யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

ஞாயிறு, 22 ஜூன், 2014

சோலார் பம்பு செட் அமைக்க தமிழக அரசு 80% மானியம்!!!-----

இந்த செய்தியை அதிக அளவில் பகிர்ந்து விவசாயிகளுக்கு தெரிய படுத்துங்கள் நண்பர்களே!!!
சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு தமிழக அரசு மானியம் அளிக்க முடிவெடுத்துள்ளது. தங்களது நிலங்களில் உள்ள ஆழதுளை கிணறுகளிலிருந்து நீர் இறைக்க தற்போது மின்சாரத்தையே நம்பி இருக்கும் விவசாயிகள் இந்த திட்டத்திற்கு மாறிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ளும் விவசாயிகளுக்கு 80 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். 20 சதவிகித தொகையை மட்டும் விவசாயி தனது பங்களிப்பாக செலுத்தினால் போதும்.
ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் வைத்துள்ள விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். ஆழ்துளை கிணற்றில் அமைக்க ரூ.4,39,950, திறந்த வெளி கிணற்றில் அமைத்துக் கொள்ள ரூ.5,01,512 எனவும் விலை நிர்ணயித்துள்ளது. இந்த தொகையில் 20 சதவிகிதம் மட்டும் விவசாயிகள் கட்டினால் போதுமானது.
தவிர இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம, தெளிப்பு நீர் பாசனம் என்கிற முறைகளை மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கு ஏற்கனவே அரசு மானியம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பயன்பெற விரும்பும் விவசாயிகள் அதற்கான ஆதாரங்களுடன் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, அல்லது வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை அணுக வேண்டும். அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து அனுமதி அளிப்பார்கள் என தெரிவிக்கபட்டுள்ளது.
மின்வெட்டு பிரச்னையிலிருந்து இனி விவசாயயிகளுக்கு விடுதலைதான்.
கூடுதல் தகவல்களுக்கு:
Agricultural Engineering Department,
487, Anna Salai, Nandanam,
Chennai - 600 035.
Phone - 044 - 2435 2686, 044- 2435 2622
email : aedce.tn@nic.in
http://www.aed.tn.gov.in/SS_Solar_pumps.htm
http://www.aed.tn.gov.in

புதன், 18 ஜூன், 2014

நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

நாமக்கல்லில் ஜூன் 25ஆம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி
நாட்டுக்கோழி வளர்ப்பும் மூலிகை முதலுதவி மருத்துவமும் குறித்த ஒருநாள் இலவச பயிற்சி வகுப்பு நாமக்கல்லில் ஜூன் 25ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.
நாமக்கல் திருச்சி சாலை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் அன்று நண்பகல் 1.30 மணிக்கு நடக்க உள்ள இந்த பயிற்சி வகுப்பில், நாட்டுக்கோழி வளர்ப்பில் மூலம் நல்ல வருவாய் ஈட்டுவது தொடர்பான அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளன.
இந்த பயிற்சியில் பண்ணையாளர்கள், ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 04286 -233230 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம் என கோழிகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மைய தலைவர் பா.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் ஜூன் 25ஆம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி 

நாட்டுக்கோழி வளர்ப்பும் மூலிகை முதலுதவி மருத்துவமும் குறித்த ஒருநாள் இலவச பயிற்சி வகுப்பு  நாமக்கல்லில் ஜூன் 25ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.

நாமக்கல் திருச்சி சாலை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் அன்று நண்பகல் 1.30 மணிக்கு நடக்க உள்ள இந்த பயிற்சி வகுப்பில், நாட்டுக்கோழி வளர்ப்பில் மூலம் நல்ல வருவாய் ஈட்டுவது தொடர்பான அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளன.

இந்த பயிற்சியில் பண்ணையாளர்கள், ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 04286 -233230 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம் என கோழிகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மைய தலைவர் பா.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.