கல் ஏற்படாது. இதய நோய் உள்ளவர்கள் கூட முயல் கறி சாப்பிடலாம். ஆடு, கோழி இறைச்சியைவிட இதில் கொழுப்பு குறைவு.
தினமும் 2 மணி நேரம் போதும்
முயலுக்கு பச்சை தாவரங்கள், காய்கள், பழங்கள், குதிரை மசால், வேலி மசால், முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, பீட்ரூட், புற்கள், பலா இலை, முள் முருங்கை போன்றவற்றை கொடுக்கலாம். இளம் முயல்கள் வேகமாக வளர்ச்சி அடைய சத்து மிகுந்த கலப்பு தீவனம் அவசியம். கலப்பு தீவனத்தில் உடைத்த மக்காச்சோளம், உடைத்த கம்பு, கடலை புண்ணாக்கு, கோதுமை தவிடு, தாது உப்பு கலவை ஆகியவற்றை கலந்து கொடுக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு முயலுக்கு 200 கிராம் முதல் 500 கிராம் வரை உணவு கொடுக்க வேண்டும். வீட்டில் வீணாகும் காய்கறிகளை கொடுக்கலாம். முயல் வளர்க்க தினமும் 2 மணி நேரம் செலவழித்தால் போதும். நல்ல லாபம் பார்க்கலாம். ரோமத்திற்காக வளர்க்கப்படும் அங்கோரா இனங்களை தனித்தனியாக கூண்டிலிட்டு வளர்க்க வேண்டும். கூண்டில் வைக்கோல் படுக்கை இட்டு வளர்ப்பதால் முயல்களுக்கு புண்கள் ஏற்படுவதை தடுக்கலாம். அதோடு 25 சதவீதம் அதிக ரோமம் கிடைக்கும். 3 மாதத்திற்கு ஒரு முறை முடியை வெட்டி எடுக்கலாம்.
பெண் முயல் அமைதியில்லாமல், வாயை தரையிலோ அல்லது கூண்டிலோ அடிக்கடி தேய்த்தால் சினை அறிகுறியாகும். சினை அறிகுறி தெரிந்தவுடன் பெண் முயலை ஆண் முயல் இருக்கும் கூண்டுக்கு எடுத்து சென்று இனச்சேர்க்கைக்கு விட வேண்டும். கருவுற்ற நாளில் இருந்து 29 நாட்களுக்குள் பெண் முயல் குட்டிகளை ஈனும்.
குட்டி ஈனுதல்
பொதுவாக முயல்கள் இரவில் தான் குட்டி ஈனுகின்றன. அவை குட்டி ஈனும் போது எந்த ஒரு தொந்தரவையும் விரும்புவதில்லை. 7 - 30 நிமிடத்திற்குள் குட்டி ஈனுதல் நடைபெற்று முடிந்து விடும். சில சமயம் எல்லாக் குட்டிகளும் தொடர்ந்து வெளி வராமல், சில குட்டிகள் பல மணி நேரம் கழித்தும் வெளிவரலாம். அச்சமயத்தில் ஆக்ஸிடோசின் ஊசி போடப்பட்டு குட்டிகள் வெளிக்கொணரப்படும். குட்டி போட்டவுடன் தாய் முயல் குட்டிகளை நக்கி சினைக்கொடியை உண்டு விடும். பிறந்த குட்டிகள் தாயிடம் பாலூட்ட முயலும். அவ்வாறு பாலூட்ட இயலாத குட்டிகள் உடல் நலம் குன்றி குட்டியிலேயே இறந்து விடும். தாய் முயலானது வேண்டுமளவு அதன் விருப்பத்திற்கு உணவு எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படவேண்டும். அப்போது தான் குட்டிகளுக்குத் தேவையான அளவு பால் கிடைக்கும். தாய் முயல் இரவில் தான் குட்டிகள் பால் குடிக்க அனுமதிக்கும். ஒரு ஈற்றில் 6-12 குட்டிகள் வரை ஈனலாம்.
வளர்ப்பு முயல்கள் எங்கு கிடைக்கும்?
முயல் பண்ணை அமைக்க விரும்புவோர் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியில் உள்ள முயல் பண்ணையில் மொத்தமாக முயல் வாங்கலாம். ஊட்டி சாந்தி நல்லாவில் உள்ள செம்மறி ஆடு ஆராய்ச்சி நிலையத்திலும் கிடைக்கும். முயல்களை 2 கிலோ உடல் எடை உள்ளபோது வாங்க வேண்டும். பெண் முயலுக்கு குறைந்த பட்சம் 8 பால் காம்புகள் இருக்க வேண்டும். பெண், ஆண் முயல்களை தனித்தனியே வெவ்வேறு பண்ணைகளில் இருந்து வாங்க வேண்டும். அல்லது முயல் வளர்ப்போரிடமும் பெற்றுக் கொள்ளலாம்.
பல்கலையில் பயிற்சி
குறைந்த செலவு, இடம், முதலீடு, குறுகிய காலத்தில் கணிசமான வருவாய் ஈட்டும் தொழிலாக முயல் வளர்ப்பு உள்ளது. சாதாரண தீவனத்தை தின்று சிறந்த இறைச்சியாக மாற்றும் தன்மை முயலுக்கு உண்டு. முயலை இறைச்சிக்காகவும், தோல் மற்றும் ரோமத்திற்காகவும் வளர்க்கலாம். முயல் வளர்க்க கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மையம் பயிற்சி அளித்து வருகிறது. முயலை காதைப்பிடித்து தூக்கக்கூடாது. முதுகு பகுதியை பிடித்து தூக்க வேண்டும். வளர்ந்த முயல்களை முதுகு பகுதியை ஒரு கையாலும், அதன் வயிற்று பகுதியை ஒரு கையாலும் தாங்கிப் பிடித்து தூக்க வேண்டும்.
நோய்கள்
முயலுக்கு தோல் சிரங்கு, ரத்த கழிச்சல், சுவாச நோய், குடல் அழற்சி போன்ற நோய்கள் ஏற்படும். அப்படி வந்தால் கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.

செவ்வாய், 22 அக்டோபர், 2013

தஞ்சையில் தொடங்கியது நாட்டுக்கோழி வளர்ப்பு பயனாளிகளுக்கு 5 நாள் பயிற்சி

தஞ்சையில் தொடங்கியது நாட்டுக்கோழி வளர்ப்பு பயனாளிகளுக்கு 5 நாள் பயிற்சி 120 பேர் பங்கேற்பு

தஞ்சாவூர்,
தஞ்சையில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயனாளிகளுக்கு 5 நாள் பயிற்சி நேற்று தொடங்கியது. இதில் 120 பேர் கலந்து கொண்டனர்.
5 நாள் பயிற்சி
தஞ்சை கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தமிழக அரசின் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2013–14–ம் ஆண்டிற்கு நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் 120 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 5 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி தஞ்சை தலைமை தபால் நிலையம் எதிரே உள்ள கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. இந்த பயிற்சிக்கு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் செல்வவிநாயகம் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் இளங்கோவன் வரவேற்றுப்பேசினார்.
120 பேர் பங்கேற்பு
இதில் தஞ்சை கால்நடை பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய பேராசிரியர் புண்ணியமூர்த்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கோழி வளர்ப்புக்கு கொட்டகை அமைப்பது, எவ்வாறு பராமரிப்பது, நோய்களில் இருந்து எவ்வாறு காப்பது என்பது குறித்து விளக்கம் அளித்தார். இதில் 120 பயனாளிகள் கலந்து கொண்டனர்.
இந்த திட்டத்தில் ஒரு பயனாளிக்கு ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் திட்ட மதிப்பட்டில் ரூ.64 ஆயிரத்து 250 மானியம் ஆகும். இதில் ஒரு பயனாளிகளுக்கு தலா 250 கோழிக்குஞ்சுகள் வீதம் 3 தவணைகளில் கோழிக்குஞ்சுகள் வழங்கப்படும். மேலும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வாரம் ஒருமுறை ஆய்வு செய்யப்பட்டு கோழிகளுக்கு தடுப்பூசிகளும் போடப்படும். இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை கால்நடை மருத்துவர் முகமதுசெரீப் செய்திருந்தார்.

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

வெள்ளாடு இனங்களை தேர்வு செய்தல்

வெள்ளாடு இனங்களை தேர்வு செய்தல்
ஜமுனாபாரி.
  • நல்ல உயரமானவை
  • காதுகள் மிக நீளமனவை
  • ரொமானிய மூக்கமைப்பு கொண்டவை.
  • கிடா 65-85  கிலோ பெட்டை - 45-60 கிலோ.
  • பெரும்பாலான ஆடுகள் ஒரு குட்டியே மட்டும் ஈனும்
  • 6 மாத குட்டிகளின் எடை 15 கிலோ.
  • தினம் 2- 2.5 லிட்டர் பால் கொடுக்கும் திறன்
தலைச்சேரி / மலபாரி
  • வெள்ளை , பழுப்பு மற்றும் கருப்பு நிறங்கள்
  • 2-3 குட்டிகளை போடும் திறன்
  • கிடா - 40-50 கிலோ பெட்டை - 30 கிலோ.
போயர்
  • இறைச்சிக்காக உலகம் முழுவதும் வளர்க்கப்படுகிறது.
  • வேகமான வளர்ச்சி திறன் கொண்டவை.
  • கிடா - 110-135 கிலோ பெட்டை - 90-100 கிலோ.  
  • குட்டிகள் 90 நாட்களில் 20-30 கிலோ இருக்கும்