யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

தீவனத்தை அதிகப்படுத்த விவசாயிகள் கோரிக்கை


மானிய விலையில் வழங்கப்படும் கால்நடைகளுக்கான உலர் தீவனத்தை அதிகரிக்குமாறு, கரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 இடங்களில், கால்நடைகளுக்கான உலர்தீவன கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், மானியவிலையில், கால்நடைகளுக்கான உலர் தீவனம் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு மாட்டுக்கு நாளொன்றுக்கு 3 கிலோ வீதம், அதிகபட்சமாக 5 மாடுகளுக்கு 15 கிலோ உலர் தீவனம் வழங்கப்படுகிறது.
இந்த அளவு போதுமானதாக இல்லை என கூறும் விவசாயிகள், இதனை அதிகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அரசு வழிகாட்டுதலின்படியே, கால்நடை தீவனம் வழங்கப்படுவதாக தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: