யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

வியாழன், 13 மார்ச், 2014

கோழி வளர்க்கும் திட்டம்

கோழி பண்ணை வளர்ப்பில் முன்னோடியாக விளங்கும் நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்கள் போல பிற மாவட்டங்களிலும் கோழி வளர்ப்பினை ஊக்கு விக்கும் பொருட்டு தமிழக அரசால் 2013-2014ம் ஆண்டு இத்திட்டம் முதன்முறையாக செயல்படுத்தப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இத் திட்டம் 240 நபர்களுக்கு ரூ.70 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் செயல்படுத்தப் பட்டது. மேலும் இத்திட்டம் தமிழகத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் நடப்பு நிதியாண்டில் செயல் படுத்தப் பட உள்ளது.25 சதவீதம் மானியம்
இத்திட்டத்தின் கீழ் கறிக்கோழி மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பிற்கு தமிழக அரசு சார்பில் 25 சதவீத மானியமும், நபார்டு வங்கி மூலம் கோழிக்கான முதலீட்டு நிதியில் இருந்து 25 சதவீத மானியமும் ஆக மொத்தம் 50 சதவிகிதம் மானியம் வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள 50 சதவீதத்தை பயனாளிகள் தங்கள் சொந்த செலவிலோ அல்லது வங்கியிலிருந்து கடனாகவோ பெற்றுக் கொள்ளலாம்.
நபார்டு வங்கியின் 25 சதவீத மானியத்தை பெறு வதற்கு பயனாளிகள் வங்கியில் இருந்து கடன் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் நாட்டுக்கோழி வளர்ப்பினை ஆண்டு முழுவதும் ஊக்குவிக்கும் பொருட்டு, இரண்டாம் தொகுப்பு கோழிக் குஞ்சுகள் வாங்கும் செலவில் 50 சதவீத மானியமும் (ரூ.3,125), மூன்றாம் தொகுப்பு கோழிக் குஞ்சுகள் வாங்கும் செலவில் 30 சதவீத மானியமும் (ரூ.1,875) தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது.
போதிய நிலம்
மேலும் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள், தனிநபர், தொழில் முனைவோர், சுய உதவிக்குழுக்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட தகுதியானர்கள் இவர்களிடம் கோழிப்பண்ணை அமைக்க போதிய நிலம் தங்கள் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர் பெயரிலோ இருத்தல் வேண்டும். கோழி வளர்ப்பில் முன் அனுபவம் உள்ளவர்களும், ஏற்கனவே கொட்டகை அமைத்த பயனா ளிகள் புதிய கொட்டகை அமைத்து பண்ணையை விரிவாக்கம் செய்ய ஆர்வ முள்ளவர்களும் இத் திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.
3 நாள் பயிற்சி
தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மையத்தின் மூலம் 5 நாட்களுக்கு கோழி வளர்ப்பு முறை குறித்து பயிற்சி அளிக்கப்படும். மேலும் மாவட்ட கலெக்டரின் ஒப்புதலுடன் கறிக்கோழி வளர்ப்பிற்கும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், ஆர்வமும் உள்ள வர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வங்கிகளில் கடன் வழங்குவதற்கான ஒப்புதல் கடிதம் வங்கி மேலாளரிட மிருந்து பெற்று, அப்பகுதி கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் சமர்ப் பித்து பயன்பெறலாம். மேலும் அப்பகுதி கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் சமர்ப்பித்து பயன்பெறலாம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பயனா ளிகள் தேர்வு செய்யப்பட உள்ள னர்.

கருத்துகள் இல்லை: