யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

புதன், 14 மே, 2014

கோழிகளுக்கு கழிச்சல் நோய் தடுப்பூசி

திண்டுக்கல் மாவட்டத்தில் 3¼ லட்சம் கோழிகளுக்கு கழிச்சல் நோய் தடுப்பூசி
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு கால்நடை ஆஸ்பத்திரிகள் மூலம் 3¼ லட்சம் கோழிகளுக்கு கழிச்சல் நோய் தடுப்பூசி போடப்படுகிறது.
கோழி வளர்ப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் கால்நடைகள் வளர்ப்பு முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இதில் கிராமங்கள் மட்டுமின்றி நகரங்களிலும் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் வீடுகளில் சுமார் 3¼ லட்சம் நாட்டுக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
மேலும், இறைச்சி கோழி பண்ணைகளும் பெருமளவில் செயல்பட்டு உள்ளன. இந்த பண்ணைகளில் மட்டும் 25 லட்சம் கோழிகள் வளர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அதன்படி மாவட்டம் முழுவதும் மொத்தம் 28¼ லட்சம் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
கழிச்சல் நோய்
இதர வளர்ப்பு பிராணிகள் போல் இல்லாமல் கோழிகளுக்கு நோயை தாங்கும் சக்தி மிகவும் குறைவு ஆகும். எனவே, நோய் தாக்கினால் கோழிகள் எளிதில் இறந்து விடும் வாய்ப்பு உண்டு. இதில் கழிச்சல் நோய் கோழிகளை அதிகம் தாக்கும் நோய்களில் ஒன்றாகும்.
ஒருவித வைரஸ் மூலம் பரவும் இந்த நோய் தாக்கும் கோழிகள் இறந்து விடுவதும் உண்டு. ஆனால், தடுப்பூசி போடுவதன் மூலம் கழிச்சல் நோயில் இருந்து கோழிகளை காப்பாற்ற முடியும். எனவே, மாவட்டம் முழுவதும் வீடுகளில் வளர்க்கப்படும் 3¼ கோழிகளுக்காக அரசு கால்நடை மருத்துவமனைகளில் கழிச்சல் நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தடுப்பூசி
இதற்காக கால்நடை பராமரிப்பு துறை சார்பில் அனைத்து கால்நடை ஆஸ்பத்திரிகள், கிளை நிலையங்களில் கழிச்சல் நோய் தடுப்பூசி இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. இதில் கால்நடை ஆஸ்பத்திரிகளில் ஒவ்வொரு வாரமும், கிளை நிலையங்களில் 2 வாரத்திற்கு ஒருமுறையும் சனிக்கிழமை தினத்தில் தடுப்பூசி போடப்படுகிறது.
கோழிகளுக்கு ஒரு முறை தடுப்பூசி போடும்பட்சத்தில் அடுத்த ஓராண்டுக்கு நோய் தாக்குதல் இருக்காது. எனவே, கோழி வளர்ப்போர் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிகளை தொடர்பு கொண்டு கோழிகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம், என்று உதவி இயக்குனர் சத்தியநாராயணன் தெரிவித்தார்.


திண்டுக்கல் மாவட்டத்தில் 3¼ லட்சம் கோழிகளுக்கு கழிச்சல் நோய் தடுப்பூசி

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு கால்நடை ஆஸ்பத்திரிகள் மூலம் 3¼ லட்சம் கோழிகளுக்கு கழிச்சல் நோய் தடுப்பூசி போடப்படுகிறது.

கோழி வளர்ப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் கால்நடைகள் வளர்ப்பு முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இதில் கிராமங்கள் மட்டுமின்றி நகரங்களிலும் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் வீடுகளில் சுமார் 3¼ லட்சம் நாட்டுக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

மேலும், இறைச்சி கோழி பண்ணைகளும் பெருமளவில் செயல்பட்டு உள்ளன. இந்த பண்ணைகளில் மட்டும் 25 லட்சம் கோழிகள் வளர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அதன்படி மாவட்டம் முழுவதும் மொத்தம் 28¼ லட்சம் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

கழிச்சல் நோய்

இதர வளர்ப்பு பிராணிகள் போல் இல்லாமல் கோழிகளுக்கு நோயை தாங்கும் சக்தி மிகவும் குறைவு ஆகும். எனவே, நோய் தாக்கினால் கோழிகள் எளிதில் இறந்து விடும் வாய்ப்பு உண்டு. இதில் கழிச்சல் நோய் கோழிகளை அதிகம் தாக்கும் நோய்களில் ஒன்றாகும்.

ஒருவித வைரஸ் மூலம் பரவும் இந்த நோய் தாக்கும் கோழிகள் இறந்து விடுவதும் உண்டு. ஆனால், தடுப்பூசி போடுவதன் மூலம் கழிச்சல் நோயில் இருந்து கோழிகளை காப்பாற்ற முடியும். எனவே, மாவட்டம் முழுவதும் வீடுகளில் வளர்க்கப்படும் 3¼ கோழிகளுக்காக அரசு கால்நடை மருத்துவமனைகளில் கழிச்சல் நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தடுப்பூசி

இதற்காக கால்நடை பராமரிப்பு துறை சார்பில் அனைத்து கால்நடை ஆஸ்பத்திரிகள், கிளை நிலையங்களில் கழிச்சல் நோய் தடுப்பூசி இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. இதில் கால்நடை ஆஸ்பத்திரிகளில் ஒவ்வொரு வாரமும், கிளை நிலையங்களில் 2 வாரத்திற்கு ஒருமுறையும் சனிக்கிழமை தினத்தில் தடுப்பூசி போடப்படுகிறது.

கோழிகளுக்கு ஒரு முறை தடுப்பூசி போடும்பட்சத்தில் அடுத்த ஓராண்டுக்கு நோய் தாக்குதல் இருக்காது. எனவே, கோழி வளர்ப்போர் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிகளை தொடர்பு கொண்டு கோழிகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம், என்று உதவி இயக்குனர் சத்தியநாராயணன் தெரிவித்தார்.

புதன், 7 மே, 2014

கால்நடை மருத்துவப் படிப்பு

கால்நடை மருத்துவப் படிப்பு: மே 12 முதல் விண்ணப்பம் விநியோகம்
இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மே 12-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலைய முதல்வர் கே.ஏ.துரைசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ், 2014-15-ஆம் ஆண்டு அளிக்கப்படும் கால்நடை மருத்துவம், உணவுத் தொழில்நுட்பம், கோழியின உற்பத்தித் தொழில்நுட்பப் படிப்புகளுக்கான இளநிலைப் பிரிவில் சேர விண்ணப்பப் படிவங்கள் நாமக்கல்லில் திருச்சி சாலையிலுள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் வருகிற 12-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும்.
விண்ணப்பப் படிவத்துக்கான கட்டணம் ரூ.600. தலித், பழங்குடியின மாணவர்கள் ரூ.300 மட்டும் செலுத்தினால் போதும். இந்தக் கட்டணத்தை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கிளையில் செலுத்தி ரசீது பெற்று, அதனுடன் விண்ணப்பக் கடித்தை இணைத்து அளித்து விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
மே 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தைப் பெற்று, ஜூன் 2-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தில் அளிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவங்கள் குறித்த வழிமுறைகள், இதர விவரங்களையும் www.tanuvas.ac.inugadmission என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04286- 266491, 220650 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.