யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

ஞாயிறு, 28 ஜூலை, 2013

50 சதவீத மானியத்தில் தீவன சோளப்பயிர் வளர்க்க விவசாயிகளுக்கு அழைப்பு


திருவாரூர் மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் தீவன சோளப் பயிர் பயிரிட விவசாயிகள் முன்வரலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் சி. நடராசன். 
 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கால்நடைகளுக்கு வழங்கப்படும் தீவனத்தில் வைக்கோல் முக்கியப் பங்கு வகிக்கிறது. டெல்டா மாவட்ட ங்களில் பாரம்பரியமாக நெல் பயிரிடப்பட்டு வைக்கோல் முக்கிய உலர் தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.
 தற்போது நிலவி வரும் வறட்சியான சூழ்நிலையில் தேவைக்கும், உற்பத்திக்கும் மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. இச்சூழலை சமாளிக்க காவிரி டெல்டா மாவட்டங் களான திருச்சி, திருவாரூர், நாகை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தீவன சோளப்பயிர் பயிரிட ரூ. 15 கோடி நிதி ஒதுக்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. 
 திருவாரூர் மாவட்டத்தில் 700 ஏக்கரில் தீவன சோளப்பயிர் பயிரிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கரில் தீவன சோளப்பயிர் சாகுபடிக்கு ஆகும் மொத்த செலவில் 50 சதவீதம் மானியத் தொகையாக உற்பத்தியாளருக்கு வழங்கப்படுகிறது. ஒரு பயனாளி குறைந்தப் பட்சம் அரை ஏக்கர் பயிரிட வேண்டும். நீர்ப்பாசன வசதி அவசியம் இருக்க வேண்டும். ஏக்கரில் சுமார் 10 டன் தீவனம் கிடைக்கும்.
 உற்பத்தி செய்யப்பட்ட தீவன சோளப்பயிரை தங்களது தேவைக்கு போக மீதமுள்ளவ ற்றை கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் மூலம் அதன் உறுப்பினர்களுக்கு விற்ப னை செய்ய வேண்டும். தீவனப்பயிர் உற்பத்தி செய்த பயனாளியிடமிருந்து வாங்கி அதனை 50 சதவீத மானியத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர் களுக்கு வழங்கப்படும்.
 எனவே நீர்ப்பாசன வசதியுடன் நிலம் உள்ள விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். விரும்புவோர் அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி விண்ணபித் துப் பயன்பெறலாம். திருவாரூர் மாவட்டத்துக்கு ரூ. 47.6 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. ஏக்கருக்கு மானியமாக ரூ. 6,440 வழங்கப்படுகிறது. 
கால்நடை தீவனப்பயிர் வளர்க்க மானியம் 
காஞ்சிபுரம்:கால்நடை தீவனப் பயிர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், 100 சதவீதம் மானியத்தில், தீவனப் புல் வளர்க்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசு சார்பில், விலையில்லா ஆடு மற்றும் கறவை மாடுகள் வழங்கப்படுகிறது. தற்போது, மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் வறண்டு காணப்படுகின்றன. விவசாய நிலங்களின் பரப்பளவு குறைந்துள்ளது. இதனால், கால்நடைகளுக்கு தீவனம் குறைந்து விட்டது.
கால்நடைகளுக்கு, பால்வளம் பெருக்க கூடிய கம்பு, நேப்பியர் ஒட்டுப்புல் ரகம் கோ-3 அல்லது கோ-4 உடன் முயல் மசால் அல்லது வேலி மசால், தானிய வகை தீவனப் பயிரான மக்காச்சோளம் போன்றவற்றுடன், அதிக புரத சத்து நிறைந்த, தீவன வகை தட்டைப்பயறு, போன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இதன் மூலம் கறவை மாடுகளின் பால் உற்பத்தியை பெருக்கலாம்.
இதற்காக மாவட்டம் முழுவதும் 50 ஏக்கர் பரப்பளவில், தீவனப் பயிர் பயிரிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு விவசாயிக்கு, 25 சென்ட் நிலம் இருந்தால் போதும். இந்த நிலத்தில் தீவனப் பயிர் பயிரிட, புல் விதை மற்றும் பண்ணை அமைப்பதற்காக, களை நிர்வாகம் மற்றும் தொழு உரம் வாங்க, 1,600 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
ஒரு ஏக்கராக இருந்தால், 6,400 ரூபாய் வழங்கப்படுகிறது. தீவனப் பயிர் பயிரிடும் விவசாயிகள், சம்பந்தப்பட்ட கால்நடைத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அனுகி, தீவனப் புல் வளர்க்க விண்ணப்பங்கள் பெறலாம்.
இது குறித்து, கால்நடைத்துறை உதவி இயக்குனர் ராஜன் சி ஆண்டனி கூறுகையில், ""தற்போது கால்நடைத்துறை சார்பில், கோ 1, கோ 2, கோ 3 ஆகிய ரக தீவனப் புல் விதைகள் வழங்கப்படுகிறது. இவற்றை பராமரிக்க, 100 சதவீதம் மானியம், அரசு வழங்குகிறது. பயன்பெற விரும்பும் கால்நடை விவசாயிகள் சம்பந்தப்பட்ட கால்நடை துறை உதவி இயக்குனர்களை அணுகி, தீவன வளர்ப்பில் புல் வகையை பயிரிடலாம்,'' என்றார்.
தீவனப் புல் பயிரிடுவதற்கு கோட்டங்கள் வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள நிலங்கள் விவரம்
கோட்டம் தீவனப் பயிர் பரப்பு
காஞ்சிபுரம் 20 ஏக்கர்
செங்கல்பட்டு 10 ஏக்கர்
மதுராந்தகம் 20 ஏக்கர்