யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

சனி, 27 ஜூலை, 2013

மனதை லேசாக்கும் அலங்கார புறாக்கள்!
''உறையூர் வாங்க... இங்கே புறா கார்த்திகேயன்னு ஒருத்தர் இருக்கார்...'' என்று வாசகி உமா 'வாய்ஸ் நாப்’பில் அழைத்த அடுத்த அரை மணி நேரத்தில் நாம் அங்கு இருந்தோம். வீட்டில் நுழையும் முன்னரே படபடவெனச் சிறகடித்து, ஒலி எழுப்பி நம்மை வரவேற்றன விதவிதமான அலங்காரப் புறாக்கள்.
 
'அலங்கார மீன், அலங்காரப் பறவை, உயர் சாதி நாய்கள் வளர்ப்புபோல் அலங்காரப் புறா வளர்ப்பும் அதிகரித்துவருகிறது. இந்த அலங்காரப் புறாக்கள்,  400-ல் இருந்து  1,50,000 வரை சந்தையில் கிடைக்கின்றன' என்று பேச்சை ஆரம்பித்தார் கார்த்தி கேயன்.
கார்த்திகேயனிடம் 20-க்கும் மேற்பட்ட வகைகளில் அலங்காரப் புறாக்கள் உள்ளன. சைனீஸ் அவுல், ஜெர்மன் நன், பிரெஞ்ச் மோதினா, இங்கிலீஷ் மேக் என வெளிநாட்டு வகைப் புறாக்களுடன் ரோமர், முஸ்கி, டிரம்பட், பேன் டைல், சுபாஷ், பொகாரோ, எக்ஸிபிஷன் ரோமர், கிங் என இந்திய வகைப் புறாக்களும்  இவரிடம் வளர்கின்றன. இந்தப் புறாக்களைச் சென்னை, பெங்களூரு, மதுரை தூத்துக்குடி எனப் பல்வேறு ஊர்களில் இருந்து வாங்கி  வந்து வளர்த்துவருகிறார்.
'என்னுடைய தாத்தா ரெங்கையா புறா வளர்ப்பதை 50 ஆண்டுகளுக்கு முன்பே பொழுதுபோக்காக ஆக்கிக்கொண்டவர். அவர் பந்தயப் புறாக்களையும் சாதாரணப் புறாக்களையும் வளர்த்துவந்தார். தாத்தாவுக்குப் பிறகு அப்பா ராமசாமி, அவருக்குப் பிறகு நான் என, மூன்று தலைமுறையாகப் புறா வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறோம். நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக அலங்காரப் புறாக்கள் வளர்ப்பு மற்றும் விற்பனையில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறேன். இப்போது இது நமக்குப் பொழுதுபோக்கு இல்லை; பொருளாதார ஆதாரமாகவே மாறிவிட்டது'' என்கிற கார்த்திகேயன், 'புறாக்களைப் பார்க்கும்போதே மனதில் ஒரு நிம்மதியும் அமைதியும் உருவாகும்' என்கிறார் பெருமிதம் பொங்க.
புறாக்கள் மென்மையான சுபாவம் கொண்ட பறவைகள். சிறிய அதிர்ச்சியைக்கூட அவற்றால் தாங்கிக்கொள்ள முடியாது. கழுகு, காகம் போன்ற சக பறவைகளே இவற்றை உணவாக்கியும் கொள்வதால், புறா இனம் அருகிவருகிறது. ரோமர் வகைப் புறாக்களிடம் குழந்தைப் பராமரிப்புகுறித்த கவனம் அதிகம். அதனால் உயர் வகை புறா முட்டைகளை அடுக்கிவைத்து ரோமர் புறாக்களை அடைகாக்க வைத்து குஞ்சுகளைப் பொரிக்கச் செய்கின்றனர். இடி, மின்னல், வெடிச் சத்தம், புயல், மழை, கடும் பனி, அதிக வெயில் இவற்றால் அடைகாக்கப்படும் முட்டைகள், குஞ்சு பொரிக்காமல் கூழாகிவிடுமாம். போராட்டத் துக்குப் பிறகே ஒரு அலங்காரப் புறா, முட்டையில் இருந்து குஞ்சாக வெளிவருகிறது.
'இந்த அலங்காரப் புறாக்கள் எளிதில் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்பும் கொண்டவை. அதனால் கவனமாகப் பராமரிக்க வேண்டும். வாரம் இருமுறை புறாக்களின் மீது வெயில் படுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவற்றின் மீது தொற்றுண்ணிகள் பரவாமல் தடுக்க முடியும். புறாக் கூண்டு, அவை உலவும் இடங்கள், உணவு, தண்ணீர் பாத்திரங்களை வாரத்துக்கு ஒருமுறையாவது சுத்தம் செய்யத் தவறக் கூடாது' என்று புறாப் பராமரிப்புகுறித்து ஆர்வமுடன் விளக்குகிறார் கார்த்திகேயன்.
கார்த்திகேயனிடம் உள்ள டிரம்பட் வகையைச் சேர்ந்த புறாவின் சத்தமே டிரம்பட் வாசிக்கும்போது எழும் ஒலிபோல் இருக்கிறது. பிரெஞ்ச் மோதினா வகை புறா, கோழி போன்ற வடிவத்தில் இருக்கிறது. சைனீஸ் அவுல் புறாவின் கண்கள் பெரிதாகவும் மூக்கு மடங்கியும், சுபாஷ் வகை புறாக்கள் தினமும் இரண்டுமுறை குளித்து எப்போதும் பளிச் என்றும் காணப்படுகின்றன. இந்தியன் ஃபேன் டைல் வகை அவ்வப்போது மயில்போலத் தோகையை விரித்து ஆடுவதுபோல் சிறகை விரித்து உலவிக்கொண்டு இருக்கிறது. அவற்றைப் பார்க்கும்போதே மனம் லேசாகிறது. நமக்கும் சிறகு முளைக்கிறது. கவலைகளை மறந்து அந்தப் புறாக்களோடு நமது மனதும் சேர்ந்து பறக்கிறது!''
-அ.சாதிக்பாட்சா 
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

வியாழன், 25 ஜூலை, 2013

நல்ல லாபம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு!


நாட்டுக் கோழி வளர்ப்பு, கறிக்கோழி வளர்ப்பு, வான்கோழி வளர்ப்பு, 
காடை வளர்ப்பு, அலங்காரக் கோழி வளர்ப்பு ஆகியவற்றில் பெரும் இலாபம் சம்பாதிக்க வழிகாட்டுகிறது. 
அங்கீகரிக்கப்பட்ட நாட்டுக்கோழிகள் 
யாவை?  சிறந்த முட்டைக் கோழியைத் 
தேர்வு செய்வது எவ்வாறு? எந்த வகை 
நாட்டுகோழியில் சுவை அதிகம்? எந்த 
நாட்டுக்கோழியில் மருத்துவக் குணம் 
அமைந்துள்ளது? நாட்டுக்கோழிகளைப் 
பண்ணை முறையில் வளர்த்து இலாபம் 
ஈட்ட முடியுமா? மருத்துவக் குணம் உள்ள 
கோழிகள் இந்தியாவில் கிடைக்கின்றனவா? 
 
நாட்டுக்கோழியிடும் முட்டைக்கும், 
வெள்ளை முட்டைக்கும் உள்ள வித்தியாசம்? 
அடைக்கு வைக்கும் முட்டைகள் அனைத்தும் 
ஏன் குஞ்சு பொரிப்பதில்லை? 
நாட்டு முட்டையில் சத்து அதிகமா, 
வெள்ளை முட்டையில் சத்து அதிகமா? 
பழுப்பு நிற முட்டைகள் ஏன் அதிக விலையில் 
விற்கப்படுகின்றன? 
 
கோழிகளுக்கு நோய் வரக் காரணம் என்ன? 
நோய் வராமல் தடுக்க வழி உண்டா? 
அலங்காரக் கோழிகள் என்றால் என்ன? 
சமச்சீர் கலப்புக்கோழித் தீவனம் என்றால் 
என்ன? கோழிப்பண்ணையில் அதிக 
செலவைக் குறைக்க வழி உண்டா? 
சமச்சீர் கலப்புக்கோழித் தீவனம் நாமே
தயாரிக்க முடியுமா? கோழிகள் தோல் 
முட்டையிடுவதன் காரணம் என்ன? 
என்பனபோன்ற மேலும் பல 
வினாக்களுக்கு விடை தருகிறது இந்நூல்!
 
இந்த நூல் வேண்டுவோர், உடனே தொடர்பு கொள்க.மின்னஞ்சல்:  blackholemedia@gmail.com 
செல்பேசி:   +91 9600123146,       
விலை ரூ-150/-
நூலாசிரியர் முனைவர்.கு.நாகராசன் பற்றி...
இவர் தமிழ்நாடு கால்நடை மருத்துவ 
அறிவியல் பல்கலைக் கழகத்தின் 
அங்கமான கோழியின உற்பத்தி மற்றும் 
மேலாண்மை நிலையத்தில் 
பணியாற்றியவர். தற்பொழுது சென்னை 
கால்நடை மருத்துவக் கல்லூரியில் 
துணைப் பேராசிரியராகப் பணி செய்து 
வருகிறார். 
சமீபத்தில் உலகையே பீதியில் ஆழ்த்திய 
பன்றிக்காய்ச்சல் நோயை இந்தியப் 
பன்றிகளில் முதன்முதலில் கண்டறிந்து 
அந்நோய் மேலும் பரவாமல் தடுக்கும் 
உத்திகளைக் கூறியுள்ளார். அதற்காக 
முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் 
இவர் அறிவியல் சார்ந்த பல ஆராய்ச்சி 
மற்றும் பொதுக் கட்டுரைகளை உலகப் 
பிரசித்திப் பெற்ற ஆராய்ச்சி நூல்களில் 
எழுதியுள்ளார். நாட்டுக் கோழி வளர்ப்பு, 
கறிக்கோழி வளர்ப்பு, வான்கோழி வளர்ப்பு, 
காடை வளர்ப்பு, அலங்காரக் கோழி 
வளர்ப்பு ஆகியவற்றைக் குறித்து 
வானொலி மற்றும் தொலைக் காட்சி 
நிகழ்ச்சிகளில் மக்களுக்கு வழங்கியுள்ளார். 
மேலும் இந்திய அரசாங்கத்தின் பல 
விருதுகளைப் பெற்றுள்ளார்.
 
நூல் குறித்து தினத்தந்தி (7.03.2012) செய்தித்தாளில் வந்த விமர்சனம்:
நல்ல லாபம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு
நாட்டுக்கோழி வளர்ப்பு, கறிக்கோழி வளர்ப்பு, வான்கோழி வளர்ப்பு, காடை வளர்ப்பு, அலங்காரக்கோழி வளர்ப்பு  ஆகியவற்றின் மூலம் பெரும் லாபம் ஈட்ட முடியும் என்பதையும், நாட்டுக்கோழி வகைகள், கோழிகளுக்கு வரும் நோய்கள், அதைத் தடுக்கும் முறைகள் ஆகியவற்றையும் இந்த நூலில் கால்நடை மருத்துவக் கல்லூரி துணைப் பேராசிரியர் முனைவர் கு.நாகராசன் விரிவாக விளக்கியுள்ளார்.
இந்த நூல், கோழி வளர்ப்பில் ஈடுபட விருப்பம் உள்ளவர்களுக்கு சிறந்த கையேடு.
 
நூல் குறித்து தினமணி (12-03-2012) செய்தித்தாளில் வந்த விமர்சனம்:
நாட்டுக்கோழி வளர்ப்பது மிகவும் குறைந்து விட்ட காலத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பதனால் இலாபம் கிடைக்கும் என்று கூறும் நூல். இந்தியாவில் என்னென்ன கோழியினங்கள் உள்ளன? நாட்டுக்கோழி என்று எந்த வகைக்கோழிகளைக் குறிப்பிடுகிறோம்? கோழிகளுக்கு வரும் நோய்கள் எவை? அவற்றை எவ்வாறு தீர்ப்பது? கோழிகளுக்கு எப்படிப்பட்ட உணவுகள் தர வேண்டும்? என்பன போன்ற விவரங்களை மிகவும் சுவாரஸ்யமாகவும், தெளிவாகவும் கூறும் நூல். நாட்டுக்கோழி வளர்ப்புடன் கூட, கூஸ் வாத்து வளர்ப்பு, வான்கோழி வளர்ப்பு, ஜப்பானியக்காடை வளர்ப்பு, அலங்காரக் கோழி வளர்ப்பு பற்றிய கட்டுரைகளும் உள்ளன. கோழி வளர்ப்பைப் பற்றிய அறிவியல்பூர்வமான தகவல்களைச் சொல்லும் இந்நூல், கோழிகளின் மீது, ஆசிரியருக்கு உள்ள ஈடுபாட்டையும், அன்பையும் வெளிப்படுத்துவது சிறப்பு.