யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

சனி, 19 அக்டோபர், 2013

பரண் மேல் ஆடு வளர்க்கும் போது அதற்கு தேவையான தண்ணீரினை இலவச மின்சாரத்தில் எடுத்துக்கொள்ளலாம்

ஆடு வளர்ப்பு மட்டும் அல்ல... 
வேளாண்மை சார்ந்த அனைத்து பண்ணைத் தொழிகளுக்குமே .. விவசாய கிணறுகளில் இருந்து இலவச மின்சாரம் மூலம் எடுக்கப்படும் நீரினை பயன்படுத்திடலாம் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஆண்டு மார்ச் 30 - 2012 இல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது. எனவே எந்த வித பயமும் இன்றி விவசாயிகள் இலவச மின்சாரம் பயன்படுத்தி விவசாய கிணறுகளில் இருந்து எடுக்கும் நீரினை பட்டு வளர்ப்பு , கோழி பண்ணை , ஆடு மற்றும் மாட்டுப் பண்ணை உட்பட அனைத்து விதமான வேளாண் பண்ணைத் தொழில்களுக்கும் பயன்படுத்திடலாம்.

இணைப்பு : தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் செய்திக்குறிப்பு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில். ( இணைப்பினை டவுன்லோடு செய்து படித்திட அடோப் ரீடர் அல்லது PDF ஐ பார்க்க உதவிடும் மென்பொருள் அவசியம் )

கருத்துகள் இல்லை: