யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.
முட்டைகளை குஞ்சு பொரிக்கச் செய்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முட்டைகளை குஞ்சு பொரிக்கச் செய்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 11 மே, 2013

செயற்கை முறையில் நாட்டுக் கோழி முட்டைகளை குஞ்சு பொரிக்கச் செய்தல்



            1. கிராமப் பகுதிகளில் எளிதாக கிடைக்கும் அட்டைப்பெட்டிஅல்லது சாந்துச்சட்டி அல்லது பழைய மண்பானை ஆகியவற்றில்ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து அதனுள் பாதி அளவிற்கு அரிசித்தவிடு அல்லது மணலை நிரப்பவும்.
            2. இவ்வாறு நிரப்பப்பட்ட அரிசித் தவிடு அல்லது மணலின் மீதுகுஞ்சு பொரிக்க வேண்டிய கோழி முட்டைகளை வைக்கவும்.
            3. வட்டத்தட்டினுள் பொருத்தப்பட்ட 15 வாட் முதல் 40 வாட்வரையிலான மின்சார பல்பினை தவிடு அல்லது மணலின் மீதுபரப்பப்பட்ட முட்டைகளின் மேல் சீரான வெப்பம் பரவத்தக்க வகையில்தொங்கவிடவும்.
            4. 100 டிகிரி பார்ஹீன் அளவு சீரான வெப்பம் தரத்தக்க வகையில்மின்சார பல்புக்கும்கோழி முட்டைகளுக்கும் இடையே உள்ள தூரத்தைஅவ்வப்போது தேவைக்கேற்ப மாற்றி அமைத்துக்கொள்ளவும்.
            5. உடல் வெப்ப நிலையைக் கணக்கிடக்கூடியவெப்பநிலைமானியை பயன்படுத்தி கோழி முட்டையின் மீது சீரானவெப்பம் பரவச் செய்யும் வகையில் கண்காணித்துக்கொள்ளலாம்.
            6. முட்டைகளை முதல் நாள் முதல் 17வது நாள் வரை ஒருநாளைக்கு 3 முறை வீதம் அதாவது 8 மணி நேரத்திற்கு ஒருமுறைதிருப்பி விடவேண்டும்.
            7. 18வது நாள் முட்டைகளைத் திருப்பி விடுவதை நிறுத்திவிடவேண்டும்.
            8. 18வது நாள் முதல் ஈரப்பதம் 80% வரை தேவைப்படுவதால் வெதுவெதுப்பான நீரில் நனைத்த பருத்தி துணியை முட்டைகளின்மீது  1நிமிடம் பரப்பி விடவும்இவ்வாறு 18 வது நாள் முதல் 22வது நாள் வரைஒரு நாளைக்கு 3 முறை செய்தால் குஞ்சு பொரிப்புத் திறன் நன்குஇருக்கும்.
            9. மின்சாரத் தடை ஏற்பட்டு வெகு நேரம் ஆகிவிட்டால் சற்றே சூடுசெய்யப்பட்ட தவிட்டின் மூலம் முட்டைகளை மூடி வைத்து விடவும்.
            10. இந்த எளிய முறையை வாத்துவான் கோழிகினிக் கோழிமற்றும் காடை முட்டைகளை பொரிக்கச் செய்யவும் பயன்படுத்தலாம்

நன்மைகள்:
            1. அடைக்கோழிகள் இல்லாமல் அடைமுட்டைகளை அதிகஅளவில் குஞ்சு பொரிக்க செய்ய இயலும்.
            2. அடைக்கோழிகள் அடை அமரும் குணம் விரைவில் மாறிமுட்டையிட தொடங்கும்.
            3. வாத்து முட்டைகளை குஞ்சு பொரிக்க அடைக்கோழிக்காகஅலைய வேண்டியதில்லை.
            4. இவ்வாறு செயற்கை முறையில் குஞ்சு பொரிக்கச் செய்தால்ஒரே நேரத்தில் நாட்டுக் கோழிகளின் எண்ணிக்கையையும் பெருகச்செய்யலாம்.