யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

ஞாயிறு, 19 மே, 2013

அசோலா

கோழித்தீவனமாக அசோலா: அசோலா எனப்படும் பெரணி வகை நீர்த்தாவரம் கோழிக்குஞ்சுகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் 20 சதவீதம் வரை சேர்த்தால் குஞ்சுகள் நன்கு வளர்ந்து நல்ல எடையுடன் காணப்படும். கோழிகளுக்கு அசோலாவை உணவாக இடுகின்றபொழுது மஞ்சள்கருவானது நல்ல தேர்ச்சியுடன் உருவாகிறது. மேலும் கோழிகளில் நோய் எதிர்ப்புத்தன்மை இருப்பதாகவும் திகழ்கிறது.

மாட்டுத்தீவனமாக அசோலா: அசோலாவை கால்நடைகளுக்கு தீவனமாகவோ,பச்சையாகவோ அல்லது பதப்படுத்தியோ பயன்படுத்தலாம். அசோலாவில் அதிக புரதச்சத்தும்கொழுப்புச்சத்தும் உள்ளது. மேலும் இதில் நார்ப்பொருட்கள் குறைவு. கால்நடைகளின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து அமினோ அமிலங்களையும் அசோலா கொண்டுள்ளது. அசோலாவை உப்புடன் சேர்த்து பன்றிகளுக்கு அளித்தால் பன்றிகள் அசோலாவை நன்றாக உட்கொண்டு அதிக எடையுடன் திகழ்கின்றன. மேலும் இறைச்சியின் தன்மையும் நன்றாக இருக்கிறது. கால்நடைகளுக்கு அசோலாவை கோதுமை வைக்கோலுடன் சேர்த்து அளித்தால் கால்நடைகளின் எடையும் வளர்ச்சியும் அதிகரிக்கிறது.

மீன் வளர்ச்சிக்கு அசோலா: மீன்கள் மற்ற தீவனத் தாவரங்களைவிட அசோலாவை விரும்பி உண்கின்றன. மீன்கள் வளரும் குட்டைகளில் ஒரு ஓரத்தில் மிதக்கும் மூங்கில் கழிவுகளைப்போட்டு அசோலாவை வளர்க்க வேண்டும். மீன்கள் தேவைப்படும் சமயத்தில் வந்து அசோலாவை உண்டுவிட்டு சென்றுவிடும். மேலும் அசோலாவை காயவைத்து பொடி செய்து தண்ணீரில் தெளித்துவிடலாம்.

நெல் வயல்களில் அசோலாவும் மீன் வளர்த்தலும்:தண்ணீர் ஓரளவு தேங்கி நிற்கும் நெல் வயல்களில் மீன் வளர்த்து அதிக லாபம் பெறலாம். அசோலாவை மீன் வளர்க்கும் வயலில் வளர்ப்பதால் அசோலா மீன்களுக்கு உணவாகப் பயன்படும். நெல் வயல்களில் வரப்பு ஓரத்தில் 1.5 மீட்டர் அளவுக்கு0.50 மீட்டர் ஆழத்திற்கு வயலின் இரண்டு வரப்பு ஓரங்களிலும் பள்ளம் செய்து மற்ற இடங்களில் வயலைத் தயாரித்து நடவு செய்ய வேண்டும். வயலில் நெற்பயிர் வேர் பிடித்தபிறகு தண்ணீர் 7.5 செ.மீ. முதல் 10 செ.மீ. அளவு தேங்கும் அளவுக்கு பராமரிக்க வேண்டும். நடவு நட்ட 7வது நாள் ஒரு ஏக்கருக்கு200 கிலோ அளவு அசோலாவை தூவிவிட வேண்டும். அசோலா வளர்ந்து பெருக்கமடையும். நடவு நட்ட10 நாட்களில் ஏக்கருக்கு 2500-3000 மீன் குஞ்சுகள் வயலில் விடவேண்டும். அசோலாவைத் தனியாக பொடி செய்து தூவிவிடுவதன் மூலம் மீன்களுக்கு உணவாகப் பயன்படும். அசோலாவை பசுமையாக எடுத்து மாட்டுச்சாணத்துடன் 1:1 என்ற அளவில் சேர்த்து இரண்டு வாரம் மக்கவைத்து நெல்வயலில் இடுவதன் மூலம் மீன்களுக்கு உணவாகப் பயன்படும்.
100 கிலோ பசுமையான அசோலாவை 100 கிலோ பச்சைச் சாணம், 50 கிராம் சூப்பர் பாஸ்பேட்டுடன் கலந்து ஒன்று சேர்த்து குவியலாக வைத்து வாரத்திற்கு மக்கச்செய்து பிறகு அதில் 500 மி.கி. நீலப்பச்சைப்பாசி கலவையும் சேர்த்து மீன்களுக்கு உணவாக நெல்வயலில் இடவேண்டும். இவ்வாறு மீன்அசோலா இரண்டையும் வளர்ப்பதன்மூலம் மீன்கள் அசோலாவை உணவாக எடுத்துக்கொண்டு வளர்கின்றன. இதனால் மீன்களின் கழிவுப் பொருட்களும் நெற்பயிருக்கு பயன்படுகின்றன. இதன்மூலம் ஒரு ஏக்கருக்கு கிட்டத்தட்ட 150, 200 மீன்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் இதன்மூலம் அதிக வருமானம் பெறலாம். 

(தகவல்: ரா.ராஜேஷ்ந.ஜெய்வேல்வேளாண் நுண்ணுயிரியல் துறைதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்கோயம்புத்தூர்-641 003. 99448 93580)

தாய்லாந்து நிறுவனத்தின் தலைசிறந்த F1 ஹைபிரிடு விதைகள்: போர்டடோசூப்பர் குட்டை புடல்சிவப்பு சதை பப்பாளி ""சப்னா'', ""சாம்பல் பூசணி'' விதைகள் வாங்க அணுக வேண்டிய முகவரி: East West Seeds India Pvt. Ltd., Gut No.66, Village Narayanpur (BK), P.O., Waluj, Aurangabad 431 133. 98552 38393, 99656 23265.
-
டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

நவீன தொழில்நுட்பம் - அசோலா

அசோலா:

தண்ணீரில் வாழும் மிதவை வகை பெரணியாகும். தழைச்சத்தை நிலைநிறுத்தும் நீலப்பச்சைப் பாசியைக் கூட்டுவாழ்முறை நிலையில் கொண்டுள்ளது. இந்த பெரணி - பாசி கூட்டமைப்பில் உள்ள இரண்டும் ஒளிச்சேர்க்கையில் ஈடுபடும் உயிரினங்களாகும். நீலப் பச்சைப்பாசி காற்று மண்டலத்தில்இருக்கும் தழைச்சத்தையும் நிலைநிறுத்தும் திறன் கொண்டது.

சமீப காலமாக அசோலா ஒரு உன்னத கால்நடை கோழித் தீவனமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 25-30 சதம் புரதச்சத்து உள்ளது. கால்நடைகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள், பீட்டா கெரோட்டின் ஆகிய சத்துக்கள் உள்ளன. பீட்டாகெரோட்டின் நிறமி வைட்டமின் "ஏ' உருவாவதற்கு மூலப்பொருளாகும். இச்சத்து உள்ளதால் கோழிகளுக்கு நோய் எதிர்ப்புசக்தி அதிகரிப்பதால் அசோலா சாப்பிட்ட கோழியின் முட்டைகளை நாம் உட்கொள்வதால் கண் பார்வைக்கு உகந்தது.

அசோலா பெரணி அனபினை அசோலா என்ற பாசியை தன் இலையில் வைத்துக்கொண்டு அதற்கு பாதுகாப்பும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்கிறது. இதற்கு மாற்றாக பெரணி பாசியிடமிருந்து நிலைநிறுத்தப்பட்ட தழைச்சத்தையும் வளர்ச்சிக்கு உதவும் பொருட்களையும் எடுத்துக்கொள்கிறது. அசோலாவை தீவனமாகப் பயன்படுத்துவதால் நாள் ஒன்றுக்கு ஒரு கோழிக்கு அடர்தீவனம் செலவில் 20 பைசா சேமிக்கலாம் என்று ஆராய்ச்சி பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 அசோலாவை கால்நடைகளுக்கு தீவனமாக அளிப்பதால் பால் உற்பத்தி 15-20 சதம் அதிகரிப்பதுடன் பாலின் தரமும் மேம்படுகிறது. பாலின் கொழுப்புச் சத்து 10 சதம் வரை உயருகிறது. கொழுப்புச்சத்து இல்லாத திடப் பொருளின் (எஸ்என்எப்) அளவு 3 சதம் வரை கூடுகிறது. அசோலா இடப் பட்ட கோழியின் முட்டையின் எடை ஆல்புமின் குளோபுலின கரோட்டின் அளவு அடர்தீவனம் மட்டும் இடப்பட்ட கோழியின் முட்டையின் அளவைவிட அதிகமாக உள்ளது.



அசோலாவை உற்பத்தி செய்யும் முறை:

நிழற்பாங்கான இடத்தில் 10 அடி நீளம், 2 அடி அகலம், ஒரு அடி ஆழம் கொண்ட பாத்தி அமைக்கவும். பாத்தியின் அடித்தளத்தில் சில்பாலின் ஷீட்டை சீராக விரிக்க வேண்டும். இதன்மேல் 2 செ.மீ. அளவிற்கு தண்ணீர் ஊற்றியும் பின் பாத்தி ஒன்றுக்கு 100 கிராம் சூப்பர் பாஸ்பேட், 5 கிலோ பசுஞ்சாணம் கரைத்து இடவேண்டும். பின்னர் இப்பாத்தியில் உள்ள மண்ணை நன்கு கலக்குவதால் மண்ணின் சத்துக்கள் தண்ணீரில் கரைந்து அசோலாவிற்கு எளிதாக கிடைக்கச் செய்கிறது. 15 நாட்களில் ஒரு பாத்தியில் (10 x 2 x 1 அடி) 30 முதல் 50 கிலோ அசோலா தயாராகிறது. மூன்றில் ஒரு பங்கு அசோலாவை பாத்தியிலேயே விட்டுவிட்டு எஞ்சிய இரண்டாவது பகுதியை அறுவடை செய்யலாம். 10 நாட்களுக்கு ஒர முறை 5 கிலோ பசுஞ்சாணம் கரைப்பது நல்லது. அசோலாவை அறுவடை செய்து கால்நடை கோழிகளுக்கு சத்து நிறைந்த, சுவை மிகுந்த உணவாகப் பயன்படுத்தலாம்.



அசோலா பூச்சி நோய் கட்டுப்பாடு:

பொதுவாக அசோலாவை பூச்சி, நோய்கள் தாக்குவதில்லை. பாத்திகளில் அசோலாவின் அடர்த்தி அதிகமானால் பூச்சி, நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதிலிருந்து அசோலாவை பாதுகாக்க பாத்தியின் இருபுறமும் காற்று அதிகமாக புகாதவாறு தடுப்புகள் (அ) வலைகள் அமைக்க வேண்டும். பொதுவாக பூச்சித் தொல்லை வந்தால் 5 மிலி வேப்பெண்ணெயை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து அசோலா பாத்தியில் தெளிக்க வேண்டும்.


20 சதுர அடி அளவில் அசோலாவை வளர்க்க தேவையான பொருட்கள்:
அசோலா தாய்வித்து - 5 கிலோ, வளமான மண் 2 செ.மீ. சமமான அளவு, பசுஞ்சாணம் 5 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 100 கிராம், சில்பாலின் ஷீட் 20 சதுர அடி, தண்ணீர் 100 லிட்டர். 

நவீன முறையில் வெள்ளாட்டுக்கொட்டகை அமைப்பது எப்படி?


நமது நாட்டின் பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப உண்ணும் உணவில் புரதச்சத்தின் தேவையும் கூடிக் கொண்டே வருகிறது. இறைச்சி மற்றும் பால் உற்பத்தியை பெருக்குவதின் காரணமாக மக்களின் புரதத்தேவையை ஈடுசெய்ய முடியும். அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பி உண்ணப்படும் வெள்ளாட்டு இறைச்சியினை கவனத்தில் கொண்டு பார்த்தால் வெள்ளாட்டினை எண்ணிக்கையில் பெருக்க இயலாது. ஆனால் ஒவ்வொரு வெள்ளாட்டிலிருந்து கிடைக்கக்கூடிய இறைச்சி மற்றும் பாலின் அளவைக் கூட்டி அதன் உற்பத்தித் திறனை பன்மடங்கு அதிகரிக்கச் செய்வதே நமது குறிக்கோளாகும். இதற்கு அறிவியல் பூர்வமான பராமரிப்பு உத்திகளைக் கையாள வேண்டும்.

இதில் முக்கியமான ஒன்று வெள்ளாடுகள் தங்குவதற்கு கொட்டகை அமைப்பது ஆகும். மேய்ச்சல் நிலங்களின் பரப்பளவு சுருங்கிவரும் நிலையில் கொட்டில் முறையில்தான் வெள்ளாடுகள் வளர்க்கும் நிலை நம்மை நோக்கி வந்துகொண்டே இருக்கிறது. நல்ல முறையில் ஆட்டுக்கொட்டகை அமைத்தால் ஆடுகள் நலமாகவும் வளமாகவும் வளர்ந்து பெருகி நல்ல பலன் கொடுக்கும். இனி ஆட்டுக் கொட்டகையை அறிவியல் ரீதியாக எப்படி அமைப்பது என விரிவாக காண்போம்.
கொட்டகை அமைக்க இடம் தேர்வுசெய்தல்:கொட்டகையை மேடான இடத்தில் அமைக்க வேண்டும்.

மழைநீர் தேங்கிவிடாமல் வடிகால் உள்ள நிலமாக இருக்க வேண்டும். குடிநீர் வசதி உள்ள இடமாக இருக்க வேண்டும். மின்சார வசதி மற்றும் சாலை போக்குவரத்து இணைப்பு உள்ள இடமாக இருக்க வேண்டும். கொட்டகையை சுற்றி நிழல் தரும் மரங்கள் இருக்க வேண்டும். ஆடுகளுக்குத் தேவையான பசுந்தீவனப்பயிர் சாகுபடி செய்ய விளைநிலம் இருக்க வேண்டும்.
கொட்டகை அமைக்கும்போது கவனிக்க வேண்டியவை: கொட்டகையின் நீளவாக்கு கிழக்கு - மேற்கு திசையில் அமைய வேண்டும். இப்படி இருப்பதால் காலை - மாலை வேளையில் சூரியனின் இளங்கதிர் கொட்டகையினுள் விழும். உச்சி வெயிலின் வெப்பத்தாக்கம் இருக்காது.
பக்கவாட்டுச்சுவர்: கொட்டகையின் நான்கு பக்க சுவர்களும் ஒரு அடி உயரம் வரைதான் கல் கட்டுமானத்தில் இருக்க வேண்டும்.

இதற்கு மேல் கூரை கம்பி வலை அல்லது மூங்கில் தட்டிகளைக் கொண்ட அமைப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு பக்கவாட்டுச் சுவர் அமைப்பதினால் வெளிச்சமும் நல்ல காற்றோட்டமும் கொட்டகையின் உள்ளேஇருக்கும். மழைகுளிர் காலங்களில் குறிப்பாக இரவு நேரத்தில் பக்கவாட்டு திறந்தவெளியை பாலிதீன்கோணிப்பைகளை கொண்டு திரை அமைத்து மூடலாம்.
கூரை: சூரிய வெப்பத்தைக் குறைவாகக் கடத்தும் பொருட்களைக் கொண்டு கூரை வேயப்பட்டால் அதன் அடியில் உள்ள ஆடுகளுக்கு வெப்ப அழற்சி ஏற்படாது. மழைவரும் பொழுது ஆடுகள் மழையில் நனையாமலும் கூரைபாதுகாக்கும். சுட்ட களிமண் ஓடுகள்அலுமினியம் மற்றும் இரும்புத் தகடுகள்,ஆஸ்பெஸ்டாஸ்லைட்ரூப்பனை மற்றும் தென்னை ஓலைபோன்றவை கொண்டு கூரை அமைக்கலாம். கூரையின் நடு உச்சி தரையிலிருந்து 3.50 மீட்டர் உயரமும் பக்கவாட்டில் 2.5 மீட்டர் உயரமும் இருக்க வேண்டும். கூரையின் விளிம்பு சுவரிலிருந்து 45-60செ.மீ. வெளியே நீட்டிக்கொண்டிருக்கும்.
தரை: நமது தட்பவெப்பச் சூழலுக்கு செம்மண்சரளை மண் அல்லது கிணற்று மண் இதில் ஏதாவது ஒன்றை தரை மட்டத்திலிருந்து 45 செ.மீ. உரத்திற்குப் பரப்பி திமிசுக்கட்டையால் நன்கு இடித்து கடினமாக இறுகச் செய்யலாம். இவ்வாறு தரை இருப்பதனால் ஆடுகளின் சிறுநீரை உறிஞ்சிக் கொள்ளும். ஆட்டுப் புளுக்கையினை கூட்டிப்பெருக்கவும் எளிதாக இருக்கும். தரையை வருடத்திற்கு இரண்டுமுறை 15 செ.மீ. ஆழத்திற்கு சுரண்டி எடுத்துவிட்டு புதிய மண் கொட்டி பரப்பித் தரையை அமைக்க வேண்டும். கிருமிகள் மற்றும் உண்ணிகளை கட்டுப்படுத்த இது உதவும். மழை நாட்களில் வாரத்திற்கு இரண்டு முறை சுண்ணாம்புத்தூளை தரையில் தெளிக்க வேண்டும். தரையின் ஈரப்பதத்தை சுண்ணாம்பு ஈர்த்து உலரச் செய்வதோடு கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.


மரச்சட்ட மேடை வடிவ தரை: ஆட்டுக்குட்டிகளை மண் தரையில் விட்டு வளர்த்தால் மண் நக்குதல் பழகி ரத்தக்கழிச்சல் நோயால் இறப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பனி மற்றும் மழைக் காலத்தில் இரவு வேளையில் மண் தரை குளிர்வாக இருப்பதால் ஆட்டுக் குட்டிகள் குளிர் தாங்காமல் சளி பிடித்து இறந்துவிட வாய்ப்புகள் அதிகம். இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க ஆட்டுக்குட்டிகளை தரையில் விடாமல் மூன்று மாத வயதுவரை மரச் சட்டங்களினால் ஆன பரண்மீது விட்டு வளர்ப்பது நன்று. இம்மரச்சட்ட பரண் தரையிலிருந்து அடி உயரத்தில் இருக்க வேண்டும். இரு சட்டங்களுக்கு இடையே 1.5 செ.மீ. இடைவெளி இருக்க வேண்டும். இந்த சந்தில் அடியில் உள்ள எருவினை சேகரித்துக்கொள்ளலாம்.


மரச்சட்டங்களின் அகலம் மற்றும் தடிமண் (கனம்) முறையே 2-4 இன்ச்கள் மற்றும் 1-2 இன்ச் இருத்தல் நலம். தைல மரச்சட்டங்கள் பரண் அமைக்க ஏதுவானவை. தற்பொழுது நவீன முறையில் கொட்டகை அமைக்க மரச்சட்டங்களுக்கு மாற்றாக பிளாஸ்டிக்கினால் ஆன சட்டங்களைக் கொண்டும் ஆட்டுக்கொட்டகையில் தரை அமைக்கலாம். இவை சுத்தம் செய்ய எளிதாகவும் அதிக நாள் உழைக்கும் திறனும் கொண்டது.
தீவனப்பெட்டிகள்: அடர்தீவனம்உலர்தீவனம் மற்றும் பசுந்தீவனங்களை ஆடுகளுக்கு அளிக்கக்கூடிய வகையிலும் ஆடுகள் தின்னும்போது சேதாரம் இல்லாமல் இருக்க வேண்டியும் தீவனப்பெட்டிகள் இருக்க வேண்டும். மரப்பலகைதுத்தநாகத் தகடுகுறுக்கு வெட்டாக பிளக்கப்பட்ட பிளாஸ்டிக் டிரம்களைக்கொண்டு தீவனப்பெட்டிகளை உருவாக்கலாம். தீவனத்தைத் தரையில் போடக்கூடாது. ஆடுகள் குளம்புகள்சாணம்மூத்திரம் பட்ட தீவனத்தைச் சாப்பிடாது.

எனவே தீவனங்களைத் தீவனப்பெட்டியில் போடவேண்டும்.
மருந்துக்குளியல் தொட்டி: ஒட்டுண்ணிகளின் தாக்கத்திலிருந்து ஆடுகளைப் பாதுகாக்க குளியல் செய்வது அவசியம். 1.2x1x0.5 மீட்டர் கொள்ளளவு உள்ள குளியல் தொட்டியினை சிமென்ட் கான்கிரீட்டினால் கட்டவேண்டும். கழிவுநீர் வடிய தொட்டியின் அடிப்புறத்தில் துளை இருக்க வேண்டும். தொடர்பு கொள்ள வேண்டிய பண்ணைகள்: நித்தின் பார்ம் - 98422 18412, அம்பாள் ஆட்டுப்பண்ணை-99763 40337.