யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

மானிய விலையில் கால்நடை தீவனம்

மானிய விலையில் கால்நடை தீவனம்: ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் மானிய விலையில் கால்நடை தீவனம் பெற்றுக்கொள்ளலாம். 

இது தொடர்பாக ஆட்சியர் ரவிகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோடை காலத்தில் கால்நடைகளின் தீவனப் பற்றாக்குறையைப் போக்குவதற்கும், விவசாயிகளுக்கு மானிய விலையில் உலர் தீவனம் கிடைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் ஒரு கிலோ உலர் தீவனம் ரூ.2க்கு வழங்க வழி செய்யப்பட்டுள்ளது. 

அடையாள அட்டை வைத்திருக்கும் கால்நடை வளர்ப்போருக்கு ஒரு மாட்டிற்கு நாள் ஒன்றிற்கு 3 கிலோ வீதம் அதிகபட்சமாக 5 மாடுகளுக்கு உலர் தீவனம் வாரந்தோறும் பெற்றுக்கொள்ளலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் புதுக்கோட்டை, கருங்குளம், தென்திருப்பேரை, மெஞ்ஞானபுரம், கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் ஆகிய 6 கால்நடை மருந்தகங்களில் உலர் தீவன மையங்களில் 22.02.2014 முதல் பெற்றுக் கொள்ளலாம்.

எனவே, கால்நடை வளர்ப்போர் அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களில் தங்களது குடும்ப அட்டை நகல் மற்றும் புகைப்படத்தினை கொடுத்து உலர் தீவனம் வாங்குவதற்கு உரிய அடையாள அட்டை பெற்று பயனடைய மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். 

கருத்துகள் இல்லை: