யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

வியாழன், 20 பிப்ரவரி, 2014

ஒரு ஆட்டு இடையர் ஒருவரின் நேர்மைத்தனத்தின் காணொளி

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

சவூதி அரேபியா :

சவூதி அரேபியாவில் இருந்து வெளியாகிய ஒரு ஆட்டு இடையர் ஒருவரின் நேர்மைத்தனத்தின் காணொளி வெளியாகியது என்பதை முஸ்லீம்கள் பலர் அறிவார்கள் பலர் அந்த காணொளியை பார்த்திருக்கலாம்

அந்த கானொளியில் அந்த ஆடு மேய்ப்பவரின் நேர்மையை சொத்திக்க சவூதி மக்கள் நினைத்த பொழுது
அவர் கூறிய வார்த்தை இந்த ஆடுகள் என்னுடையது அல்ல இந்த பொருளுக்காக நீங்கள் எனக்கு இரண்டு மில்லியன் சவூதி ரியால் கொடுத்தாலும் நான் கொடுக்க மாட்டேன் என்று கூறினார் அதற்க்கு அந்த சோதனையாளர்கள் அவரிடம் இங்கு யாரும் இல்லையே பிறகு ஏன் பயம் கொள்கிறீர்கள் அதற்க்கு அந்த சகோதரன் கூறியவார்த்தை அல்லாஹ் பார்க்கவில்லை அல்லாஹ் எங்கு சென்றான் "

சுபுஹானல்லாஹ் சுபுஹானல்லாஹ்

ஆனால் அவரின் நேர்மைக்கு அல்லாஹ் அவர் கூறிய வார்த்தையையே அவருக்கு பரிசாக மாற்றிவிட்டான்
மாஷா அல்லாஹ்

ஆம் அந்த சகோதரனுக்கு சவூதியில் உள்ள சூடானிய தூதரகம் இரண்டு மில்லியன் பணத்தை அந்த சகோதரனுக்கு பரிசாக கொடுத்துள்ளது மாஷா அல்லாஹ்

அதற்க்கான ஆதாரம்
http://sabq.org/6RRfde

அல்லாஹ் தனது திருமறையில் கூறியதை நிறைவேற்றியுள்ளான்

" "(அல்லாஹுவை அஞ்சினால் )அவர் எண்ணியிராத விதத்தில் வாழ்வாதரங்களை அல்லாஹ் வழங்குவான் எவர் அல்லாஹுவின் மீது முழுமையாக நம்பிக்கை வைக்கிறாரோ அவருக்கு அல்லாஹ் போதுமானவன் "(63 - 3 )

அந்த கானொளியை நீங்கள் பார்க்க வேண்டும் என்று விரும்பினால் இந்த YOUTUBE லிங்கில் பார்க்கலாம்

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=z_4EyCrnGG8

மாஷா அல்லாஹ்

யா அல்லாஹ் எனக்கும் இந்த சகோதரனை போல் உன்னுடைய அச்சத்தை அதிகப்படுத்துவாயாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

ஹஸ்புனல்லாஹ் வ நிஃமல் வகீல்
தவகல்த்து ஆலல்லாஹ் லாஹவ்ல வளாகுவ்வத்த இல்லாபில்லா

நம்மை பாதுகாக்க அல்லாஹ் ஒருவனே போதுமானவன்

கருத்துகள் இல்லை: