யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

Handling of goats for new goat farmers.

Handling of goats plays an important role in stall feed and semi-stall feed goat farming methods.It is one of the main factor responsible for a successful and non successful goat farm.New goat farmers must have some previous experience of goat breeding or should have workers on his farm that have some knowledge regarding goat farming.Also you can't depend on workers at all as most of them are not trusty now days.So its always better to handle the goats personally or should spend maximum of your day time in your farm.If you won’t handle your goats properly you will surely face severe losses.Here handling of goats means-1.Providing balanced nutrition.2.Proper vaccinations, for example if not vaccinated  against F.M.D they develops ulcers surrounding their mouths and it gets easily spread to all goats of your pen.3. Identifying of a specific symptom of a disease , if a disease is identified to late it will surely spread to all goats of your farm.4.Properly milking of goats, especially of miscarriage/aborted goats you have to take all milk from their glands manually.If they have not milk and are placed as they are,there will be blocking of udder(mammary glands) which may even lead to death.5.Proper cleaning of floor where goats are sitting, if not cleaned properly germs(bacteria) gets accumulated in their internal openings like udder,vagina,eyes,nose etc which further leads to cancer(developing of tumors).In such case goat shows poor performance,yields less milk and gives birth to single kid even if it is of excellent quality of breed,takes longer time to get pregnant,miscarrages several times,gestation period increase beyond the normal limit.At such time,most of the goat farmers curses the sellers assuming that they have provided them low quality breed or diseased breed.But thats not true,its the goat farmers(buyers) responsibilty to handle it properly.Such things mostly happens when the owner doesnt looks his farm personaly or don’t have any knowledge regarding breeding of goats,he depends on their workers assuming that they will/are doing well and the problem is with the goat(breed) only which the seller has provided to him.These are only a few examples to explain handling of goats,there are lots of other things too which the goat farmer have to consider while breeding them
Estrus cycle,Mating,Puberty:ESTROUS CYCLE:The estrous cycle is the period of time from the beginning of one heat period to the beginning of the next. Estrous cycle length of goats  is of 21 days.Goats are seasonal and short-day breeders, The most natural time for Goat to breed is fromlate June -Sept and feb-march, but stall feed goats may breeds  throughout the year.Estrus, or heat, is the period of time when the female is sexually receptive to the buck.It is also called as mating period. Estrus can last from 24 to 48 hours in does at the end or beginning of oestrus cycle. Ovulation normally occurs toward the end of the estrus cycle. Typical ovulation times for the does are about 24 to 36 hours from the beginning of estrus. Following ovulation, goat eggs are generally capable of fertilization for 10 to 25 hours. Mating of a buck with a doe in the estrus period causes successful fertilization, which makes the doe pregnant and will be ready to deliver kids in next 5 months.SIGN OF HEAT IN DOE:A doe in heat is restless, bleats and urinates frequently, and wags her tail rapidly. She may also experience loss of appetite and rub against other goats in the herd. Other signs include redness and swelling around the vulva, which may have a thin mucous discharge.NATURAL PROCESS OF MATING:A doe in season (in heat) will indicate her interest in breeding by wagging her tail rapidly for the buck; this is called flagging. Her urine contains chemicals which tell the buck that she is ready to breed. The buck will urinate upon his face, beard, and front legs. He will approach the flagging doe, she will squat and urinate, and he will place his nose in the urine stream. Raising his head high, the buck will curl his upper lip to detect the pheromones which tell him that the doe is receptive to being bred.PUBERTY:In goats sexual development is influenced by both genetic and environmental factors. In does and bucks the age at puberty ranges from 150 to 230 days, dependent on nutrition, location and season of birth. Nutrition is among the most significant factors influencing reproductive development and the onset of puberty. A low plane of nutrition delays first estrus and reduces uterine and ovarian weights, while having no effect on the partitioning of fat and protein and the weight of other organs. Increasing the overall plane of nutrition generally advances the onset of puberty, but overfeeding will decrease subsequent fertility and impair mammary gland development.

ஊறுகாய் புல் தயாரிப்பு - Silage Making

ஊறுகாய் புல் தயாரிப்பு - Silage Making

  • பசுந்தீவனங்கள் அதிகமாக கிடைக்கும் காலங்களில்( மழைக் காலங்கள் ) தேவைக்கு போக மீதம் இருப்பவற்றை பதப்படுத்தி ,அவற்றை கோடைக்காலங்களில் பயன்படுத்த இது ஒரு சிறந்த முறையாகும் .
  • முற்றிபோன மற்றும் தடிமான தண்டுடைய தீவனப்பயிர்களை இதன் மூலம் பதப்படுத்தி அவற்றின் தரத்தை உயர்த்தலாம்.மேலும் இவைகள் வீணாகாமல் கால்நடைகள் உட்கொள்ளும்.
  • இதில் ஈரப்பதம் பாதுகாக்கப்படுவதால் பசுந்தீவனத்தின் தன்மை மற்றும் சத்துகள் மாறுவதில்லை.எனவே பசுந்தீவனம் கிடைக்காத கோடை காலங்களில் ஊறுகாய் புல்லை கால்நடைகளுக்கு அளித்து ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் பராமரிக்கலாம்.
  • தீவனப்பயிருடன் உள்ள களை விதைகள் இம்முறையில் அழிந்துவிடும்.
  • ஊறுகாய் புல் பல ஆண்டுகளுக்கு கெட்டுப்போகாமல் அப்படியே இருக்கும்.
செய்முறை
  • மக்காசோளம் , சோளம்,கரும்பு தோகை,  கம்பு , CO-3 மற்றும் CO-4 போன்றவை ஊறுகாய் புல் தயாரிக்க ஏற்றவையாகும்.
  • ஊறுகாய் புல் குழி - மேட்டுப்பாங்கான இடத்தில் மழை நீர் மற்றும் காற்று புகாவண்ணம் அமைக்கப்பட வேண்டும்.
  • அளவு - 1 மீ x 1மீ  x 1மீ அளவு குழியில் 500 கிலோ தீவனப்பயிரை சேமிக்கலாம்.
  • குழி அமைக்க முடியாத இடங்களில் கோபுரம் போல சிமெண்டில் அமைத்து அதில் பதப்படுத்தி தயார் செய்யலாம்.
  • தீவனப்பயிர்களை பதப்படுத்த சேர்க்கவேண்டிய பொருள்கள் -- சர்க்கரை பாகு( 4 விழுக்காடு ) , அசிடிக் அமிலம் அல்லது சிட்ரிக் அமிலம் ( 1 % ) , தவிடு அல்லது சோளம் அல்லது கம்பு அல்லது மக்காசோளம் (5 %), சுண்ணாம்புத்தூள் ( 1 %).
  • பசுந்தீவனப் பயிர்களை பூ பூக்கும் தருணத்தில் அறுவடை செய்து ஈரப்பதம் 60 விழுக்காடு வரை உலர்த்த வேண்டும். அதாவது 3 முதல் 5 மணி நேரம் வரை வயலில் அப்படியே போட்டுவிடவேண்டும்.
  • ஊறுகாய் புல் குழி முதலில் வைக்கோலை சிறிதளவு பரப்பி விடவேண்டும்.
  • பசுந்தீவனப்பயிர்களை தீவன நறுக்கிகளை ( Chaff Cutter ) கொண்டு சிறு துண்டுகளாக நறுக்கி குழியில் இடவேண்டும்.
  • ஒவ்வொரு 2 அடிக்கும் நன்றாக மிதித்து காற்றை வெளியேற்றி விடவேண்டும்.மேலும் ஒவ்வொரு 2 அடிக்கும் பதப்படுத்த தேவையான பொருட்களை சரியான அளவில் நன்றாக சேர்க்கவேண்டும்.
  • குழியை 2 நாட்களுக்குள் நிரப்பிவிடவேண்டும்.
  • மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே செல்லாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்
  • நில மட்டத்திற்கு மேல் 5 - 6 அடி உயரம் வரை நிரப்பிய பின், பாலித்தீன் கொண்டு மூடி விடவேண்டும்.
  • இதன் மேல் சாணம் மற்றும் மண் கொண்டு காற்று புகாவண்ணம் பூசி மொழுகவேண்டும். இவற்றில் வெடிப்பு ஏற்பட்டால் சேறு அல்லது சாணம் கொண்டு பூசி காற்று உள்ளே புகுவதை தடுக்கவேண்டும். இல்லாவிட்டால் ஊறுகாய் புல் தீவனம் கெட்டுவிடும்.
  • 2 மாத காலத்தில் ஊறுகாய் புல் தீவனம் உபயோகத்திற்கு தயாராகிவிடும். தேவையானதை குழியின் ஒரு பகுதியிலிருந்து எடுக்கவேண்டும்.
  • ஒரு முறை குழியினை திறந்து விட்டால் எவ்வளவு விரைவில் உபயோகப்படுத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பயன்படுத்தவேண்டும்.

HOW DO I USE MEDICINES CORRECTLY

HOW DO I USE MEDICINES CORRECTLY

HOW DO I USE MEDICINES CORRECTLY?
  • Medicine can be used to treat animals when sick or wounded
  • Medicine can also be used to prevent the animal from getting sick




  • You need to know what disease you are treating or preventing
  • Make sure you are using the right medicine







  • Always read the instructions that come with the medicine
  • Or, ask the shopkeeper, an animal health technician, an extension worker, experienced farmer or veterinarian to read and explain them to you



  • Make sure the medicine can be used for goats
  • For example, medicine for chickens cannot be used for goats


  • Check the expiry date
  • If the medicine is past the expiry date it will not work properly
  • If the date is given as:
        EXP. DATE 03 2007
        03 refers to the month   
        2007 refers to the year
  • Do not use that medicine after March 2007
 




  • Medicine needs to be kept cool and in the shade
  • Make sure that the medicine was kept cool and in the shade in the shop before you bought it
  • Make sure that you keep the medicine in a cool place away from sunlight



  • It is important to give the right dosee.g. bigger goats take bigger doses
  • Too little may not work, and too much may be harmful
Various ways of giving medicine...

By injection (Photo: Leslie Harrison)



By pour-on (Photo: Leslie Harrison)

In the mouth (Photo: Leslie Harrison)













  • Make sure that you give the medicine by the
    right method
  • The instructions will tell you how to give the medicine: 
     


 

  • Disposable needles and syringes used for injecting should be new and in their original packaging so that they are clean and the germs are killed
  • Use a disposable syringe and needle only once; then discard them
  • Do not use the same needle on different animals
  • Collect dirty needles in an empty cold drink can
  • When it is full, ask an animal health technician to take it away to destroy it
  • Drop the used syringe in the pit toilet


  • Give the medicine as many times as the instructions say, or it will not work properly
  • For example, some injections need to be given for 3 days. If you do not give the medicine for 3 days, you will have wasted your money and the animal will not get better


  • For the medicine to be effective, it must spread through the goat's body and the body fluids, including the milk
  • This means that there is medicine in the body parts and body fluids, including the milk
  • Taking in animal medicine can make humans sick
  • Read the instructions so that you can tell how many days to wait after giving the medicine before you may slaughter the animal for meat or drink the milk from the animal
  • The period to wait is called the medicine's withdrawal period, which is given as days or weeks





  • Keep all medicines, syringes and needles away from children, to prevent the children from 

சனி, 5 ஏப்ரல், 2014

தொலைப்பேசி வாயிலான கால்நடை வளர்ப்பு

ஏப்ரல் 5
இன்று மாலை 4 மணிக்கு தொலைப்பேசி வாயிலான கால்நடை வளர்ப்பு குறித்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு கால்நட்டை வளர்ப்பு குறித்த சந்தேகங்களுக்கு தீர்வு பெறுங்கள்.
அனுபவம் மிக்க கால்நடை மருத்துவர்கள் கால்நடை வளர்ப்பு குறித்த உங்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் அளிக்க உள்ளார்கள்.
கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்காணும் தொலைப்பேசி எண்ணில அழைத்து பதிவு செய்து கொள்ளுங்கள்...
பதிவு செய்ய எண்: 7708 709 710
வாழ்த்துக்கள்..
Visit வேளாண்மைத் தகவல் ஊடகம் at: http://www.agriinfomedia.com/?xg_source=msg_mes_network

புதன், 2 ஏப்ரல், 2014

இன்குபேட்டர் மின்சார குஞ்சு பொரிப்பான்

NEW MODEL IMPORTED FAMILY INCUBATOR 

இன்குபேட்டர் மின்சார குஞ்சு பொரிப்பான் கோழி வாத்து மற்றும் அனைத்து வகை முட்டைகளைப் பொரிக்க வைக்க










மேலும் விபரங்களுக்கு மற்றும் வாங்கிட அழைத்திடுங்கள்.



   Contact Suppiler   
E:yarasoolgoatfarm@gmail.com
E:hajamohinudeen20062@gmail.com
Skype:hajamohinudeenayisha
Mob:+919600457130/+918870511608
whatsapp-+971507272189







திங்கள், 31 மார்ச், 2014

வெட்டிவேர்

vettiver-pannaiyar
நாணல் மற்றும் தர்ப்பைப் புற்களைப் போல் வளரும். இது நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும்.
வேர் கொத்துக்கொத்தாக இருக்கும். இதன் வேரை வெட்டி எடுத்த பின் புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடுவதால் வெட்டிவேர் என வழங்கப்படுகிறது.
இதன் வேர் கருப்பு நிறமாக மணத்துடன் இருக்கும். இதனை பெண்கள் மணத்திற்காக தலையிலும் அணிவதுண்டு. இது உடலின் வேர்வையும் சிறுநீரையும் பெருக்கி வெப்பத்தை அகற்றி உடலுக்கு உரமாக்கியாகவும் செயல்படுகிறது.
இதை ஒரு வருடத்தில் வெட்டி எடுக்கலாம்.
வேர் குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது. இதன் பூ ஊதா நிறத்தில் இருக்கும். இதன் வேர் இரண்டு முதல் நான்கு மீட்டர் ஆழம் வரை செல்லும்.
இது லெமன்கிரேஸ், பாம்ரோசா புல் போன்று வளரும்.
வெட்டி வேர் மண் அரிப்பைத் தடுக்கும். மாடுகள் இதன் புல்லைத் தின்னும்.
நம் முன்னோர்கள் வெட்டிவேர் ஊறப்போட்ட சில்லென்ற பானைத்தண்ணீர், வெக்கையை விரட்டி அடிக்க வெட்டிவேர் தட்டி என்று அதன் மகிமையை முழுவதுமாக உணர்ந்திருந்தார்கள்.
வெட்டிவேர் ஊறிய தண்ணீரைக் குடித்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும் என்றும் கூறுகிறார்கள்.
இக்கால விஞ்ஞானிகள் வெட்டிவேர் கொண்டு பாய், காலணி, தலைக்குத் தொப்பி போன்றவற்றை தயாரிக்கிறார்கள்.
வெளிநாட்டவர் பலரும் அதன் பயனை அடைகிறார்கள். இத்தகைய மருத்துவம் வாய்ந்த வெட்டிவேரை எப்படி பயிர்செய்வது என்று பார்ப்போம்.
இதற்கு எத்தகைய மண்ணாக இருந்தாலும் பாதகமில்லை.ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் இரண்டு டன் வேர் நிச்சயம்.
மணல்பாங்கான நிலமாக இருந்தால் வேர் நன்கு இறங்கி விவசாயிகளுக்கு நல்ல மகசூலைத் தரும். இரண்டு டன்னுக்கு மேலும் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.
இன்றைய நிலவரப்படி ஒரு டன் ஐம்பதாயிரம் ரூபாய் வரை விலைபோகின்றது. மூலிகை எண்ணெய் தயாரிப்பவர்களும் வாசனை திரவியங்கள் தயாரிப்பவர்களும் உடனடியாக வாங்கிக்கொள்ள தயாராக உள்ளனர்.
செடியை வேர் அறுபடாமல் பிடுங்கி எடுத்து, மேலே உள்ள பச்சை செடியை நீக்கிவிட்டு, வேரை மட்டும் மண் போக அலசி, உலர்த்தி கொடுப்பது அவசியம். 12 மாதங்களில் இருந்து 14 மாதங்களுக்குள் அறுவடை செய்துகொள்ளலாம்.
ஒரு ஏக்கருக்கு 12,000 முதல் 15,000 வரை நாற்றுகள் தேவைப்படும். ஒரு நாற்று 60 பைசாவிற்கு வாங்கி பயிரிட வேண்டியதுதான். முதல்முறை மட்டும்தான் இந்த செலவு. அடுத்தமுறை நம் நிலத்தில் இருந்தே நாற்றுகள் எடுத்துக்கொள்ளலாம்.மிகுதியாக உள்ளதை தேவையானவர்களுக்கு விற்றுவிடலாம்.
ரசாயன உரம் தேவையில்லை. பூச்சிமருந்து தேவையில்லை. வெட்டிவேர் செடியே பூச்சிகொல்லியாக செயல்படுகிறது.
பெரிய காய்கறித்தோட்டம் வைத்திருப்பவர்கள் ஊடுபயிராகவோ வரப்புகளிலோ நெருக்கமாக நட்டுவிட்டால் அதுவே பூச்சிவிரட்டியாகவும் செயல்படும்.
வேரை விற்று வரும்படியும் பார்க்கலாம்.
அதிக தண்ணீரும் இதற்கு தேவையில்லை. வாரம் ஒரு முறை தண்ணீர் விட்டாலே போதுமானது.
கரும்பு நடுவதுபோல் நடவேண்டும். பார்ப்பதற்கு உலர்ந்தாற்போல் இருந்தாலும் நாற்று நட்ட பதினைந்திலிருந்து இருபத்தி ஐந்து நாட்களுக்குள் பச்சை பிடித்துவிடும்.
மூன்று மாதங்கள் கழித்து கால் மாற்றிவிட வேண்டும். ஆறு மாதங்கள் கழித்துகளை எடுக்க வேண்டும். அவ்வளவுதான். அதற்குப்பிறகு 13ம் மாதத்தில் அறுவடைதான்.
தொடர்புக்கு: எம்.அகமதுகபீர், 268/77, பழைய ஹவுசிங் யூனிட், எல்லீஸ் நகர் (அஞ்சல்), தாராபுரம்-638 657.
-எம்.அகமது கபீர், வேளாண்மை ஆலோசகர், அக்ரி கிளினிக், 09360748542.
வெட்டிவேர் நாற்றுகள்
வெட்டிவேர் மகிமையை நாம் ஏற்கனவே படித்து உள்ளோம்.இயற்கை முறையில் சாகுபடி செய்துவரும் ராஜகோபாலன் கூறுவது:
இது ஒரு லாபகரமானபயிர்.
இதற்கு அதிக ஆள் தேவையில்லை.
அதிக தண்ணீர் தேவையில்லை.
அதிக வெயில் தேவையில்லை.
அப்படியே அதிக தண்ணீர், அதிக வெயில் இருந்தாலும் அதனால் பெரிய பாதிப்பு இல்லை.
வெட்டிவேர் புல்லானது நல்ல மருத்துவகுணம் உள்ளதால் இதற்கு சந்தையில் நல்ல கிராக்கி இருக்கிறது.
பயிர் செய்வதற்கு தேவையான இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட 50,000 வெட்டிவேர் நாற்றுகள் விலைக்கு உள்ளன. வேண்டுவோர்
தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
வீ.ராஜகோபாலன், ஸ்ரீதேவி மெடிக்கல்ஸ், திருவளப்பாடி, அத்தாணி, அறந்தாங்கி வட்டம், புதுக்கோட்டை-614 630.அலைபேசி எண்: 04371244 408.

இயற்கைவழி கோழி பண்ணை

 இன்று கோழி பண்ணை என்றவுடன் நம் எண்ண கண்களில் தோன்றுவது, நாலு சென்டில் கம்பி வலைகளால் சுற்றி வளைத்து கட்டப்பட்ட ஒரு கட்டிடம் உள்ளே சில ஆயிரம் கோழி குஞ்சுகள், அதற்கு உணவாக பரிமாற ரசாயன உணவுகள் மேலும் அதனுடைய வளர்ச்சியை இயற்கைக்கு மாறாக ஊக்குவிக்க சில ரசாயன மருந்துகள், மேலும் செயற்கையாக குஞ்சு பொரிக்க வைக்கவும் கோழி குஞ்சுகளுக்கு இதமான சூட்டினை கொடுத்து கொண்டிருக்கவும் சில மின் இயந்திரங்கள். இப்படி ஒரு கோழி பண்ணை அமைப்பதற்கு எப்படியும் சில இலட்சங்களை செலவு செய்தால் மட்டுமே செயல்படுத்த முடியும். அப்படி செயல் படுத்தினாலும் இதிலிருந்து வளரும் கோழிகள் ரசாயன தீவனம் கொடுத்து வளர்க்கபட்டதால், கோழியின் மாமிசத்தை உண்ணும் பொழுது எதோ ஒரு பக்கவிளைவினை ஏற்படுத்திய வண்ணமே உள்ளது. மேலும் நாட்டு கோழிகளை ஒப்பிடும் பொழுது இவ்வாறு வளர்க்கப்படும் பிராயிளர் கோழிகளிடம் ருசியும் இருப்பதில்லை, சத்தும் இருப்பதில்லை. கோழி வளர்ப்பு என்ற பெயரில் இங்கு கோழி உற்பத்தி மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. இயற்கை விவசாயம் என்பது விளைவிக்கும் உணவில் மட்டுமே முடிந்து விடக்கூடிய ஒன்றாக இல்லாமல் வளர்க்கக்கூடிய கால்நடைகளிடமும் கொண்டு செல்ல வேண்டும்.

வளர்ப்பு செலவு குறைய வேண்டும், வளர்க்கப்படும் கோழி உண்பவனுக்கு எந்த ஒரு பக்கவிளைவினையும் கொடுக்க கூடாது, மேலும் உண்பவர்க்கு நல்ல சத்துள்ள உணவாக அது இருக்க வேண்டும். இந்த மூன்று இலக்கையும் அடைய வேண்டும் என்று யோசித்து கொண்டிருக்கையில், நான் அறிந்த இயற்கையினை கொண்டு வகுத்து வைத்துள்ள திட்டம் இது. இதனை செயல்முறை படுத்த தற்போது எனக்கு நேரமில்லை. இருந்தாலும் இதை படித்துவிட்டு முயன்று பாருங்கள் நண்பர்களே. திட்டத்திற்குள் செல்வதற்கு முன்பு இயற்கையின் உயிர் சுழற்சி, உணவு சங்கிலி, நீர் சுழற்சி என மூன்றை நன்கு புரிந்து கொள்ளுங்கள்.

  •   இயற்கையின் உணவு சங்கிலியை நன்கு உற்று நோக்கினால் உங்களுக்கு ஒன்று நன்றாக புரியும், அதாவது இந்த மண்ணில் வாழும் அணைத்து உயிரும் இன்னொரு உயிரை தான் தன்னுடைய உணவிற்காக சார்ந்து இருக்கும் அவை தாவரங்களாக இருக்கலாம், அல்லது வேறு உயிர்களாக இருக்கலாம்.
  •   இந்த பூமியில் மழை பெய்வதற்கான காரணம், அதாவது நீர் இந்த மண்ணில் விழுவதற்கான காரணம் இந்த மண்ணில் உயிர் பெருக்கத்தை அதிகரிப்பதற்காக இயற்கையின் ஆற்றல். நன்கு கவனித்து பாருங்கள், மழை காலங்களில் பூச்சிக்களையும், பறவைகளையும், கண்ணுக்கு தெரியாத மண்ணில் வாழும் நுண்ணுயிர்களையும் அதிக எண்ணிக்கையில் காண முடியும். இந்த மண்ணில் நீர் விழுந்தால், அது ஈரம் அடைந்தால் அங்கு நுன்னியிர்களின் எண்ணிக்கை அதிகமாகும். அப்படி அதிகமாகும் பொழுது அதனை சார்ந்திருக்கும் மற்ற உயிர்களான பூச்சி, புழு, சிறு தாவரங்கள், கரையான் என பல்லுயிர் பெருக்கம் அங்கு நடக்கும். இதன் மூலம் உணவு பொருட்களின் விளைச்சலும் அதிகம் ஆகும். தாவர உணவை சார்ந்திருக்கும் மற்ற பெருயிர்களும் வாழும், அதன் வழியே அதனுடைய எண்ணிகையும் பெருகும்.

இந்த இரண்டு புரிதலை கொண்டு பார்க்கும் பொழுது அறிந்தது, ஒரு உயிருள்ள கோழி வளர்வதற்கு தேவையானது ரசாயன உரங்கள், குடில்களும், மின் இயந்திரங்களும் இல்லை. ஒரு உயிர் வளர்வதற்கு தேவை மற்றொரு உயிர் தான். வயலில் மேயும் கோழிகளை நீங்கள் பார்த்திருக்கலாம், அது உணவாக எடுத்து கொள்வது அங்குள்ள சிறு செடிகளையும், பூச்சி புழுக்களை தான். ஆகவே சிறு செடிகள், பூச்சி, புழு, கரையான் ஆகிய உயிர்களின் எண்ணிக்கையினை அதிகபடுத்திவிட்டால் கோழிக்காண உணவு கிடைத்து விடும். கோழியின் இந்த நேரடி உணவுகள் சார்ந்திருப்பது மண்ணில் வாழும் நுன்னுயிரையும், மண்ணில் உள்ள ஈரப்பதத்தையும் தான். ஆக நீர் தான் அணைத்து உயிர் வளர்ச்சிக்கும் ஒரே தேவை.

இங்கு சொல்ல போகிற இயற்கை வழி கோழி பண்ணைக்கு ஒரே ஒரு தேவை நீர் மட்டுமே, அதை தவிர வேற எந்த ஒரு ரூபாய் செலவும் இருக்க கூடாது. ஒரே ஒரு ஏக்கர் நிலம் எடுத்து கொள்ளுங்கள், பின்பு பின்னப்பட்ட தென்னை ஓலை இரண்டு அடுக்கு கட்டி பன்னிரண்டு அடி உயரத்தில் அதன் சுற்றியும் வேலி அமைத்து கொள்ளவும். பின்பு நிலம் முழுவதும் இயற்கையிடமிருந்து பெற்றது மற்றும் உங்களுக்கு தேவை இல்லை இது குப்பை முடிவு செய்தது அனைத்தையும் முடாக்காக போடவும் (நெல் புல், காய் கழிவுகள், இலைகள், தேங்காய் நார், தலைகள் என கால் அடி உயரத்திற்கு). ஒரு ஏக்கரில் அங்கங்கு நீர் தெளிப்பு இயந்திரம்(Sprinklers) வைத்து  விடுங்கள். இனி நீங்கள் செய்ய வேண்டியது வாரத்திற்கு மூன்று முறை இரவு நேரங்களில் இரண்டு மணி நேரம் என Sprinklers-யை போட்டு விட்டால் போதும்.

மேலே கூறப்பட்ட அனைத்தையும் செய்து விட்டு ஒரு இரண்டு வாரம் கழித்து ஒரு 200 நாட்டு கோழிகளை விட்டு விடுங்கள். இந்த இரண்டு வாரங்களில், மூடாக்கு அமைத்துள்ளதனால் மண்ணில் எப்பொழுதும் ஈரம் இருந்து கொண்டே இருக்கும், அதனால் அதிகமான நீர் தேவையும் இருக்காது. அதே வேளையில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகமடைந்து கொண்டே இருக்கும். நுண்ணுயிர்கள் அதிகம் ஆகும் பொழுது மண்ணுக்கு மேலே இருக்கும் பொருட்கள் கொஞ்சம் கொஞ்சமாக மட்க ஆரம்பிக்கும். அப்பொழுது அதில் பூச்சி, கரையான், புழு ஆகியவை உயிர் பெரும், அதே கணம் மண்ணில் ஈரம் உள்ளதனால் சிறு செடிகள் வளர்ந்து கொண்டே இருக்கும். கோழிக்கு தேவையான உணவு அத்தனையும் இதிலுருந்து கிடைத்து விடும். மேலும் கோழியின் கழிவுகளும் மண்ணுக்கு செலுத்தப்பட்டு கொண்டே இருக்கும். இதன் வழி இயற்கையின் உயிர் சுழற்சி ஒன்றை இங்கு உருவாக்கி அதன் மூலம் விஷமற்ற உணவையும், நட்டமில்லா வருமானமும் பெற முடியும். கோழிகளை விட்ட பிறகும் வாரத்திற்கு மூன்று முறை இரவு நேரங்களில் நிலம் முழுவதும் நீர் தெளிக்க வேண்டும். இது மழையை செயற்கையாக பெய்ய வைப்பது. இந்த சுழற்சியினை மீண்டும் மீண்டும் நடந்தே கொண்டே இருக்க வேண்டும். மூன்று மாதத்திற்கு பின்பு மாதம் தலா 50 கோழிகள் என்ற வீதம் விற்பனை செய்தால் கூட மாதத்திற்கு பத்தாயிரம் எடுத்து விட முடியும்.

ஆண்டுக்கு மூன்று முறை குப்பைகளை அதிகபடுத்தி கொண்டே இருக்க வேண்டும். இதற்கு எந்த செலவும் ஆகாது, மாறாக சில விவசாயிகள் சேர்ந்து கிடக்கும் இலை கழிவுகளை அகற்ற இயலாமல் எரித்து விடுகின்றனர். அது போன்ற விவசாயிகளிடமிருந்து தலை, இலைகளை கொண்டு வந்து வயல் முழுதும் பரப்பி விடலாம். இங்கு ஆகும் செலவு வேலி அமைப்பதற்கும், Sprinklers அமைப்பதற்கு மட்டுமே அதுவும் ஒரு முறை செலவு தான். தீவன செலவு எதுவும் இல்லை, மின் இயந்திரங்கள் தேவை இல்லை, இயற்கையால் வளர்க்க பட்ட எந்த ஒரு நஞ்சுமில்லாத கோழிகள் கிடைத்து விடுகிறது. நீர் மட்டுமே இங்கு முதலீடு. கோழிகளின் எண்ணிக்கை மட்டும் அதிகம் ஆகாமல் பார்த்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் அணைத்து கோழிகளுக்கும் சரியான அளவு உணவு கிடைத்து கொண்டிருக்கும்.

இது மசானபு புகாகாவின் புத்தகங்களான "ஒற்றை வைக்கோல் புரட்சி" மற்றும் "இயற்கைக்கு திரும்பும் பாதை" படித்து கொண்டிருக்கும் பொழுது தோன்றிய யோசனை. முடிந்தால் முயற்சித்து பாருங்கள். நண்பர்களே, இயற்கையிடமிருந்து எடுத்து கொள்வதற்காக மட்டுமே இங்கு உயிர்கள் படைக்கப்பட்டுள்ளன. அந்த இயற்கைக்கு அதனிடமிருந்து பெற்றதை தவிர வேறு எதையும் நாம் கொடுக்க தேவை இல்லை.

புதன், 26 மார்ச், 2014

ஒரு ஏக்கரில் ரூ.3,50,000 லாபம்… ரெட்லேடி பப்பாளி


கரும்பு, மஞ்சள், வாழை… என ஒரே மாதிரியான பயிர்களை சாகுபடி செய்து கட்டுப்படியான விலை கிடைக்காமல், அவதிப்படுவதை விடுத்து… சத்தான சந்தை வாய்ப்புள்ள புதிய பயிர்களைப் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருப்பது, தொடர்கிறது. அந்த வகையில், பப்பாளி சாகுபடியில் இறங்கி, லட்சங்களில் வருமனாத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார், கோயம்புத்தூர், ‘சின்னக்குயிலி’ கிரமத்தைச் சோந்த முன்னோடி விவசாயி, பாலதண்டாயுதபாணி.
தினமும் வருமானம்!
எனக்கு 15 ஏக்கர் நிலமிருக்கு. ஆயிரம் அடிக்கு பேர்வெல் போட்டு தண்ணீர் எடுத்துத்தான் பாசனம் செய்கிறேன். விவசாயம் கட்டுபடியாகுறதில்லை என்பது உண்மைதான். ஆனால், கொஞ்சம் மாற்றி யோசித்து செய்தால், கண்டிப்பாக நல்ல லாபம் பார்க்க முடியும். இந்தப் பக்கம் எல்லாரும் ராகி, சோளம் ,கம்பு என்று விளைவிக்கும் போது.. நான் பருத்தியை விதைத்தேன். அதன் பிறகு, எல்லாரும் பருத்திக்கு மாறினாங்க. அது  கொஞ்சம் சுணங்கிய நேரத்தில் திராட்சை சாகுபடியில் இறங்கினேன். அதன்பிறகு அதே பந்தலில், பாகல், புடலை, பீர்கன் என்று சாகுபடி செய்தேன். அடுத்து வாழை விவசாயத்திற்கு மாறினேன். ஒப்பந்த அடிப்படையில் பால் பப்பாளி சாகுபடி செய்தேன்.
எல்லாவற்றையும் விட்டுவிட்டு, இப்போது மூன்று வருடமாக பழத்துக்காக பப்பாளி சாகுபடி செய்கிறேன். இதில் தினமும் வருமானம் கிடைக்கிறதே என்றார்.
ஏழு அடி இடைவெளி!
ரெட் லேடி ரகத்தின் வயது 22 மாதங்கள். ஆடி, ஆவணி மாதங்கள் நடவுக்கு உகந்தவை. இது, நல்ல சிவப்பு நிறமும், சுவையும் கொண்ட ரகம். ஒரு ஏக்கர் நிலத்தில்  இருந்து 60 டன் முதல் 80 டன் வரை மகசூல் கிடைக்கும். சாகுபடிக்காகத் தேர்வு செய்த நிலத்தை இரு முறை கோடை உழவு செய்து, மண்ணைப் பொலபொலப்பாக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு ஏக்கர் நிலத்திற்கு 10 டன் தொழுவுரம் என்ற கணக்கில் கொட்டி இறைத்து, நிலத்தை சமன் செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு 900 நாற்றுக்கள் தேவைப்படும். தரமான நாற்றுகளை நர்சரிகளில் வாங்கிக் கொள்ளலாம். ஒரு நாற்று 13 ரூபாய்  விலையில் கிடைக்கிறது. 7 அடிக்கு 7 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்கு குழியெடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு குழியிலும், ஒரு கிலோ நுண்ணுயிர் உரக்கலவையை இட்டு நிரப்பி, நாற்றுகளை நட்டு மண் அணைத்து தேவையான அளவு வட்டப்பாத்திகள் அமைத்து, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நேரடிப் பாசனத்தைவிட, சொட்டுநீர்ப் பாசனம் சிறந்தது.
எட்டாம் மாதம் அறுவடை!
நடவு செய்த 20-ம் நாளில் களை எடுத்து, தழை, மணி, சாம்பல் சத்துக்கள் அடங்கிய 150 கிலோ உரத்தை (ஒரு ஏக்கருக்கு ) கொடுக்க வேண்டும். 7-ம் மாதம் வரை பெரிதாக பராமரிப்புத் தேவையில்லை. 8-ம் மாதம் காய் அறுவடைக்கு வந்துவிடும். தொடர்ந்து 14 மாதங்கள் மகசூல் கொடுக்கும்.
இந்தக் காலத்தில் மாதம் தோறும் ஏக்கருக்கு 150 கிலோ அளவுக்கு பயோ மற்றும் ஆர்கானிக் கலப்பு உரங்களைக் கொடுக்க வேண்டும். வளா்ந்த செடிகளில் இருந்து பழுத்த இலைகள் விழுந்து கொண்டே இருக்கும். மரங்களின் அடியில் விழும் இலைகள் மட்கி, அந்த மரத்துக்கே உரமாகி விடும்.
பூச்சிகள்.. கவனம்!
பப்பாளியை அதிகம் தாக்கி சேதப்படுத்துவது மாவுப்பூச்சிகள்தான். ஒட்டுண்ணிகளை விடுவதன் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்தலாம்.
இலைச்சுருட்டுப் புழு, வெள்ளை ஈக்கள் ஆகியவற்றின் தாக்குதலும் பழ அழுகல் நோயும் அதிகமாக வரும். இவற்றைக் கட்டுப்படுத்த, 15 மில்லி பயோ – ஆன்டி வைரஸ் பூச்சிவிரட்டியை 10 லிட்டர் நீரில் கலந்து செடிகளின் மீது தெளிக்க வேண்டும். நோய் தாக்கும் போது, மட்டும் தெளித்தால் போதுமானது. தலா 50 கிராம் வேப்பம் பிண்ணாக்கை, செடிக்குச் செடி தூரில் வைத்தால், வேர் சம்பந்தமான நோய்கள் அண்டாது.
மழைநீர் தேங்கி நிற்காதபடி, வடிகால் வசதி செய்து கொள்ள வேண்டும். வாரம் ஒரு முறை ஒரு செடிக்கு 100 லிட்டர் நீர் கிடைக்குமாறு பாசனம் செய்ய வேண்டும். மரத்தில் உள்ள காய்களின் முகம் பழுக்கும் தருணத்தில், பறிக்கத் தொடங்க வேண்டும்.
விற்பனைக்கு பிரச்னை இல்லை!
திருப்பூர், கோயம்புத்தூர் பக்கம் இருந்து வியாபாரிகள் தோட்டத்திற்கே வந்து, பறித்து வைத்திருக்கும் பழங்களை  எடை போட்டு வாங்கி கொண்டு போய்விடுவார்கள்.
இன்றைக்குத் தேதிக்கு கிலோ 7 ரூபாய் விலைக்கு போகிறது. சராசரியாக வருடத்திற்கு மூன்றரை லட்ச ரூபாய்க்குக் குறையாமல் லாபம் கிடைத்துவிடும். மகசூல் முடிந்ததும், மரங்களை வெட்டி. ரோட்டா வேட்டர் வைத்து உழுது, நிலத்திற்கே உரமாக்கலாம். ரெட் லேடி பப்பாளிப் பழத்துக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், விற்பனைக்குப் பிரச்னையே இல்லை.
பப்பாளிப் பழம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். மலச்சிக்கலை சரி செய்வதற்கும், பெண்களுடைய மாதவிடாய் பிரச்னைக்கும், இது நல்ல பலன் கொடுக்கும். நான் பப்பாளி உற்பத்தியாளர் சங்கத்தை ஆரம்பித்திருக்கிறேன். பப்பாளிக்கு அரசாங்கம் தனி வாரியம் அமைக்க வேண்டும். நோய் எதிர்ப்பு ஆற்றல் உள்ள ரகங்களை வேளாண்  பல்கலைக் கழக விஞ்ஞானிகள் உருவாக்கித் தர வேண்டும் அரசு நாற்றுப் பண்ணைகளில் பப்பாளி நாற்றுகளை உற்பத்தி செய்து மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் நம் மூலமாக அரசுக்கு வைத்து, விடை கொடுத்தார்.
தொடர்புக்கு
பாலதண்டாயுதபாணி, செல்போன் : 98946 99975

செவ்வாய், 25 மார்ச், 2014

தீவனப்பற்றாக்குறைக்கு மர இலைகள்:

மர இலைகளில் உள்ள ஊட்டச்சத்தின் அளவு வறட்சியினால் பாதிக்கப்படுவதில்லை. சுபாபுல், கிளைரிசிடியா, அகத்தி, வாகை, வேம்பு, கொடுக்காப்புளி, கல்யாண முருங்கை போன்றமரங்களின் இலைகள் சிறந்த பசுந்தீவனங்களாகும்.

மற்ற பசுந்தீவனங்களைக் காட்டிலும் மர இலைகள் ஊட்டச்சத்து மிகுந்ததாக
உளளன. பொதுவாக 10 முதல் 15 சதம் வரை புரதச்சத்தும், 40 முதல் 65 சதம் வரை மொத்த செரிக்கக்கூடிய ஊட்டச்சத்துக்களும் உள்ளன. (உலர் தீவன அடிப்படையில்) சூபாபுல், அகத்தி போன்ற மர இலைகளில் 20 -25 சதவீத புரதச்சத்தும் உள்ளன.

மர இலைகளின் புரதச்சத்து அசைபோட்டும் கால்நடைகளின் வயிற்றில் நுண்ணுயிர்களால் அவ்வளவாக சிதைக்கப்படுவதில்லை. அப்படி சிதைக்கப்படாத மீதமுள்ள புரதம் சிறுகுடலில் செரிக்கப்படுவதால் கால்நடைகளுக்கு சிறந்த பயனைக் கொடுக்கிறது. மரங்களின் காய்களும் புரதச்சத்து மிகுந்ததாக காணப்படுகின்றன.

இத்துடன் உயிர்ச்சத்து "ஏ'வும் மர இலைகளின் மூலம் கிடைக்கின்றது. அகத்தி, முருங்கை, ஆச்சான் போன்ற மரங்களின் நார்ச்சத்து புற்களில் இருப்பதைவிட மிகக்குறைவாகவே இருப்பதால் இதன்மூலம் கால்நடைகளுக்கு கிடைக்கும் எரிச்சத்தும்குறைவாகவே இருக்கும். எனவே மர இலைகளையே முழுமையாயன பசுந்தீவனத்திற்கு மாற்றாக கால்நடைகளுக்கு தீவனமாக அளிப்பது நல்லதல்ல.

மர இலைகளை நார்ச்சத்து மிக்க வேளாண் கழிவுகளுடன் சேர்த்து தீவனமாக அளிக்க வேண்டும். வேளாண் கழிவுகளை 1'' - 2'' அளவில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி நிலக்கடலைக்கொடி 75 சதவீதத்துடன் வேம்பு இலை அல்லது சவுண்டல் இலையை 25 சதவீதமாகவும் சோளத்தட்டை 50 சதவீதத்துடன் கிளைரிசிடியா, வேம்பு இலைகளை முறையே 25, 25 சதவீதமாகவும், கேழ்வரகு தட்டை 75 சதவீதத்துடன் கிளைரிசிடியா, வேம்பு இலைகளை முறையே 12, 13 சதவீதமாகவும் அளிக்க வேண்டும்.
அரிசி, கோதுமைத்தவிடுகளில் மணிச்சத்து சற்று அதிகமாக உள்ளது. எனவே மர இலை தீவனங்களுடன் எரிசக்தியாக புற்களையும், மணிச்சத்துக்காக தாவரங்களையும் சேர்த்து அளிப்பதால் ஓரளவு ஊட்டச்சத்துநிரம்பிய தீவனம் கால்நடைகளுக்கு கோடையில் கிடைக்கும்.

ஊட்டச்சத்து மிகுந்த மர இலைகளை சில கால்நடைகள் உண்ணத்தயங்கும். இதைத் தவிர்க்க:
* மர இலைகளைப் பிற புற்களுடன் சிறிது சிறிதாக சேர்த்து அளித்து கால்நடைகளுக்குப் பழக்கப்படுத்தலாம்.
* காலையில் வெட்டிய இலைகளை மாலை வரையும், மாலையில் வெட்டிய இலைகளை அடுத்தநாள் காலை வரையும் வாடவைத்து பயன்படுத்தலாம்.
* மர இலைகளை காயவைத்து அவற்றின் ஈரப்பதத்தை சுமார் 15 சதவீதத்திற்கும் கீழே குறைப்பதன்மூலம் அவற்றை நீண்டநாட்கள் சேமிக்க இயலும். தவிர இவற்றில் இருக்கும் நச்சுப் பொருட்களின் அளவும் கணிசமாக குறையும்.
* மர இலைகளின் வேம்பு சுமார் 2 சதவீத சமையல் உப்பு கரைசலைத் தயாரித்து தெளித்து அளிப்பதால் உப்புக்கலவையில் கவரப்பட்ட கால்நடைகள் இலைகளை விரும்பி உண்ணும்.
* மர இலைகளின்மீது வெல்லம் கலந்த நீரை ஓரிரு நாட்கள் தெளித்து அவற்றைக் கால்நடைகளுக்கு அளிக்கலாம்.
* மர இலைகளை விரும்பி உண்ணும் கால்நடைகளையும் அருகருகே கட்டி மர இலைகளைத் தீவனமாக அளித்தால் இலைகளை உண்ணக்கூடிய கால்நடைகளைப் பார்த்து பிற கால்நடைகளும் உண்ண ஆரம்பிக்கும்.
மர இலைகள் தினமும் சிறிய அளவில் அளித்து அவற்றைப் பழக்கப்படுத்த வேண்டும். கால்நடைகள் ஒரே வகையான மர இலைகளை எப்போதும் விரும்புவதில்லை. தீவனம் அளிக்கும் சமயம் ஒன்றுக்கு மேற்படி இலைக் கலவையை அளிப்பது சிறந்தது. ஒரு கறவை மாட்டிற்கு நாள் ஒன்றுக்கு 8-10 கிலோ வரை மர இலைகளை அளிக்கலாம்.

ஆடுகளில் குறிப்பாக வெள்ளாடுகளுக்கு மர இலைக்கலவை இல்லாமல் தீவனம் அளிக்கவல்லது. 50 சதவீதம் புல் கலவையும், 20 சதவீதம் மர இலைக்கலவையும் கொடுப்பது அவசியமாகிறது.

(தகவல்: முனைவர் எம்.முருகன், இயக்குநர், கோழியின உற்பத்தி மற்றும் வேளாண்மை நிலையம், ஓசூர்-638 110)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

சனி, 22 மார்ச், 2014

தோட்டக் கோழிப் பண்ணையம்

கோழிகளையும் குஞ்சுகளையும் மற்ற பிராணிகளிடமிருந்து பாது காத்தல்.
கோழிப் பண்ணை அமைந்துள்ள இடத்தைச் சுற்றிலும் தேவையற்ற குப்பை கூளங்கள் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
அருகில் புதர்கள் இருந்தால் அவற்றை அகற்றி விடுங்கள்.
தினமும் காலையிலேயே கோழிப் பிளுக்கைகளைப் பெறுக்கி அவற்றைப் பண்ணையை விட்டு அப்பால் ஒரு தனி இடத்தில் கொட்டி மண்ணால் மூடுங்கள்-இதனால் அது நன்கு மட்கி நல்ல உரமாக மாறிவிடும்.
பிளுக்கைகள் குவித்து வைக்கப்பட்டால் அவை காற்றில் மட்கும்போது வெளிவரும் குளோரின், மீதேன் முதலிய நச்சு வாயுக்களின் வாசம் பாம்பு, உடும்பு, பூனை, கீரி, நரி, காட்டுப் பூனை முதலிய பிராணிகளை ஈர்க்கக் கூடியது.
காலையும் மாலையும் பண்ணைக்குள் வெயில் படும்படியாக சற்று உயரமாகக் கூரையை அமையுங்கள்.
இதனால் பண்ணைக்குள் ஈரம் கோர்ப்பது குறையும்.
ஈரமிக்க பண்ணைத் தரை அதில் ஒட்டியுள்ள கோழி எச்சங்களிலிருந்து நச்சு வாயுக்களை வெளிவிடும்.
இதனால் கோழிகளுக்குச்சளித் தொல்லைகள் வரும்.
பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை பண்ணை முழுவதும் 5 சதவீத வேம்புக் கரைசலைப் பரவலாக பண்ணைத் தரை நன்றாக நனையும்படித் தெளியுங்கள்.
இதனால் உண்ணிகள், பேன்கள், தத்துப் பூச்சிகள், தெள்ளுப் பூச்சிகள் ஆகிய கோழி ஒட்டுண்ணிகள் அனைத்தும் பண்ணைக்குள் இராது.
மேற்கூறிய ஒட்டுண்ணிகள் அதிகமாக இருந்தால் பலமுறை இந்த வேம்புக் கரைசலைத்தெளிப்பதன் மூலமாகவே நன்றாகக் கட்டுப் படுத்தலாம்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் கடுமையான இரசாயன நஞ்சுகளாகிய ப்யூடாக்ஸ், போரான், நுவக்ரான், செல்ஃபாஸ் எதனையும் பண்னைக்குள் தெளிக்காதீர்கள்.
இவை நீண்ட காலத்திற்கு "நின்று செயலாற்றும் திறன்" மிக்கவை! அவ்வாறு இவை "நின்று செயலாற்றி" உங்கள் இளம் குஞ்சுகளை எந்தக் காரணமும் இன்றிக் கொல்லக் கூடியவை! புழு பூச்சிகளுக்காக மண்ணை எப்போதும் கொத்தியும் கால்களால் பறித்தும் கிளறும் குணம் உள்ள தோட்டக் கோழிகளுக்கு இவை பரம எதிரி ஆகும் என்பதை நினைவில் வையுங்கள்.
பண்ணைக்கு அருகில் பண்ணையை நன்கு பார்க்கும் படியாக ஒரு சுறுசுறுப்பான நாயை எப்போதும் கட்டி வையுங்கள்.
அதற்கு மறவாமல் நன்றாகச் சோறு கொடுங்கள்! இல்லாவிட்டால் அது அருகில் வரும் கோழிக் குஞ்சுகளை அவ்வப் போது சாப்பிட்டுப் பசியாறிக் கொள்ளும்!
அப்போது தொட்டுக் கொள்வதற்குக் கொழிப் பிளுக்கைகளை வைத்துக் கொள்ளும்!
நாய்க் காவலின் கீழ் இருக்கும் பண்ணைகளில் பாம்புகளும் மற்ற பிராணிகளும் வருவது இல்லை. அப்படி வந்தாலும் நாய் அவற்றை முன்னதாகவே மோப்பத்த்தின் மூலம் கண்டு கொண்டு குரைக்கும். உங்கள் கோழிகளைத் தின்னாதவாறு பழக்கப் பட்ட நாயாக இருந்தால் அதை உங்கள் பண்ணைக்குள் கட்டிவைக்காமல் விட்டு விடலாம். அப்போது அது பண்ணைக்குள் வரும் மற்ற பிராணிகளி விரட்டி விடும். பாம்புகளையும் கீரிகளையும் நாய் திறமையாகத் தடுத்து நிறுத்தும்.
பருந்து, காக்கை மற்றும் கழுகு ஆகியவை, குஞ்சுகளை அடையிலிருந்து இறக்கி விட்டதும் அடிக்கடி வரும். இதற்கு இளம் குஞ்சுக் கோழிகளை பத்து நாட்கள் வரை கம்பி வலைக் கூண்டுக்குள் அல்லது பந்தல் கம்பி வேய்ந்த இடத்தில் விட வேண்டும்.
அத்துடன் பண்ணை திறந்த வெளியில் அமைந்திருந்தால் ஆங்காங்கே தென்னை மட்டைகளைச் சிறு சிறு கூடாரங்களைப் போலப் பின்னி நிறுத்தி வையுங்கள்.
பிற பறவைகள் விரட்டினால் குஞ்சுகளும் தாய்க் கோழியும் இவற்றிற்குல் ஓடிப் புகுந்து கொள்ளும்.
கோழிகள் உங்களிடம் வந்து தீனியை உங்கள் கையிலிருந்து தின்னப் பழக்கவே பழக்காதீர்கள். இது மற்றவர்கள் நீங்கள் இல்லாத போதுகோழிகளைப் பிடிப்பதற்கு வழி வைக்கும்.

வெள்ளி, 21 மார்ச், 2014

மாட்டுப் பண்ணை

மாட்டுப் பண்ணை -- பால் பண்ணை -- பால் மற்றும் மாட்டுப் பண்ணை -- புதிதாக இந்தத் தறைக்கு வருபவர்களுக்கான தகவல்கள்.
"நகரங்களில் பால் ஒரு லிட்டர் நாற்பது முதல் அறுபது ரூபாய்கள் என்று விற்கப் படுகிறது!"
"ஒரு நல்ல கறவை மாடு சுமாராக 5 லிட்டர் முதல் 10 லிட்டர் வரையும் வீரியக் கலப்பினப் பால் மாடுகள் சுமார் 25 லிட்டர் வரையும் கன்று ஈன்றதிலிருந்து குறைந்தது ஆறு மாதங்களுக்குப் பால் தரும்!"
"உயர் உற்பத்தித் திறனுள்ள வீரியக் கலப்பின மாடுகள் கன்று ஈன்றதிலிருந்து எட்டு மாதங்கள் வரை அதாவது அது அடுத்தகன்று ஈனுவதற்கு 50 நாட்கள் உள்ள காலம் வரை கூட
நமக்குக் குறையாமல் பால் தரும் திறன் உள்ளவை!"
"மிகவும் செறிவு மிக்கதும் ஒரு உயர் உற்பத்தித் திறனுள்ள வீரியக் கலப்பினப் பால் மாட்டின் அன்றாடத் தேவைக்கும் மேல் சக்தி தருவதுமான மிகச்சிறந்த கலப்புத் தீவனங்கள் இன்று எளிதாகக் கடைகளில் கிடைக்கின்றன!"
"இன்றுள்ள அதி நவீனத் தீவன உற்பத்தித் தொழில் நுட்பங்களைப் பயன் படுத்தி நாம் மிக எளிதாக மிகக் குறைந்த நிலப்பரப்பில் வழக்கமான முறையை விடப் பத்து மடங்கு அதிகப் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்யலாம்!"
"சினைப் பிடிக்காத மாடுகளைக் கூட இன்று கரு மாற்று முறையில் கன்று ஈன வைக்கலாம்!"
"மூலைக்கு மூலை அரசினர் கால்நடை மருத்துவ மையங்களும் தனியார் கால்நடை மருத்துவ மையங்களும் நிறைந்துள்ளன. ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும்; வெட் பைக்கில் ஓடோடி வந்து கவனிப்பார்! கால்நடைக்கு நோய் வந்தாலும் கவலைப் படத் தேவை இல்லை!"
"கொட்டில் முறைப் பண்ணையில் ஒரு கணவன் மனைவி இருவரே சுமார் 30 மாடுகளைப் பராமரிக்கலாம்!"
"பெண்கள் கூடக் கையாளும் விதமாக எளிய பால் கறவை இயந்திரங்கள் இப்போது குறைந்த விலையில் கிடைக்கின்றன!"
"ஒரு ஆள் ஒரு மணி நேரத்தில் இரண்டு டன் பசுந்தீனியைப் பொடியாக வெட்டும் அளவில் இயந்திரங்கள் கிடைக்கின்றன!"
"பாலை நாம் பண்ணையிலிருந்து நேரடியாக நுகர்வோருக்கு விற்கலாம்!"
"பண்ணையின் முழுமையான பாலை விட நிலைப் படுத்தப் பட்ட பாலும் பதப்படுத்தப் பட்ட பாலும் பண்ணையாளருக்கு அதிக லாபம் தரக் கூடியவை!"
"பண்ணையிலிருந்து பாலை முழுமையாக அப்படியே விற்பதை விட அதை முழுவதுமாக "மதிப்பூட்டப் பட்ட பால் பொருட்களாக மாற்றி " விற்பதால் பண்ணையாளருக்கு ஏழு மடங்கு லாபம் கிடைக்கும்!"
"நகரங்களில் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே உள்ளதாலும் பால் உற்பத்தியாளர்கள் மிகவும் குறைவாகவே உள்ளதாலும் பாலின் உற்பத்தி : தேவை விகிதம் மிகவும் அதிகம்! அது 28 : 72 என்ற் அளவில் உள்ளது!"
"ஒரு நடுத்தர அளவிலான 30 மாடுகளைக் கொண்ட மாட்டுப் பண்ணையில் இருந்து எட்டு மாத காலத்தில் 2 வேளை x 20 லிட்டர் x 30 மாடுகள் x 45 ரூபாய் ஒரு லிட்டர் x 240 நாட்கள் கறவை ====1,29,60,000 - 00 ரூபாய்கள் மொத்த வுருமானம் கிடைக்கும்!"
------------------ இவை எல்லாம் என்ன?
"வேளாண்மைக்கு நாம் திரும்பச் செல்லலாம்; தரமான பாலே கிடைக்காமல் நாம் நகரத்தில் எவ்வளவு கஷ்டப் பட்டோம்! நுகர்வோருக்குத் தரமான பால் தவறாமல் கிடைப்பதற்காக நாமும் ஏதாவது செய்யலாம். இந்த வேலையை விட்டு விட்டு, இதிலிருந்து நமக்குக் கிடைக்கும் பணத்தை வைத்து ஒரு பால் பண்ணை ஆரம்பிக்கலாம்! எட்டு மாதங்களில் ஒன்றே கால் கோடியா! ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கிப் பண்ணையைத் துவக்கினால் கூட லாபம் தான்!"
--------- என்ற சாதனை வெறியுடன் வரும் புதிய இளைய தலை முறை விவசாயிகளின் கண்களில் படும் (பட வைக்கப் படும்!) வெற்றிக் கதைத் தகவல்கள்தான் இவை அனைத்தும்!
அப்படியா?
இவ்வளவு சுலபமானதுதானா ஒரு மாட்டுப் பண்ணை நடத்துவது?
நம் அப்பா என்னவோ "மகனே! காட்டில் இருக்காதே! நகரத்தில் ஏதாவது வேலை வாங்கித் தருகிறேன்; இப்போதே புறப்படு; பால் பண்ணையாவது; மாட்டுப் பண்ணையாவது; அதெல்லாம் உன்னைப் பிழைக்க வைக்காது; நான் காட்டில் இருந்து பட்ட கஷ்டம் போதும்; ஓடிவிடு!" என்று பயமுறுத்தினாரே!
--------- என்ற குழப்பத்தில் இருக்கும் பணம் வைத்திருக்கும் புதிய இளம் விவசாயிகளின் கண்களில் படும் (பட வைக்கப் படும்!) வெற்றிக் கதைத் தகவல்கள்தான் இவை அனைத்தும்!
இதில் எந்தத் தகவலும் பொய் இல்லவே இல்லை!
பிறகு என்ன?
இந்தத் தகவல்கள் அனைத்தும் மாட்டுப் பண்ணை -- பால் பண்ணை -- பால் மற்றும் மாட்டுப் பண்ணை பற்றிய ஒரு பக்கத்தை மட்டும் பற்றிய தகவல்கள்!
இவற்றின் மறுபக்கத் தகவல்கள் இந்தப் பண்ணையத்தின் யதார்த்த நிலையைக்காட்டும் தகவல்கள்!
அவை பெரும்பாலும் யாராலும் சொல்லப் படுவதில்லை!
ஏன் இப்படி?
ஏனென்றால், மேற்குறித்த எல்லாத் தகவ்கல்களையும் ஆராய்ந்து அவற்றின் மறுபக்கத்தைப் பார்க்கும் பொறுமை புதியவர்களுக்கு இல்லை!
"கையில் உள்ள பணம் கரைவதற்குள் நாம் நிலைப் பட்டு விட வேண்டும்!"
"வேளாண்மைத் துறையில் ஒரு மறுமலர்ச்சி தெரிகிறது; நாம் முந்திக் கொள்ள வேண்டும்!"
"நம் பரம்பரைத் தொழிலில் நம் தாத்தாவைப் போல நம் முப்பாட்டனைப் போல நாமும் "ஏதாவது" சாதிக்க வேண்டும்!" -
---------என்ற சாதனை வெறி இவர்களுக்குள் பொங்கிப் பிரவகிக்கிறது!
அத்துடன் இவர்கள் இருந்து இருபது ஆண்டுக் காலம் அனுபவப்பட்ட துறையில்
"எதைச் செய்தாலும் அதன் விளைவும் முடிவும் "உடனடியாக"த் தெரிந்து விடும்;
ஒன்றைத் தீர்மானித்து அதை ஒரு "பிட்" கூடத் தவறில்லாமல் செயல் படுத்த முடியும்;
அதில் வரக் கூடிய தவறுகளை முன் கூட்டியே கணித்து ஒரு தவறில்லாத திட்டத்தை "வடிவமைக்க" முடியும்;
அப்படி "வடிவமைத்த" அந்தத் திட்டம் மிகத் துல்லியமாக இயங்கும்!"
-------------- இப்படியேதான் இவர்களுக்குள் ஒரு செயல் முறை பதிவாகி உள்ளது!
வேளாண்மை என்பதும் அதிலும் உயிரின வேளாணமை என்பதும் பஞ்ச பூதங்களின் முழு ஆளுமைக்கு அடிமை என்பதும்;
அதில் நமது திட்ட வடிவமைப்புப் படி பெரும்பாலும் நடக்காது என்பதும்;
அனைத்தும் ஒன்றை ஒன்று பிணைந்து சார்ந்த "ஃபஸ்ஸி லாஜிக்" போன்றது என்பதும்;
உற்பத்தியைத் தவிர மற்ற வேலைகளான இருப்பு வைத்தல், விலை நிர்ணயம், மொத்த விற்பனை, சில்லறை விற்பனை, நேரடி விற்பனை ஆகிய எதுவும் நம் கட்டுப் பாட்டில் இல்லை என்பதும் இவர்களுக்குச் சொல்லப் படுவது இல்லை!
அத்துடன் மேற்குறித்த தகவல்களைப் புதியவர்களுக்குத் தருபவர்கள், பெரும்பாலும் இந்த ஒவ்வொரு தகவலுக்கும் தொடர்புடைய ஒரு வியாபாரத்தைச் செய்து கொண்டிருப்பார்கள் என்பது மிகவும் கசப்பான உண்மை!
இப்பொழுது மறுபடியும் ஒவ்வொன்றாகப் படித்துப் பாருங்கள்!
அந்தந்த வியாபாரிகளின் உருவம் உங்களுடைய கண்களுக்குத் தெரியும்!
*********************************************************************************************
"ஆக நீங்கள் சொல்வது என்ன?
மாட்டுப் பண்ணை -- பால் பண்ணை -- பால் மற்றும் மாட்டுப் பண்ணை. இவற்றில் எதையும் செய்யாதீர்கள் என்னும் தகவலா?"----- இவை உங்கள் கேள்விகள் அல்லவா?
இல்லவே இல்லை!
செய்யாதீர்கள் என்று சொல்லவில்லை. பண்ணையைத்துவக்கும் "முன்னதாக" - கவனியுங்கள் "முன்னதாக" - தயவு செய்து மூன்று நாங்கு மாதங்களுகு உங்களது பணத்தை ஒரு நல்ல வங்கியில் இருப்பு வைத்து விடுங்கள்.
நீங்கள் இறங்க முடிவு செய்த பண்ணை முறையில் நேரடி அனுபவம் பெறுங்கள்;
எல்லாவற்றிற்கும் முன்னதாக அந்தப் பண்ணையில் வரக் கூடிய நஷ்டங்கள் எவை என்பதைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்;
மாட்டுப் பண்ணை -- பால் பண்ணை -- பால் மற்றும் மாட்டுப் பண்ணை மூன்றுமே நீண்ட காலப் பண்ணைகள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்;
பாதியில் விட்டுச்செல்ல் நேர்ந்தால் நீங்கள் செய்த முதலீட்டில் கால்வாசி கூடத் திரும்ப வராது என்பதை உணருங்கள்;
உள்ளூர்ச் சந்தைக்கு அடிக்கடி சென்று வாராவரம் நிகழும் மாற்றங்களைப் பதிவு செய்யுங்கள்;
உள்ளூர் "சின்ன ஏவாரி"யிடமிருந்து அயல் மாநிலப் "பெரிய முதலாளி" வரை தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள்;
உள்ளூர் கால்நடை உதவியாளர் முதல் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகம் வரை தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள்;
உங்களுடைய மாட்டுப் பண்ணை -- பால் பண்ணை -- பால் மற்றும் மாட்டுப் பண்ணை எதிலும் நேரம் காலம் பார்க்காது வேலை செய்ய வேண்டிய உங்கள் குடும்பத்தை முழுவதுமாக ஈடுபடுத்துங்கள்;
இவை எல்லாவற்றிற்கும் மிக மிக முன்னதாகக் கால்நடை மருத்துவத்தின் அடிப்படை முறைகளையும் சிறு சிறு சிகிச்சை முறைகளையும் இள்ம கன்றுகள் வளர்ப்பு முறைகளையும் கற்றுக் கொள்ளுங்கள்.
இந்த மூன்று நான்கு மாத காலத்தில் இன்னொரு முக்கியமான வேலையை நீங்கள் செய்து முடித்திருக்க வேண்டும்.
அது ஆண்டு முழுவதும் 50 கால்நடைகளுக்குத் தேவையான பாதுகாப்பான குடிநீர் ஆதாரத்தை உருவாக்கி இருக்க வேண்டும்!
ஆண்டு முழுவதும் 50 கால்நடைகளுக்குத் தேவையான பலவகைப் பசுந்தீனிகளை வளர்த்திருக்க வேண்டும்! அதே அளவில் உலர் தீனியும் கையிருப்பில் இருக்க வேண்டும்!
இவற்றை எல்லாம் நீங்கள் முடித்த "பிறகும்" உங்களுக்கு "இந்தப் பண்ணையைத் தொடங்கலாம்; தொடர்ந்து நடத்தலாம்;
இதில் நமக்குத் தேவையான முன்னறிவு வந்துள்ளது; இதில் வரும் எதிர்பாராத விளைவுகளை நம்மால் எதிர் கொள்ள முடியும்!"
என்று உண்மையாகவே (உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தினருக்கும்) தீர்மானமாகத் தெரிந்தது என்று வையுங்கள்;
நீங்கள் நிச்சயமாக மாட்டுப் பண்ணையையோ பால் பண்ணையையோ பால் மற்றும் மாட்டுப் பண்ணையையோ ஐந்தாவது மாதத் துவக்கத்தில் துவக்கி இருப்பீர்கள்!
அதை நல்ல முறையில் உங்களால் நிச்சயமாக நடத்த முடியும்!

Real Heroes of Tamilnadu - Pamayan