யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.
50 சதவீத மானியத்தில் தீவன சோளப்பயிர் வளர்க்க விவசாயிகளுக்கு அழைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
50 சதவீத மானியத்தில் தீவன சோளப்பயிர் வளர்க்க விவசாயிகளுக்கு அழைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 28 ஜூலை, 2013

50 சதவீத மானியத்தில் தீவன சோளப்பயிர் வளர்க்க விவசாயிகளுக்கு அழைப்பு


திருவாரூர் மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் தீவன சோளப் பயிர் பயிரிட விவசாயிகள் முன்வரலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் சி. நடராசன். 
 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கால்நடைகளுக்கு வழங்கப்படும் தீவனத்தில் வைக்கோல் முக்கியப் பங்கு வகிக்கிறது. டெல்டா மாவட்ட ங்களில் பாரம்பரியமாக நெல் பயிரிடப்பட்டு வைக்கோல் முக்கிய உலர் தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.
 தற்போது நிலவி வரும் வறட்சியான சூழ்நிலையில் தேவைக்கும், உற்பத்திக்கும் மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. இச்சூழலை சமாளிக்க காவிரி டெல்டா மாவட்டங் களான திருச்சி, திருவாரூர், நாகை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தீவன சோளப்பயிர் பயிரிட ரூ. 15 கோடி நிதி ஒதுக்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. 
 திருவாரூர் மாவட்டத்தில் 700 ஏக்கரில் தீவன சோளப்பயிர் பயிரிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கரில் தீவன சோளப்பயிர் சாகுபடிக்கு ஆகும் மொத்த செலவில் 50 சதவீதம் மானியத் தொகையாக உற்பத்தியாளருக்கு வழங்கப்படுகிறது. ஒரு பயனாளி குறைந்தப் பட்சம் அரை ஏக்கர் பயிரிட வேண்டும். நீர்ப்பாசன வசதி அவசியம் இருக்க வேண்டும். ஏக்கரில் சுமார் 10 டன் தீவனம் கிடைக்கும்.
 உற்பத்தி செய்யப்பட்ட தீவன சோளப்பயிரை தங்களது தேவைக்கு போக மீதமுள்ளவ ற்றை கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் மூலம் அதன் உறுப்பினர்களுக்கு விற்ப னை செய்ய வேண்டும். தீவனப்பயிர் உற்பத்தி செய்த பயனாளியிடமிருந்து வாங்கி அதனை 50 சதவீத மானியத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர் களுக்கு வழங்கப்படும்.
 எனவே நீர்ப்பாசன வசதியுடன் நிலம் உள்ள விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். விரும்புவோர் அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி விண்ணபித் துப் பயன்பெறலாம். திருவாரூர் மாவட்டத்துக்கு ரூ. 47.6 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. ஏக்கருக்கு மானியமாக ரூ. 6,440 வழங்கப்படுகிறது.