யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

ஞாயிறு, 5 மே, 2013

கைகளால் இயக்கினால், கறக்குது பால்!
ஜனவரி 3 ம் தேதி தொடங்கி 7ம் தேதி வரை சென்னை அருகேயுள்ள காட்டாங் கொளத்தூர், எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழக வளாகத்தில் தேசிய அறிவியல் மாநாடு நடைபெற்றது. அதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியில், ஏர் கலப்பை முதல் ஏவுகணை வரை பலவிதக் கருவிகள் இடம் பெற்றிருந்தன.
அந்த வரிசையில், தேசியக் கண்டுபிடிப்பு மையம் (National Innovation Foundation) அமைத்திருந்த அரங்கில், கிராமப்புற அடிமட்டக் கண்டுபிடிப்பாளர்களால் வடிவமைக்கப்பட்ட கருவிகள் வைக்கப்பட்டிருந்தன. அதில், கைகளால் இயங்கும் பால் கறவை இயந்திரம், அனைவரையும் ஈர்ப்பதாக இருந்தது.

கர்நாடக மாநிலம், மங்களூரைச் சேர்ந்த ராகவ கவுடா என்கிற விவசாயி தான் இரத வடிவமைத்திருக்கிறார். அவரிடம் பேச்சுக் கொடுத்தபோது, “பத்து மாடுகள் வைத்திருந்தேன், எ்போதாவது வெளியூர்களுக்குச் செல்ல நேரிடும் போது, பால் கறக்க சம்பளத்துக்கு ஆட்களை வைக்கலாம் என்று தேடிப்பார்த்தால், ஆள் கிடைப்பது அரிதாக இருந்தது. அந்த மாதிரி இக்கட்டான சமயங்களில் வீட்டில் உள்ளவர்களே எளிதாக கறப்பதற்கு ஏற்ப கருவி இருந்தால், வசதியாக இருக்குமே என்று யோசித்தபோது உருவானதுதான் இந்த இயந்திரம். இதன் மூலம் ஐந்து நிமிடத்தில் பாலைக் கறந்துவிட முடியும். ஒரே சமயத்தில் இரண்டு மாடுகளிடம் கூட பால் கறக்கலாம். இதன் அடக்க விலை.. 11,500 ரூபாய். இந்தக் கண்டு பிடிப்புக்காக கடந்த 2005 ம் ஆண்டு ‘தேசிய கண்டுபிடிப்பு மையம் ‘ எனக்கு விருது கொடுத்து பாராட்டியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக வணிக ரீதியாக தயாரித்து விற்பனை செய்வதற்கும் உதவி வருகிறார்கள்’ என்று சொன்னார் ராகவ கவுடா.

தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய கண்டுபிடிப்பு மையத்தின் விஞ்ஞானி டாக்டர். ஆர்.கே. ரவிக்குமார், “மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் உதவியால் பேராசிரியர் அனில் குப்தா 2000 ம் ஆண்டு இந்த அமைப்பைத் தொடங்கினார். இதுவரை 1 லட்சத்து 40 ஆயிரம் கண்டுபிடிப்புகளை உலகுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறோம். ஆண்டு தோறும் போட்டி அறிவித்து சிறந்த அடிமட்டக் கண்டுபிடிப்பாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உதவி வருகிறோம். இந்த ஆண்டுக்கானப் போட்டி தற்போது அறிவிக்கப்பட்டள்ளது. விவசாயம், கால்நடை.. சார்ந்த சிறியக் கருவிகள், புதியத் தொழில் நுட்பங்கள் வைத்துள்ளவர்கள் பங்கேற்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31” என்ற தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.

தொடர்புக்கு 
அலைபேசி : 098250-71992
இணையதளம்: www.nif.org.in

கருத்துகள் இல்லை: