யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

உழவுக்கு உயிரூட்டு உழவர்க்கு வாழ்வூட்டு கண்காட்சி தொடக்கம்

உழவுக்கு உயிரூட்டு உழவர்க்கு வாழ்வூட்டு கண்காட்சி தொடக்கம்
 
பதிவு செய்த நாள் - பெப்ரவரி 21, 2014, 10:19:51 PM
மாற்றம் செய்த நாள் - பெப்ரவரி 21, 2014, 10:19:51 PM


புதிய தலைமுறையின் உழவுக்கு உயிரூட்டு. உழவர்க்கு வாழ்வூட்டு. வேளாண் கண்காட்சி திருச்சியில் இன்று தொடங்கியுள்ளது.
தேசியக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இயற்கை வேளாண்மை குறித்தும், நவீன வேளாண் கருவிகள் குறித்தும் இந்த அரங்குகளில் விவசாயிகள் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண் கண்காட்சி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற உள்ளது. தினம்தோறும் பிற்பகல் 2 மணிக்கு சிறப்பு கருத்தரங்கமும் நடைபெற உள்ளது.
இதில் வேளாண் பேராசிரியர்கள் மற்றும் விவசாயத் துறை அறிஞர்களுடன், சாதனை விவசாயிகளும் பங்கேற்று விவசாயம் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கின்றனர். மேலும் வங்கிக் கடன் பெறுவது குறித்தும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
PTTV_SNAP_NEWS_UU_3
PTTV_SNAP_NEWS_UU_2
PTTV_SNAP_NEWS_UU_1

மானிய விலையில் கால்நடை தீவனம்

மானிய விலையில் கால்நடை தீவனம்: ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் மானிய விலையில் கால்நடை தீவனம் பெற்றுக்கொள்ளலாம். 

இது தொடர்பாக ஆட்சியர் ரவிகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோடை காலத்தில் கால்நடைகளின் தீவனப் பற்றாக்குறையைப் போக்குவதற்கும், விவசாயிகளுக்கு மானிய விலையில் உலர் தீவனம் கிடைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் ஒரு கிலோ உலர் தீவனம் ரூ.2க்கு வழங்க வழி செய்யப்பட்டுள்ளது. 

அடையாள அட்டை வைத்திருக்கும் கால்நடை வளர்ப்போருக்கு ஒரு மாட்டிற்கு நாள் ஒன்றிற்கு 3 கிலோ வீதம் அதிகபட்சமாக 5 மாடுகளுக்கு உலர் தீவனம் வாரந்தோறும் பெற்றுக்கொள்ளலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் புதுக்கோட்டை, கருங்குளம், தென்திருப்பேரை, மெஞ்ஞானபுரம், கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் ஆகிய 6 கால்நடை மருந்தகங்களில் உலர் தீவன மையங்களில் 22.02.2014 முதல் பெற்றுக் கொள்ளலாம்.

எனவே, கால்நடை வளர்ப்போர் அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களில் தங்களது குடும்ப அட்டை நகல் மற்றும் புகைப்படத்தினை கொடுத்து உலர் தீவனம் வாங்குவதற்கு உரிய அடையாள அட்டை பெற்று பயனடைய மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.